அபி படும் துன்பங்களைக் கண்ட
பார்த்தி, நித்யாவை தனது தாயாக
முதன் முதலாக உணர்கிறான்....
அவனின் அம்மா என்ற அழைப்பைக் கேட்டு
அவனுக்கு மகள் பிறந்த வேளையில்
தனக்கு மகன் பிறந்ததாக நித்யா
மகிழும் கணங்களே......
இக்கதையின் மிக மிக சிறந்த பகுதியாக நான் கருதுவது....
கதையை முடித்த விதத்தைப் பற்றி
சொல்ல வார்த்தைகளே வரவில்லை...
மல்லியால் மட்டுமே முடிந்த
மல்லியின் எழுத்தாண்மைக்கு ஒரு சான்று...