ஹலோ மருது உன்னோட தேடலும் தெரியும்....... அவளும் உன்னை தேடினாள் தான்........
வந்தால் திரும்ப போகமுடியாதாம்பா......... அவ்ளோ தேடியிருக்கா.......
நீ எப்போவாவது சொன்னியா பார்க்கணும் போல இருக்குனு...... இல்லை I miss you........
கடை திறப்புக்கு தானே கூப்பிட்டாய்....... பிரமாண்டத்தில் பங்கில்லை என்றாலும் இருப்பதாவது இருக்கணும்னு நினைத்தாய்...........
நீ எப்போவும் அவளோட பத்திரம் தான் பார்த்திருக்க......
அவளும் அவளோட ஆசைக்காக ரெண்டு வருஷம் பல்லை கடிச்சுட்டு உக்கார்ந்துட்டா........
உன்னோட பிடித்தம் தெரியுது........ உன்னோட தனிமைக்கு அவள் தான் மருந்துனு இன்னும் உணரல......
என்ன மருது வேளாங்கண்ணி வரை போய் வேண்டிக்காமலேயே வந்துட்டியே........
வேண்டியிருந்தால் ஜெயந்தியினுடனான பிணக்குகள் முடிவுக்கு வந்திருக்குமாம்.........
அப்போ கதை முடிஞ்சிருமே........
போனதில் Atleast போன் பண்ணி சொல்லவாவது தோணுச்சே....... அந்த ஒரு மனசு வந்திருக்குதே.......
2 வருஷத்துக்கப்புறம் பார்க்கும் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வந்து அடுத்தவனுக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணுற....... ரொம்ப நல்லவன்டா நீ.......
You can make a complete homeமாம்......... போங்கடா நீயும் உங்க அண்ணனும்.........
அண்ணாத்தை வேற சொன்னனாமே.........
எனக்கு யாருக்காக இது யாருக்காக தான் தோணுது........
மாமியார் கிச்சடியை சாப்பிட்டுட்டு பேசாமல் படுத்து தூங்குங்க.........
ரெண்டு பேரும் கோபத்தில் இருக்கீங்க......... அவனுக்கும் கோபம் இருக்குது தான்.......
இப்போ பேச ஆரம்பித்தால் காயம் இன்னும் ஆழமாகும்........
இப்போ மௌனவிரதம் நல்லது........