E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சகோதரி நீங்களும் மிஸ்தான் சகோதரி, என்ன நீங்க மாணவர் மிஸ்
கி,.கி....மாணவர்களோட கலந்து கலாட்டாவாக இருப்பாங்களே சில மிஸ் அந்த லிஸ்ட் ..நான்
 

Vidyanarayanan

Well-Known Member
Hi Malli,

ஜாதி முல்லை....
கற்பின் இலக்கணம்
இயற்கையின் கையில்!

ஒட்டுறவில் மலர்ந்த முல்லை!
கட்டுறவில் வளர்ந்த கிள்ளை!

உறவின் மொழி அறியா தங்கை!
மரபின் வழி அறியா மங்கை!

தனக்கென்று ஓர் கனவு!
அதற்கென்று ஓர் நனவு!
எதற்கென்று ஓர் நினைவு!
எப்படியோ வாழ்ந்து வந்த விந்தை!

அறியாத வயதில்
புரியாத நடப்பில்
தெரியாத தவிப்பில்
பழகிவிட்ட போதை!
மாற்றிவிட்ட பாதை!

கம்பீரமாய் வந்தவன்,
காதலின் நாயகன்!
கடமையாய் வந்தவன்,
கணவனாய் ஆனவன்!

மரபில் வாழ்ந்தவன்
மணாளனாய் மாயவன்!
உறவில் உய்ர்ந்தவன்
உயிராய் ஆண்டவன்!

முல்லை மலர
எல்லை ஆனான்!

உறவுக்காய் அவன்!
அவனுக்காய் அவள்!
காத்திருந்த காதல்!
தனிமையின் தேடல்!
தவிப்பினில் ஊடல்!
மறுப்பினில் மீறல்!
வெறுப்பினில் குமுறல்!
காட்டிய பாதை
நாடிய பேதை,
தேடிய போதை!

அழிவின் ஆரம்பம்
அன்பின் தொடக்கம்
பண்பின் விளக்கம்
நட்பின் இணக்கம்
பிரிவில் முடக்கம்!

காதலின் பிரிவு,
அன்பின் செரிவு!
ஊடலின் முடிவு,
தேடலின் தெளிவு!

காலத்தின் மாற்றம்,
கோலத்தின் தோற்றம்!

எண்ணத்தில் அவள் மாற்றம்,
மன்னனவன் தடுமாற்றம்!

சேர்ந்திட்ட வாழ்வில்
வீழ்ந்திட்ட மனதில்
காதலின் ஆர்பாட்டம்
மலரவள் போராட்டம்!

உணர்த்த முடியா அவன்
உணர முடியா அவள்
காலத்தின் கையில்
உணர்வின் பிடியில்
உறவுகளின் ஆர்பரிப்பு!
உள்ளங்களின் பரிதவிப்பு!

ஏன் என்ற கேள்வி.....?
எதற்கு என்ற கேள்வி.....?
அலையாய் பொங்க
அமைதியாய் அடங்க
காலமகளின் மாற்றமும் காரணமோ...?

புரிய வந்த சொந்தம்!
மலர வந்த பந்தம்!
உணர வைத்த சொந்தம்!
ஆயுட்கால பந்தம்!

உயிர்த்திட்ட காதல்,
உயிருட்டிய தாய்மை
தாய்மையின் பொறுப்பில்
தனிமையின் விடுதலை!

தாயாய் மலர்ந்த முல்லை!
சேயாய் வளர்ந்த கிள்ளை!
சங்கீத வாழ்வின் எல்லை!
சங்கமமாய் வந்த பிள்ளை!

உன் காதல் மன்னன் உன்னை,
பூவாய் மலர வைத்த அன்பன்!
உன் காதல் கண்ணன் உன்னை
தாயாய் மலர வைத்த கள்வன்!
உன் காதல் அன்பன் உன்னை
பெண்ணாய் மிளிர வைத்த மன்னன்!

சங்கீத ஜாதி முல்லை!
இங்கித வாழ்வின் எல்லை!


வாழ்த்துக்கள் மல்லி, நன்ற
உங்கள் கதைகளை சில நாட்களாகத்தான் படிக்கின்றேன். எல்லாம் மிக மிக எதார்த்தமான எளிய வாழ்வின் நிகழ்வுகளின் தொகுப்பு. நன்று.
Wowwwwww superb mithra
 

banumathi jayaraman

Well-Known Member
ஓகே...இப்படித்தான் சகோ
நமக்குள்ளயே பேசி முடிச்சிக்கணும்..மிஸ்டட போக்ககூடாது...பாவமில்ல மிஸ் ...
சகோதரி நீங்களும் மிஸ்தான் சகோதரி, என்ன நீங்க மாணவர் மிஸ்
ஹா ஹா ஹா
 

ThangaMalar

Well-Known Member
நான் இதை வழிமொழிகிறேன், பொன்ஸ் டியர்
தங்கமலர் டியர், எப்பவுமே காணக்கிடைக்காத
ஸ்வர்ணப் புஷ்பம் செல்லம்தான் பா
நன்றி நன்றி நன்றி பானு டியர்..
 

murugesanlaxmi

Well-Known Member
ப்ரெண்ட்ஸ் ஒரு சின்ன கதை நான் படித்தது, அத்துடன் இரவு வணக்கம்{ கதை சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராது. அதுக்குத்தான்}



தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.
அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்
?
என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.
கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.
அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு
, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.
நகைக்கடையில் காண்பித்ததற்கு
50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம்
காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.
குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.
அதற்கு கடவுள் சொன்னார்
, பார்த்தாயா, *ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்*.
அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!*
உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய்
, மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.*
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!

நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
*ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!*_
உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!*_ மாற்றம் ஒன்றே மாறாதது நண்பர்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top