HI, HI, HI குட்டி டீசேரோட ஓடி வந்துட்டேன்.படிச்சிட்டு சொல்லுங்க
செல்வியை பார்த்த போதும் சரி, தாலி கட்டிய போதும் சரி வேற யாரோ என்ற எண்ணம் கொஞ்சமேனும் தோன்றவில்லை. தங்களுக்கு நடந்தது திடீர் திருமணம் என்பதையே செல்வியின் அருகாமையில் மறந்து தான் போனான்.
எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும், சிரித்தவாறே கடந்து செல்பவனுக்கு செல்வியின் மேல் வைத்த காதலும், அருகாமையும் இன்னும் பலம் சேர்க்க தனது எல்லா பிரச்சினைகளும் அவள் அருகில் ஒரு புள்ளியாய் கூட மனதில் இல்லாது மனசு முழுவதும் செல்வியே நிறைந்திருக்க இனி எல்லாம் அவளே என்ற எண்ணத்தோடு இருந்தவனுக்கு எங்கே தவறு நேர்ந்தது என்று கொஞ்சமேனும் புரியவில்லை.
செல்வியின் தம்பிகளும் தன்னுடைய பொறுப்பு என்று நினைத்தவனை, “என் தம்பிகளுக்கு பிறகு தான் நீ” என்பது போல் செல்வி கருத்தடை மாத்திரைகளை உபயோகித்தாள் என்றால்?
அவள் தன்னை நம்பவில்லையா? அவள் என்னிடம் காட்டிய அன்பு பொய்யா? அவள் மனசில் கொஞ்சமேனும் என் மீது காதல் இல்லையா? அவளை நான் கொஞ்சமாலும் பாதிக்கவில்லையா? ஊரிலிருந்து வரும் போதே இதை கொண்டு வந்தாளா? என்று சத்யாவின் எண்ணம் போக மாத்திரை பாட்டிலை வெறித்தவன்
மொழி தெரியா குழைந்தை போல் முழிக்கும் செல்வியிடம் என்ன கேட்பது? ஏன் இதை பாவிக்கிறாய்? என்றா? அல்லது கடந்த மாதங்களாகாக நமக்குள் எந்த உறவும் இல்லையே! வாங்கியது வீண் என்று அந்த பெண்மணியிடம் கொடுத்து விட்டாயா? என்றா?
தங்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு மற்றவர்களுக்கு காட்ட பிடிக்காமல் சத்யா செல்வியிடம் எந்த கேள்வியும் கேக்காது மௌனம் காக்க
கிராமத்தில் பிறந்து வளந்த கள்ளம் கபடமற்ற செல்விக்கு கோமளவள்ளியின் நடிப்பு புரிய சில கணங்கள் எடுத்தது. கண்கள் கலங்க சத்யாவை பார்க்க அவனின் வெறித்த பார்வையே தன்னை நம்பவில்லை என்று சொல்ல அழுகை முட்டிக்கு கொண்டு வந்தது.
சத்யதேவ் வள்ளி சொன்னது போல் கன்னம் பழுக்க அடித்திருந்தாலோ? நாக்கை புடுங்குறதை போல நல்லாக நாலு கேள்வி கேட்டிருந்தாலோ? இவ்வளவு வலித்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒரே ஒரு நாள் நடந்த கூடலில் குழந்தை பிறக்கும் என்று தான் கொண்ட ஆவல் என்ன? குழந்தையே வேணாம் என்பது போல் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லும் குற்றச்சாட்டு தான் என்ன?
வள்ளியின் மேல் கொலை வெறியே வர இப்போது எது பேசினாலும் தன்மேல் வந்து விடியும் என்று தோன்ற, கணவனே தன்னை நம்பாத போது என்ன செய்வது, என்ன பேசினாலும் எடுபடாது என்று நன்றாகவே செல்விக்கு புரிந்தது. இவ்வளவு நாளும் ஒருத்தரை ஒருத்தர் சரியாக பார்க்க கூட இல்லாமல் பிரிவிலும் சுகமாய் இருந்தது தான் என்ன? ஏன் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வரை எவ்வளவு சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்த அழகான தருணம் தான் என்ன?
"மாமாக்கு என் மனசு புரியலையா? ஒரு வேல ரோஜாவை விரும்பி இருப்பாங்களோ? மாமா ரொம்ப நல்லவர், திடீரென நம்ம கல்யாணம் நடந்ததால என்ன ஏத்துக்க கிட்டாங்களோ?" என்று செல்வி தனக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் போது தான் ரோஜாவும் மரகதவள்ளியும் உள்ளே வந்தது.
செல்வியை பார்த்த போதும் சரி, தாலி கட்டிய போதும் சரி வேற யாரோ என்ற எண்ணம் கொஞ்சமேனும் தோன்றவில்லை. தங்களுக்கு நடந்தது திடீர் திருமணம் என்பதையே செல்வியின் அருகாமையில் மறந்து தான் போனான்.
எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும், சிரித்தவாறே கடந்து செல்பவனுக்கு செல்வியின் மேல் வைத்த காதலும், அருகாமையும் இன்னும் பலம் சேர்க்க தனது எல்லா பிரச்சினைகளும் அவள் அருகில் ஒரு புள்ளியாய் கூட மனதில் இல்லாது மனசு முழுவதும் செல்வியே நிறைந்திருக்க இனி எல்லாம் அவளே என்ற எண்ணத்தோடு இருந்தவனுக்கு எங்கே தவறு நேர்ந்தது என்று கொஞ்சமேனும் புரியவில்லை.
செல்வியின் தம்பிகளும் தன்னுடைய பொறுப்பு என்று நினைத்தவனை, “என் தம்பிகளுக்கு பிறகு தான் நீ” என்பது போல் செல்வி கருத்தடை மாத்திரைகளை உபயோகித்தாள் என்றால்?
அவள் தன்னை நம்பவில்லையா? அவள் என்னிடம் காட்டிய அன்பு பொய்யா? அவள் மனசில் கொஞ்சமேனும் என் மீது காதல் இல்லையா? அவளை நான் கொஞ்சமாலும் பாதிக்கவில்லையா? ஊரிலிருந்து வரும் போதே இதை கொண்டு வந்தாளா? என்று சத்யாவின் எண்ணம் போக மாத்திரை பாட்டிலை வெறித்தவன்
மொழி தெரியா குழைந்தை போல் முழிக்கும் செல்வியிடம் என்ன கேட்பது? ஏன் இதை பாவிக்கிறாய்? என்றா? அல்லது கடந்த மாதங்களாகாக நமக்குள் எந்த உறவும் இல்லையே! வாங்கியது வீண் என்று அந்த பெண்மணியிடம் கொடுத்து விட்டாயா? என்றா?
தங்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு மற்றவர்களுக்கு காட்ட பிடிக்காமல் சத்யா செல்வியிடம் எந்த கேள்வியும் கேக்காது மௌனம் காக்க
கிராமத்தில் பிறந்து வளந்த கள்ளம் கபடமற்ற செல்விக்கு கோமளவள்ளியின் நடிப்பு புரிய சில கணங்கள் எடுத்தது. கண்கள் கலங்க சத்யாவை பார்க்க அவனின் வெறித்த பார்வையே தன்னை நம்பவில்லை என்று சொல்ல அழுகை முட்டிக்கு கொண்டு வந்தது.
சத்யதேவ் வள்ளி சொன்னது போல் கன்னம் பழுக்க அடித்திருந்தாலோ? நாக்கை புடுங்குறதை போல நல்லாக நாலு கேள்வி கேட்டிருந்தாலோ? இவ்வளவு வலித்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒரே ஒரு நாள் நடந்த கூடலில் குழந்தை பிறக்கும் என்று தான் கொண்ட ஆவல் என்ன? குழந்தையே வேணாம் என்பது போல் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லும் குற்றச்சாட்டு தான் என்ன?
வள்ளியின் மேல் கொலை வெறியே வர இப்போது எது பேசினாலும் தன்மேல் வந்து விடியும் என்று தோன்ற, கணவனே தன்னை நம்பாத போது என்ன செய்வது, என்ன பேசினாலும் எடுபடாது என்று நன்றாகவே செல்விக்கு புரிந்தது. இவ்வளவு நாளும் ஒருத்தரை ஒருத்தர் சரியாக பார்க்க கூட இல்லாமல் பிரிவிலும் சுகமாய் இருந்தது தான் என்ன? ஏன் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வரை எவ்வளவு சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்த அழகான தருணம் தான் என்ன?
"மாமாக்கு என் மனசு புரியலையா? ஒரு வேல ரோஜாவை விரும்பி இருப்பாங்களோ? மாமா ரொம்ப நல்லவர், திடீரென நம்ம கல்யாணம் நடந்ததால என்ன ஏத்துக்க கிட்டாங்களோ?" என்று செல்வி தனக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் போது தான் ரோஜாவும் மரகதவள்ளியும் உள்ளே வந்தது.