உன் கண்ணில் என் விம்பம் teaser 4

Advertisement

Sharmiseetha

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இரண்டாம் அத்தியாயத்திலிருந்து குட்டி டீஸர்:) UD வியாழன் தரேன்(y)
View attachment 4106 vesak lantern


கோவிலிலும் வெசக் விளக்குகளை ஏற்றுகிறார்கள் போலும் கையில் ஒரு வெசக் விளக்கை ஏந்தி இருந்தாள். அந்த இரவு விளக்குகளின் ஒளியில் மிகவும் அழகாய் அவள். நீண்ட பாவாடை மற்றும் டி ஷார்ட் போன்ற ரவிக்கை மாத்திரம் அணிந்திருக்க தாவணி இல்லாமல் அவளின் செழுமைகள் அவனின் கண்ணுக்கு விருந்தாகின. குழந்தை முகம். குட்டி கறுப்புப் பொட்டோடு கனகாம்பரம் சூடியிருக்க ரசனைக்காரனாக இருந்தாள் தேவதை கையில் விளக்கு என்று வர்ணித்திருப்பானோ! அல்லது ஒளியிலே தெரிவது தேவதையா என்று பாடி இருப்பானோ! அவன் பார்வை முழுவதும் அவள் மேனியை மொய்த்தது. அது அவனுடைய வயதின் ஹார்மோன்களின் பார்வையோ! அவனை உள்ளே இழுக்கும் ஆழிச் சுழியாய் அவளின் பெரிய கண்கள். சிரித்துக் கொண்டே யாருடனையோ பேசிக்கொண்டு விளக்கை கொடுக்க மேலே இருந்தவர்கள் கட்டிக் கொண்டிருந்தனர்.



அவளின் அருகில் வர வர அவள் தன்னை பார்க்க மாட்டாளா? என்ற எண்ணம் அவன் மனதில் ஏக்கமாக எட்டிப் பார்க்க அவளோ வேலையில் கண்ணாக இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு வந்தவன் அருகில் வர அவள் திரும்ப அவன் மேல் மோதி நின்றாள் யாழிசை.

View attachment 4104



அவளின் வாசமும், மென்மையும் அவனின் ஏக்கங்களை தீர்த்து வைக்க, அவளின் தோள்களில் கைவைத்து பிடித்து நிறுத்தியவன் விரல்கள் வரை தடவியவாறே விடுவித்தான். பார்ப்பவர்களுக்கு சாதாரண செயலாக இருக்க யாழிசை அவன் தொடுகையில் சிலிர்த்து விலக, அவனோ அவளை திரும்பியும் பாராது சென்றிருந்தான்.





அதன் பின் அவளை நினைக்க கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை. ஆனால் இரவில் அவனை தூங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தாள் யாழிசை. அது காதல் என்ற எண்ணமெல்லாம் ரிஷிக்கு இல்லை. அவனை பொறுத்த மட்டில் அவள் மேல் மோகம், கொஞ்சம் நாளில் சரியாகிடும் என்றிருந்தவனுக்கு இரண்டு வருடங்களாக இரவில் இம்சித்துக் கொண்டிருந்தாள் யாழிசை. கடந்த ஒரு மாதமாக அவளின் நினைவுகளே! அவளை பார்த்தால் மட்டும் அது அடங்காது. இருகைகளாலும் அணைக்க வேண்டும், மோகம் தீர அனுபவிக்க வேண்டும். மொத்தமாக அவளை அடையவும் வேண்டும். அப்பொழுதுதான் அவனின் மனதில் அவளால் எழுந்துள்ள ஆசைகள் அடங்கும். இதற்க்கு மேலும் பொறுக்க முடியாது என்றெண்ணியவன் எல்லா வேலைகளையும் ப்ரதீபனிடம் ஒப்படைத்து விட்டு யாழிசையை இந்த ஊரை சேர்ந்தவளா? எங்கே போய் தேடுவது என்ற சிந்தனையெல்லாம் இல்லாமல் அவளை காணவென்றே வந்து சேர்ந்தான்.

ஜீப்பிலிருந்து அவளை பார்த்திருந்தவனின் எண்ணமெல்லாம் அவளை எப்படி அடைவது. அவன் பழகும் பெண்கள் போல் அழைத்த உடன் வந்து விடுவாளா? காசு கொடுத்தால் வருவாளா? என்றிருக்க அவனின் அடிமனதில் அவளுக்கான காதல் ஜகத் என்பவனால் சீறியெழுந்து

View attachment 4105

"நீ எனக்கு மட்டும் தான் என்று சொல்ல வைத்திருந்தது"
Dai Hero nee Hero thannu konjam manasula vachukko pls nee vara vara rompa mosama nadakkara ethu nallathukku ella solletten apparam unnoda eshtam thirumpavum inntha mathiri nadanthathu enkitta nalla thittu vagguva pathukka avulavuthan solluven and dear ungaloda ud very very very nice dear superb
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top