மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
ஏங்கண்ணு சவீதா டியர்
காலையில இருந்து அப்டேட் வருமான்னு பார்த்து பார்த்து பூவிழி பூத்து போனதுகப்புறம் பேயும் பிசாசும் ஜாகிங் வாக்கிங் போற நேரத்தில் அப்டேட் கொடுக்கிறீங்களே
இது நியாயமா? இது தர்மமா?
இப்பிடி மிட்நைட்லே அப்டேட் கொடுத்தால் எப்பிடி பயமில்லாமல் படிப்பது?
சீதாதேவிக்கு என்ன பயம்?
அவள் கழுத்தைப் பிடித்தது யாரு?
நாத்தனாரின் மகனா?
அது எப்படி அவன்(ள்) யாருன்னு சீதாவுக்கு தெரியாமலிருக்கும்?
ஒவ்வொரு தடவையும் உதிரனிடம் சினா என்ன விஷயம்ன்னு சொல்ல வரும் பொழுது சீதாம்மா ஏன் தடுக்கணும்?
சினமிகா பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தால் சினா சீதாவை நம்பலையோ?
மகன் மருமகளிடம் சீதா நடிக்கிறாளா?
கூடப் பிறந்தவங்களுக்கு வீட்டை கொடுக்காதேன்னு சொன்ன ராமசாமி புதையல் விஷயத்தை ஏன் சீதாவிடம் சொல்லவில்லை?
என்ன காரணம்?
வெளியில் உதிரன் தாழிட்ட கதவை திறந்தது யாரு?
பின்வாசல் வழியா வெளியே போன அத்தையா? இல்லை அத்தையின் மகனா?
யாருக்கும் பொக்கிஷம் கிடைக்காதுன்னு முத்துலட்சுமி பாட்டி சொன்னதுக்கப்புறமும் கூட அடுத்து வந்தவங்க உதிரனின் தந்தை ராமசாமி உள்பட எல்லோரும் ஏன் அதை தேடி ஆபத்தில் மாட்டி உயிரை விடுறாங்க?
பைரவர் இவங்களுக்கு காவலா இருக்கிறார்ன்னு தோணுது
இவ்வளவு நாளும் சினமிகாவின் கனவில் வந்த பைரவர் இப்போ உதிரனின் கனவில் வர்றாரே
அப்போ புதையலுக்காக உதிரனுக்குத்தான் ஆபத்து காத்திருக்கிறதோ?
யப்பா
செண்பகம், மாரியை விட பயங்கரமான நிறைய சஸ்பென்ஸ்கள் இருக்கும் போலிருக்கே, சவீதா டியர்
@saveethamurugesan
அப்போ நிரஞ்சன் இங்கேயும் வருவானா? வர வாய்ப்பு இருக்கும்ன்னு நினைக்கிறேன்