@உதயா, உங்களுக்கு ஆதரவா சில points சொல்றேன், சரியான்னு பாருங்களேன்
1. பிரவாக்கு மலரை பார்த்ததும் அவ அழகால அவ மேல காதல் வரல. ஏன்னா மீட்டிங் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு தான் யோசித்தான். First time ஏற்கனவே சந்திப்பு நிகழ்ந்து விட்டது.
அவளோட நல்ல குணங்கள், தன்னம்பிக்கை பார்த்து தான் போக போக அவனுக்கு தன்னோட கொள்கைகளை மீறின காதல் வந்தது. ஆழமான காதல். அதை அவன் உணரவும் இல்ல.
2. அவளை மிரட்டி கல்யாணம் செய்தான் தான்.... ஆனா அவளோட குடும்பத்தினருக்கு எந்த அவமரியாதையும் செய்யல. அவ்வளவு கோபத்துலயும் மாமனாரை வரவேற்று பத்திரமா அனுப்பி வைக்கிறான்.
3. ஒவ்வொரு சண்டையிலயும் பிரவா தான் இறங்கி வர்றான்.
மண்டைய உடைச்சும் அவளோட அன்பா தான் நடந்துக்கறான். இப்பவும் மலர் வந்து கூப்பிடவும் மாமனார் வீட்டுக்கு சாப்பிட போயிட்டான்.
4. குகனை கூட கைப்பொம்மையா வச்சி இருக்கிறவன் பரத் கிட்ட தன்மையா நடக்கறான்.
5. ஆஸ்பிடல்ல அவனோட விருப்பத்துக்கு எதிரா மலர் அவ்வளவு கெடுபிடிகளை செய்யும்போதும் ரசிக்கத் தான் செய்றான்.
6. உடன்பிறந்தவர்கள் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்கான், அவங்க எதிர்த்து பேசினாலும்.
7. மலர் வீட்டு வசதி குறைவுகளை அவளோட பலவீனமா பார்க்கவே இல்ல.
8. இன்னும் அவ கர்ப்பமா இருக்கறது தெரிஞ்சா அவளுக்காக எதுவும் செய்வான். அவனை மயக்கி மலர் ஆஸ்பிடல் நிர்வாகத்துல எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
9. கல்யாணத்திற்குப் பிறகு மலர் தான் அவனை மிரட்டிக்கிட்டே இருக்கா. அவன் தாராள மனசோட அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்றான்.
10. மணவாழ்க்கையில மிக முக்கியமான அம்சம் : மனைவியை யாரிடமும் அவன் விட்டுக்கொடுக்கவே இல்ல