Saththamindri Muththamidu 12

Advertisement

Sundaramuma

Well-Known Member
well....13 வருடங்களில் பேசவேண்டியதை எல்லாம்
ஒரே இரவில் பேசுகிறான்.....one sided...talk...
ரொம்ப நியாயமான கேள்விகளைத்தான் கேட்கிறான்...


என்னை புரியவில்லையா,அறியவில்லையா....தெரியவில்லையா...என்று
அவன் கேள்வியின் அர்த்தங்கள் புரியவில்லை ...
துளசிக்காவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்...
முன்னுக்குபின் முரணாக உள்ளது அவனின் பேச்சுகள்...
ஒற்றை காதல் பார்வையில் மயங்கினாளோ
என்னவோ......
தன்னிடம் பேசவே மாட்டானோ என்றிருந்தவள்
மூச்சுவிடாமல் பேசியதலே மயங்கி இருப்பாள்,....


anyways, நாணல் மாதிரி வளைந்துக் கொடுத்து
எந்தவித போராட்டமும், இன்றி
அவளுக்குரிய உரிமையையும்,மரியாதையையும் தானாகவே
அவளுக்கு கிடைக்கும் படி செய்துவிட்டீர்கள்.....மல்லி...


அவனின் ஒற்றை பார்வையை அர்த்தமுள்ளாதாக
மாற்றிய நீங்கள்...
துளசியின் பதிமூன்று வருட காதலை
அவன் உணர்ந்ததாக சொல்லவே இல்லை...


இது ஒரு நல்ல திருப்பதியான பதிவா என்று கேட்டால்.......??????
உங்க எழுத்து எனக்கு ரொம்ப பழக்கமானதா இருக்கு .....
சூப்பர் கமெண்ட்:)
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

வாய்விட்டு பேச முடியா மன அழுத்தம் - அது
நோய்விட்டு போக முடியா கலக்கம்!
பேசிய பேச்சுக்கு
எதிர் பேச்சு இல்லை!
பார்க்கிற பார்வைக்கு
பதில் பார்வை இல்லை!
சப்தமில்லா முத்தமே
விடையாய் நின்றாள்.....
காதலின் அழுத்தம்
கடலினும் பெரிதே...!

வாழ்த்துக்கள் மல்லி.
அழகா சொல்லிடீங்க ...மித்ரா:)
 

Sundaramuma

Well-Known Member
இரு மனமும் இணையாமல் பதின் வயதில் பதிய வைத்த பந்தம் இது!!!

காதலாய் கணவன் இல்லை ஆனால் கணவனாய் கடமை இருந்தது!!!

பக்குவமான வயது இல்லை ஆனால் தெளிவான மனம் இருந்தது!!!

வசதியான பெற்றோர் இல்லை ஆனால் திடமான சுயகௌரவம் இருந்தது!!!

ஆதரிக்கும் உறவுகள் இல்லை ஆனால் அனுசரித்து போகும் பொறுமை இருந்தது!!!

மனைவியாக காதல் இல்லாமல் இல்லை ஆனால் தாயாக கடமை இருந்தது!!!

எதிர்பார்ப்புகள் இல்லை ஆனால் கணவனிடம் ஏக்கம் இருந்தது!!!

கண் பார்த்து பேச்சு இல்லை ஆனால் மனைவியாக உரிமை இருந்தது! !!

நிரந்தர விலகல் இல்லை ஆனால் அந்த பிரிவில் கணவனுக்காக தேடல் இருந்தது!!!

தேடலின் முடிவு மகளுக்காக இல்லை என்னவனை விட்டு இருக்க முடியாமல் இருந்தது!!!

கணவனாய் காதலை உணர்த்தவில்லை ஆனால் தன்னை உணர்த்திய அவன் ஒற்றை அழைப்பில் உயிர்ப்பு இருந்தது!!!

பிரிவின் முடிவில் அவனிடம் வந்த போது அவன் பார்வை என்னை விட்டு நீங்கவில்லை ஆனால் நான் அவனை விட்டு சென்ற கோபம் இருந்தது!!!

என்னவனை விட்டு விலகிய ஏக்கத்தில் என்னை நான் கவனிக்கவில்லை ஆனால் என் மீதான அவன் பார்வையின் கணிப்பு சரியாக இருந்தது!!!

எதிர்காலம் பற்றிய எண்ணம் இல்லை ஆனால் அவன் பரிசாக தந்த எதிர்காலம் எந்தன் மணிவயிற்றில் இருந்தது!!!

அவனிடம் கடந்த கால காதல் இல்லை ஆனால் அவன் அன்பை நான் உணராத வலி இருந்தது!!!

அவனை நெருங்க தயக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அவன் வலியை போக்க சத்தமின்றி முத்தமிடும் வேகம் இருந்தது!!!

மற்றவர்களை பற்றிய தயக்கம் அவனிடம் இல்லை ஆனால் அவன் ஒற்றை காதல் பார்வையில் என்னை வெட்கம் கொள்ள வைத்தவன்!!!

ஆம்!!! காதல் தான்!!!
அவன் சத்தமின்றி முத்தமிடுபவன் மட்டும் இல்லை!!!
சத்தமின்றி என்னை காதல் செய்பவன் அவன்!!!

என்னிடம் வெட்க புன்னகை!! அவனிடம் காதல் புன்னகை!!
இனிமேல் என்றென்றும் புன்னகை தான்!!!

சசி.
Ohh ..My ..
Awesome ...Sasi:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top