fathima.ar
Well-Known Member
இரு மனமும் இணையாமல் பதின் வயதில் பதிய வைத்த பந்தம் இது!!!
காதலாய் கணவன் இல்லை ஆனால் கணவனாய் கடமை இருந்தது!!!
பக்குவமான வயது இல்லை ஆனால் தெளிவான மனம் இருந்தது!!!
வசதியான பெற்றோர் இல்லை ஆனால் திடமான சுயகௌரவம் இருந்தது!!!
ஆதரிக்கும் உறவுகள் இல்லை ஆனால் அனுசரித்து போகும் பொறுமை இருந்தது!!!
மனைவியாக காதல் இல்லாமல் இல்லை ஆனால் தாயாக கடமை இருந்தது!!!
எதிர்பார்ப்புகள் இல்லை ஆனால் கணவனிடம் ஏக்கம் இருந்தது!!!
கண் பார்த்து பேச்சு இல்லை ஆனால் மனைவியாக உரிமை இருந்தது! !!
நிரந்தர விலகல் இல்லை ஆனால் அந்த பிரிவில் கணவனுக்காக தேடல் இருந்தது!!!
தேடலின் முடிவு மகளுக்காக இல்லை என்னவனை விட்டு இருக்க முடியாமல் இருந்தது!!!
கணவனாய் காதலை உணர்த்தவில்லை ஆனால் தன்னை உணர்த்திய அவன் ஒற்றை அழைப்பில் உயிர்ப்பு இருந்தது!!!
பிரிவின் முடிவில் அவனிடம் வந்த போது அவன் பார்வை என்னை விட்டு நீங்கவில்லை ஆனால் நான் அவனை விட்டு சென்ற கோபம் இருந்தது!!!
என்னவனை விட்டு விலகிய ஏக்கத்தில் என்னை நான் கவனிக்கவில்லை ஆனால் என் மீதான அவன் பார்வையின் கணிப்பு சரியாக இருந்தது!!!
எதிர்காலம் பற்றிய எண்ணம் இல்லை ஆனால் அவன் பரிசாக தந்த எதிர்காலம் எந்தன் மணிவயிற்றில் இருந்தது!!!
அவனிடம் கடந்த கால காதல் இல்லை ஆனால் அவன் அன்பை நான் உணராத வலி இருந்தது!!!
அவனை நெருங்க தயக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அவன் வலியை போக்க சத்தமின்றி முத்தமிடும் வேகம் இருந்தது!!!
மற்றவர்களை பற்றிய தயக்கம் அவனிடம் இல்லை ஆனால் அவன் ஒற்றை காதல் பார்வையில் என்னை வெட்கம் கொள்ள வைத்தவன்!!!
ஆம்!!! காதல் தான்!!!
அவன் சத்தமின்றி முத்தமிடுபவன் மட்டும் இல்லை!!!
சத்தமின்றி என்னை காதல் செய்பவன் அவன்!!!
என்னிடம் வெட்க புன்னகை!! அவனிடம் காதல் புன்னகை!!
இனிமேல் என்றென்றும் புன்னகை தான்!!!
சசி.
Wooowwwww..
Nice daa