Joher
Well-Known Member
முக்கியமாக சமைக்க மறந்தோம்......எதற்கு இந்த அவசரம்..
அதற்கென்ன அவசியம்..
காக்கும் பழக்கமே நமக்கு வாராதா..
மொழி காக்க மறந்தோம்...
நிலம் காக்க மறந்தோம்..
நீர் நிலை காக்க மறந்தோம்..
நம் பண்பாட்டையும்
மறந்த நாம்..
நம் உடல் நலமும் காக்க மறந்தோம்..
துரித உணவு பழக்கம்
துரிதமாக அழைத்துச் செல்லும்-காலனிடம்..
நிறமும் மணமும் துரித உணவில் மட்டுமல்ல..
இறுதி அஞ்சலி செலுத்தும் மலரிலும் உள்ளது..
வேண்டாம் துரித உணவு பழக்கம்.