மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஐயோ அம்மா
கற்பனையான கதையைப் படிக்கும் பொழுதே மனம் பதறுதே
நிஜத்தில் இது போல கொடுமைகளை அனுபவிக்கும் பெண்களின் நிலை?
அத்திப்பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தையா இருப்பது போல அழகு, வசதின்னு டீஸண்ட்டா இருக்கும் ஜெய்யும் அவன் அண்ணனும் நாறப் பயல்களா இருக்கானுங்களே
காயத்ரி படம்தான் ஞாபகத்துக்கு வருது
ஆனால் ஜெய்யின் வீட்டில் அதை விட மோசம் போலவே
ஜெய்யின் அண்ணன் ஒரு முழுமையான ஆண் இல்லையோ?
அப்போ அந்தக் குழந்தை?
அது ஜெய்யின் மகனா?
ஆனால் பால் கொடுக்கலையான்னு அண்ணனே கேட்கிறான்னா குடிச்சேன்னு பொய் சொன்னியான்னு ஜெய் கேட்கிறான்னா குருமூர்த்தி சொல்வது போல இன்னும் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலவே
அண்ணி என்பவளிடம் (உண்மையாகவே அவள் அண்ணிதானா? இல்லை ஜெய்யின் மனைவியா?) ஈனத்தனமான உறவு வைத்திருக்கும் இந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இஞ்ஜினியர் நிச்சயம் நல்ல வேலை பார்த்து மாதம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பாதிப்பான்னு எனக்கு தோணலை
கீதா காலை விட்டது சாக்கடையல்ல கூவம்
உடம்பு நாறித்தான் வெளியே வர முடியும்ன்னு சொல்லுறதைப் பார்த்தால் கீதாவுக்கு இதை விட இன்னும் மோசமான துன்பங்கள் இருக்கும் போலவே
கீதாவை வைத்து ப்ளூ பிலிம் ஏதாவது எடுத்திருப்பாங்களோ?
அந்த வீடியோஸ்ஸைக் காட்டி பயந்த சுபாவமுள்ள கீதாவை மிரட்டுவாங்களோ?
குரு நிச்சயம் காப்பாற்றுவான்
அதில் சந்தேகமில்லை
ஆனால் திமிராப் பேசுற அந்த அண்ணி சாக்கடைப் பன்னியின் வாயை கீதா உடைக்கணும்