banumathi jayaraman
Well-Known Member
துன்பத்தில் உழலுபவன் எப்போதுமே துன்பப்படமாட்டான்.
அதே போல் கஷ்டமே என்ன என்று தெரியாதவன் எப்போதுமே அப்படியிருந்து விட முடியாது.
இன்பமும் துன்பமும் பகல் இரவு மாதிரி மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஆனால் இப்போ கடந்த மூன்று மாதமாக எல்லோருமே கஷ்டம்தான் படுகிறோம்.
பணம் இருப்பவர்கள் செலவு செய்ய வழியில்லை
இல்லாதவர்கள் சம்பாதிக்க வழியில்லை.
யார் முகத்திலும் உண்மையான சிரிப்பில்லை
எல்லோருமே சோகம் கப்பிய முகத்தோடு காணப்படுகிறார்கள்.
நேற்று ஒரு VIP நாடக நடிகர் கொரோனா பாதித்த அவரது உறவினரை எந்த மருத்துவமனையிலும் சேர்க்க இடமில்லாமல் தவித்ததை வெளியிடுகிறார்.
ஆனால் அரசு மருதத்துவமனை எல்லாவற்றிலும் இடமிருக்குன்னு தினம் தினம் சொல்லுது.
எது உண்மை?
எது பொய்?
நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியலை.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் இவ்வளவு லட்சத்திற்கு மேல் வாங்கக்கூடாது என அரசே எச்சரிக்கின்றது.
லட்சங்களில் பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
அரசு மருத்துவமனையில் சேரவும் இடமில்லை
தனியார் மருத்துவமனையில் சேரவும் பணமில்லை
இதற்கு என்னதான் வழி?
என்று மாறும் இந்த சூழ்நிலை?
தினம் தினம் கூலி வேலை செய்பவர்கள் அன்றாடம் கூலி பெற்று ரோட்டோரம் சமைத்து சாப்பிட்டு அவர்கள் பாட்டுக்கு நிம்மதியாக காலம் கழித்தார்கள்.
இன்னும் மாத சம்பளம் வாங்கும் தனியார் துறை, பொதுத்துறையில் பணிபுரிபவர்கள் அவர்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு ஒரளவிற்கு நன்றாக வாழ்ந்தார்கள்.
இப்பொழுது அவர்களது வருமானமும் போய் தங்குவற்கு இடமும் போய் மிகப் பரிதாபமாக இருக்கிறார்கள்.
சரி தொழிற்சாலை எல்லாம் வைத்து நடத்தும் முதலாளிக்கு பிரச்சினை இல்லையா என்றால் கடந்த மூன்று மாதமாக நின்றுபோன மிஷினெல்லாம் அதற்குரிய Expert ஐ வரவழைத்து மிஷினை திரும்ப பழைய கண்டிஷனில் ஓட வைக்க நிறைய செலவு பிடிக்கும்.
திரும்ப உற்பத்தியை தொடங்கனும்.
இழந்த கைவிட்டு போன ஆர்டர்களை திரும்ப பிடிக்கனும்.
அவர்கள் தகுதிக்கு அங்கும் கஷ்டம்தான்.
முன்பு எல்லாம் மனசு சரியில்லை என்றால் குறைந்தபட்சம் அருகில் உள்ள கோவிலுக்கு போய் ஒரு விளக்கு போட்டுவிட்டு சற்று நேரம் அமர்ந்து விட்டு வரலாம்.
இப்போ கோவிலே மூடிக்கிடக்கு எங்கு போக?
யாரிடம் முறையிட?
மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் முடங்கி விட்டன.
குரூஷேத்திர போர் முடித்து கண்ணன் தன்னுடைய நாட்டிற்கு கிளம்புகிறான்.
கிளம்பும் முன் தனது அத்தையான குந்திதேவியிடம் சொல்லிக்கொண்டு செல்ல வருகிறான்.
அருகே பாண்டவர்கள் கௌரவர்கள் அனைவரும் உள்ளனர்.
குந்தியிடம் உனக்கு என்ன வேண்டும்?
கேள்
நான் தர சித்தமாக இருக்கிறேன் என்கிறான்.
அவளோ நீ என்னை விட்டு போகக் கூடாது
அப்படி போகும் பட்சத்தில் எனக்கு தினம் ஒரு சிறு துன்பம் நான் அனுபவிக்கும் வண்ணம் கொடு என்று வேண்டுகிறாள்.
அருகில் இருந்தோர் சிரித்தார்கள்.
அதற்கு குந்தி தேவியோ "இதுநாள் வரையிலும் எனக்கு எப்போது துன்பம் நேர்ந்தாலும், நான் உன்னைத்தான் நினைத்துக் கொள்வேன்.
யுத்தம் காரணமாக இதுவரை நீ என்னுடன் இருந்தாய்.
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே என் துன்பங்கள் எல்லாம் விலகி விட்டன.
இப்போது நீ என்னை விட்டு நீங்கிச் செல்வதாக சொல்கிறாய்.
ஆகையால் நான் உன்னை நினைக்காமல் இருந்து விடக் கூடாதே என்ற அச்சம் என்னை அச்சுறுத்துகிறது.
தினமும் ஏதாவது துன்பம் வந்தால், அதன் வாயிலாக உன்னை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வேன்.
உன்னை நினைப்பதால், உன் அருட்பார்வை எனக்கு கிடைக்கும் அல்லவா?
அதற்காகத்தான் எனக்கு துன்பத்தையே வரமாக தர கேட்கிறேன்" என்றாள் குந்திதேவி.
உண்மைதான்.
இன்பத்தில் இருக்கும் எவரும், அந்த மகிழ்ச்சியில் இறைவனை மறந்து விடுவது இயற்கைதான்.
துன்பம் என்ற ஒன்று இருப்பதால்தான், அவ்வப்போது இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள்.
ஆனால் நாம் இப்போது அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து மீண்டும் நாம் பழைய நிலைக்கு நினைத்த இடத்திற்கு சென்று வந்து கொண்டு பழைய வாழ்க்கைக்கு திரும்பினாலே போதும் என்றே கடவுளிடம் மன்றாடத் தோன்றுகிறது.
அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள்.
நானும்தான்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
எனவே நண்பர்களே அவர் அவர் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்து கொண்டு விரைவில் இந்த நிலைமாறி பழையபடி எல்லோரும் வாழ வழி வேண்டி பிராத்திக்கிறேன்.
யாருக்கு எந்த கடவுள் பிடிக்குமோ அந்த அந்த கடவுளின் பெயரை பதிவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே.
"ஒருவனை மனிதனாக ஆக்குபவை அவனுக்கு கிடைக்கும் உதவிகளும் வசதிகளும் இல்லை
அவனுக்கு ஏற்படும் துன்பங்களும் இடையூறுகளுமே ஆகும்"
"எல்லா வலிகளையுமே வார்த்தைகளால் வெளியே சொல்ல முடியாது
ஓசைகள் இன்றி மௌனமாகவே அழூகின்ற ஓராயிரம் வலிகளோடு பல பேர் இங்கே"
"காயங்கள் இன்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை"
மிகுந்த மன உளைச்சலோடு,
உங்கள் அன்புத் தோழி
அதே போல் கஷ்டமே என்ன என்று தெரியாதவன் எப்போதுமே அப்படியிருந்து விட முடியாது.
இன்பமும் துன்பமும் பகல் இரவு மாதிரி மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஆனால் இப்போ கடந்த மூன்று மாதமாக எல்லோருமே கஷ்டம்தான் படுகிறோம்.
பணம் இருப்பவர்கள் செலவு செய்ய வழியில்லை
இல்லாதவர்கள் சம்பாதிக்க வழியில்லை.
யார் முகத்திலும் உண்மையான சிரிப்பில்லை
எல்லோருமே சோகம் கப்பிய முகத்தோடு காணப்படுகிறார்கள்.
நேற்று ஒரு VIP நாடக நடிகர் கொரோனா பாதித்த அவரது உறவினரை எந்த மருத்துவமனையிலும் சேர்க்க இடமில்லாமல் தவித்ததை வெளியிடுகிறார்.
ஆனால் அரசு மருதத்துவமனை எல்லாவற்றிலும் இடமிருக்குன்னு தினம் தினம் சொல்லுது.
எது உண்மை?
எது பொய்?
நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியலை.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் இவ்வளவு லட்சத்திற்கு மேல் வாங்கக்கூடாது என அரசே எச்சரிக்கின்றது.
லட்சங்களில் பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
அரசு மருத்துவமனையில் சேரவும் இடமில்லை
தனியார் மருத்துவமனையில் சேரவும் பணமில்லை
இதற்கு என்னதான் வழி?
என்று மாறும் இந்த சூழ்நிலை?
தினம் தினம் கூலி வேலை செய்பவர்கள் அன்றாடம் கூலி பெற்று ரோட்டோரம் சமைத்து சாப்பிட்டு அவர்கள் பாட்டுக்கு நிம்மதியாக காலம் கழித்தார்கள்.
இன்னும் மாத சம்பளம் வாங்கும் தனியார் துறை, பொதுத்துறையில் பணிபுரிபவர்கள் அவர்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு ஒரளவிற்கு நன்றாக வாழ்ந்தார்கள்.
இப்பொழுது அவர்களது வருமானமும் போய் தங்குவற்கு இடமும் போய் மிகப் பரிதாபமாக இருக்கிறார்கள்.
சரி தொழிற்சாலை எல்லாம் வைத்து நடத்தும் முதலாளிக்கு பிரச்சினை இல்லையா என்றால் கடந்த மூன்று மாதமாக நின்றுபோன மிஷினெல்லாம் அதற்குரிய Expert ஐ வரவழைத்து மிஷினை திரும்ப பழைய கண்டிஷனில் ஓட வைக்க நிறைய செலவு பிடிக்கும்.
திரும்ப உற்பத்தியை தொடங்கனும்.
இழந்த கைவிட்டு போன ஆர்டர்களை திரும்ப பிடிக்கனும்.
அவர்கள் தகுதிக்கு அங்கும் கஷ்டம்தான்.
முன்பு எல்லாம் மனசு சரியில்லை என்றால் குறைந்தபட்சம் அருகில் உள்ள கோவிலுக்கு போய் ஒரு விளக்கு போட்டுவிட்டு சற்று நேரம் அமர்ந்து விட்டு வரலாம்.
இப்போ கோவிலே மூடிக்கிடக்கு எங்கு போக?
யாரிடம் முறையிட?
மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் முடங்கி விட்டன.
குரூஷேத்திர போர் முடித்து கண்ணன் தன்னுடைய நாட்டிற்கு கிளம்புகிறான்.
கிளம்பும் முன் தனது அத்தையான குந்திதேவியிடம் சொல்லிக்கொண்டு செல்ல வருகிறான்.
அருகே பாண்டவர்கள் கௌரவர்கள் அனைவரும் உள்ளனர்.
குந்தியிடம் உனக்கு என்ன வேண்டும்?
கேள்
நான் தர சித்தமாக இருக்கிறேன் என்கிறான்.
அவளோ நீ என்னை விட்டு போகக் கூடாது
அப்படி போகும் பட்சத்தில் எனக்கு தினம் ஒரு சிறு துன்பம் நான் அனுபவிக்கும் வண்ணம் கொடு என்று வேண்டுகிறாள்.
அருகில் இருந்தோர் சிரித்தார்கள்.
அதற்கு குந்தி தேவியோ "இதுநாள் வரையிலும் எனக்கு எப்போது துன்பம் நேர்ந்தாலும், நான் உன்னைத்தான் நினைத்துக் கொள்வேன்.
யுத்தம் காரணமாக இதுவரை நீ என்னுடன் இருந்தாய்.
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே என் துன்பங்கள் எல்லாம் விலகி விட்டன.
இப்போது நீ என்னை விட்டு நீங்கிச் செல்வதாக சொல்கிறாய்.
ஆகையால் நான் உன்னை நினைக்காமல் இருந்து விடக் கூடாதே என்ற அச்சம் என்னை அச்சுறுத்துகிறது.
தினமும் ஏதாவது துன்பம் வந்தால், அதன் வாயிலாக உன்னை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வேன்.
உன்னை நினைப்பதால், உன் அருட்பார்வை எனக்கு கிடைக்கும் அல்லவா?
அதற்காகத்தான் எனக்கு துன்பத்தையே வரமாக தர கேட்கிறேன்" என்றாள் குந்திதேவி.
உண்மைதான்.
இன்பத்தில் இருக்கும் எவரும், அந்த மகிழ்ச்சியில் இறைவனை மறந்து விடுவது இயற்கைதான்.
துன்பம் என்ற ஒன்று இருப்பதால்தான், அவ்வப்போது இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள்.
ஆனால் நாம் இப்போது அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து மீண்டும் நாம் பழைய நிலைக்கு நினைத்த இடத்திற்கு சென்று வந்து கொண்டு பழைய வாழ்க்கைக்கு திரும்பினாலே போதும் என்றே கடவுளிடம் மன்றாடத் தோன்றுகிறது.
அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள்.
நானும்தான்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
எனவே நண்பர்களே அவர் அவர் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்து கொண்டு விரைவில் இந்த நிலைமாறி பழையபடி எல்லோரும் வாழ வழி வேண்டி பிராத்திக்கிறேன்.
யாருக்கு எந்த கடவுள் பிடிக்குமோ அந்த அந்த கடவுளின் பெயரை பதிவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே.
"ஒருவனை மனிதனாக ஆக்குபவை அவனுக்கு கிடைக்கும் உதவிகளும் வசதிகளும் இல்லை
அவனுக்கு ஏற்படும் துன்பங்களும் இடையூறுகளுமே ஆகும்"
"எல்லா வலிகளையுமே வார்த்தைகளால் வெளியே சொல்ல முடியாது
ஓசைகள் இன்றி மௌனமாகவே அழூகின்ற ஓராயிரம் வலிகளோடு பல பேர் இங்கே"
"காயங்கள் இன்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை"
மிகுந்த மன உளைச்சலோடு,
உங்கள் அன்புத் தோழி
Last edited: