காத்திருந்த காத்திருப்பு வீணாகலை.....ஹாய் பொன்ஸ்,
பூ மனமும்
கல்லானதே!
காதல் அன்புக்குப் பகையோ...?
மலர் மனமும்
மெழுகானதே!
காதல் பலருக்கு தீயோ...?
உயிர் பூவின் சுவாசத்தில்
ஓர் மூச்சு பதறி விட்டால்,
நேர் மறை எண்ணங்களும்
எதிர் மறையாய் திரும்பி விட்டால்,
காதல் மனம் கூட
தத்தித் தாவும் குரங்கினம் போல்
புத்தி மாறி கத்தியாய்
உயிர் பூவைச் சாய்த்திட்டால்....
காதல்! காதல்! காதல்! - அது
காதல் போயின் சாதலோ...!
இல்லை....
காதல் நோயின் மோதலோ...!
இல்லை...
காதல் தீயின் வேகத்தில்
தவறும் மனதின் சோகத்தில்
உதறும் வாழ்வின் வழித்தடமோ....?
நன்றி.
அருமையான கவிதை மித்ரா