மிகவும் அருமையான பதிவு மிலா
.சொத்துக்காக பெற்றவர்களை கொன்றவனை பழி வாங்க நினைப்பது தான் கதையின் கரு.
ஈகை ,மருதநாயகத்தையும்,அவர் மகன்களையும் பழிவாங்க, அவனது நிலத்தை ஏலத்தில் எடுத்து விவசாயம் செய்வதாக தயாளனுடன் ஊருக்கு வருகிறான்.
மருதநாயகத்தின் பேத்தியை ஈகை திருமணம் செய்து துன்புறுத்த நினைக்க,ஈகையை வீட்டில் தங்கவைக்கும் மருதநாயகம் ,பேத்தியின் மூலம் நிலத்தையும் ,ஈகையின் சொத்துக்களையும் அபகரிக்க நினைக்கிறான்.
ஹரிஹரன்,பார்கவியை திருமணம் செய்ய திட்டமிட்டு கடத்த,பார்கவி மருதநாயகத்தின் பேத்தி இல்லை என்பதையும்,அவள் யார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட ஈகை,ஹரிஹரனிடம் இருந்து மீட்டு பார்கவியை மணந்து கொள்வது அருமை.
ஈகை யார் என்ற உண்மையை தெரிந்து கொண்டு,அவனது வளர்ப்பு அம்மாவை கடத்துவதும், ஈகை அவரை மீட்பதுடன்,தன் பெற்றவர்களை கொலை செய்தது, பார்கவியின் தாய் ஜானகி கலப்பு திருமணம் செய்ததால் அவரை குடும்பத்துடன் வெட்டி கொன்றது என அவனுடைய குற்றங்களை அவனையே சொல்ல வைத்து போலிஸில் பிடித்து கொடுப்பது என விறுவிறுப்பான பதிவு
என்பது வயதிலும் மனைவி,மருமகளை கொன்றாலும் கவலையில்லை சொத்துதான் தேவை என சொல்லும் இவர்கள் மனிதர்களே இல்லை
.
கணவன்,மகன்களை பற்றி தெரிந்து ஈகையின் சொத்துக்களை அவனிடம் ஒப்படைத்து வீட்டை விட்டு வெளியேறும் வேதநாயகியின் குணம் அருமை..
நடந்தது விபத்தல்ல கொலை முயற்ச்சி என தெரிந்து,சிறுவயதிலே ஈகையை காப்பாற்ற தயாளன் செய்யும் முயற்ச்சிகள் மிகவும் அருமை.தயாளன் ,காயத்திரியின் காத்திருந்த காதல் அழகு
.
அருமையான கதை. எதிர்பாராத திருப்பங்களுடன்.இனிய முடிவுடன். வாழ்த்துக்கள் மிலா
.