Hi mam
மிகவும் சந்தோசம் கதையை இன்னும் மேற்கொண்டு தரப்போகின்றீர்கள் என்று,
அழகான அர்த்தமுள்ள பதிவு,திருமணங்கள் எப்படி வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம் ஆனால் எந்ததிருமணமுமே உடைந்துபோக்க்கூடாது,ஆரம்பத்தில் திருமண வாழ்க்கையில் சில நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது அல்லது அதனை பழக்கப்படுத்திக்கொள்ள கடினமாகவும் ஏன் தடுமாற்றமாகவும் இருக்கும் ,இந்த சாதி மத பேதம் ஏற்றத்தாழ்வு பட்டணம் பட்டிக்காடு கல்வி பணம் எல்லாவற்றையும் கொண்டு திருமணபந்தத்தை தராசில் வைக்காதீர்கள் ,திருமணம் நிறை பார்ப்பதற்கல்ல வாழ்ந்து பார்ப்பதற்கு, எதையும் பழக சகிக்க கற்றுக்கொண்டால் திருமண வாழ்க்கை கொஞ்சம் இலகுவாக இருக்கும் ,இங்கு எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டது ,காதல் தேவையெனில் திருமணங்கள் புரிதலோடு கடைசிவரை இருக்கவேண்டுமெனில் ,சைந்தவி நினைப்பதுபோல் தேவையில்லாத குப்பை கூழங்களை தூக்கி எறிந்துவிடுங்கள்.ஒருவழியாய் இருவரும் சேர்ந்தவிட்டார்கள்,ஆனால் விஜய் அம்மா இனிமேல் பிரச்சனை கொடுப்பாரென்று தோன்றுகின்றது,எங்களை நிறைய நாட்கள் காக்கவிடாமல் உங்களால் முடிந்தால் மீண்டும் எங்களை விரைவில் பார்க்க வாருங்கள் mam.
நன்றி