"என்னது ருத்ரனா...".ருத்ரன் பேரை சொல்லி இங்கே கூட்டிட்டு வந்திருக்கான்.கர்பிணி பொண்ணுனு நெனைக்காம ரெண்டு நாளா உறக்கத்துல(மயக்கத்துல)வச்சிருக்கான். இந்தம்மா வேற ருத்ரன் தம்பிய பலவருசமா தெரியும்னு சொல்லுதே.
அருளாசினியை கண்டு பிடிக்க முடியாத வருத்தம்,அஞ்சனா பேசியதால் வந்த கோபம், வெறுப்பு என மனஅழுத்தத்துடன் வந்தவனிடம்,அன்னபூரணி மருமகள் மேல் கொண்ட பாசத்தால் என்றாலும் அவர் பேசிய பேச்சுக்கள் ருத்ராவை தன்நிலையை இழக்க வச்சுடுச்சு.
ஒன்னுக்கும் லாயக்கில்லைடா நீ என அஞ்சனா சொன்னதை போலவே அன்னபூரணி சொன்னது ருத்ரன் மனதை காயப்படுத்தியதோடு,எல்லாம் உங்களால் தான்,நீங்கள் பார்த்தவளால் தான் என சொல்லி அம்மாவை பேசிட்டான்.யாராவது ஒருவர் பொறுமையா இருந்திருக்கலாம்....
அஞ்சனாவுடன் நடந்த பிரச்சனையால் தான் டென்சனாக இருந்தவன், நீங்க பேசவும் பதிலுக்கு பேசிட்டான் என லோகு கோவிலில் நடந்ததை அன்னபூரணியிடம் சொல்லிட்டான்.லோகு சொன்னத கேட்டு கோபத்தில் இருக்கும் பூரணி,அஞ்சனா வீட்டுக்கே போய் வச்சு செய்வாரோ
அருள் பற்றிய தகவலோடு வந்தது யார்,என்ன தகவலா இருக்கும்.