ஹாய் பொன்ஸ்,
இனிய காலை வணக்கம்.
அதிகாலை சுபவேளையில்
இயற்கையின் பசுமையுடன்
ஆற்று நீர் குளியல்,
கோவில் பூஜை,
நாற்று நடவு,
கிராமிய பாட்டு,
களை பறித்தல்,
காலை வாரும் சீண்டல்,
இலை மறையாய் காதல்,
படிக்கப் படிக்க ஆனந்தம்,
ரசிக்க ரசிக்க சந்தோஷம்,
ஆயிரம் ஆயிரம் பணமிருந்தாலும்,
ஆடம்பர வளம் இருந்தாலும்,
அன்புக்கு ஏங்கும்
அழகிய நெஞ்சுக்கு
அருமருந்தாய் அமைவது...
அமைதியாய் வீசும் ஆற்றோரக் காற்றும்,
நிம்மதியாய் தூங்கும் கீற்றோலை வீடும்,
அமிர்தம் என்றால் மிகையில்லை தோழி...!
மனதோடு பேசியவள்
உறவோடு பேசுகின்றாள்!
தனிமையில் வாடியவள்
இனிமைகளை தேடுகின்றாள்!
கனிவான நேசத்தில்
கலந்துவிட்ட கன்னியவள்,
பணிவான பாசத்தில்
பழகிவிட்ட பதுமையவள்,
துளிர்த்து விட்ட காதலுடன்
துணிந்து அகம் மீட்டுகின்றாள்!
விழித்து விட்ட காதல் மகள்
படித்து வந்த கலைகளுடன்
விடியல் தேடித் தருவாளோ...?
வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி