அதிர்ச்சியில் கணேஷிற்கு பேச்சு வரவில்லை ....
"சார் லைன்ல இருக்கீங்களா?"
"ம்ம். இருக்கேன்.... நீங்க எங்க இருந்து பேசறீங்க, எப்படி உங்களை அவங்க காண்டாக்ட் பண்ணினாங்க?, ஏன்னா நானே இப்போ போலீஸ் ஹெட் குவார்ட்டர்ஸ் -ல தான் இருக்கேன் ", பேசிய கணேஷ் பதட்டமாய் இருந்தான்....
"சார்.. பொதுமக்கள் இங்க வரணும்-னு அவசியமில்லை. ம்ம்ம்ம்.", சிறிது யோசித்தவர் .., "சரி.. நீங்க ஹெட் குவார்ட்டர் பக்கமா இருக்கிறதால வாங்க... நாங்க காவலன் டீம், பக்கமாத்தான் இருக்கோம், அங்க இருக்கற ஆபீசரை கேளுங்க, எங்க ப்ளாக் வந்து செல்வம்-னு கேட்டு வாங்க.."
அடுத்த சில நிமிடத்தில் அவர் முன் கணேஷ் ஆஜர்..."ஸார் ...நான் கணேஷ், இப்போ பத்துஎங்க இருந்து மெசேஜ் பண்ணி இருக்காங்க?, எப்போ வந்தது?", இவன் டென்ஷன் அவரை தொற்றவில்லை.., ஒரு நாளைக்கு எவ்வளவு பார்க்கிறார்?
அமைதியாய், "சார் பதறாதீங்க.. இது SMS -ல்லாம் கிடையாது.. காவலன் -ன்னு ஒரு ஆப்..[செயலி]. இத உங்க மொபைல்-ல டவுன் லோட் பண்ணி, அதுக்கு தேவையான தகவல்களை குடுத்து இருந்தீங்கன்னா... எமெர்ஜென்சி நேரத்துல.. இதுல இருக்கிற ரெட் பட்டனை அமுக்கினா, அஞ்சாவது செகண்ட்-ல இங்க தகவல் வந்துடும்.. அப்படித்தான் எங்களுக்கு மெசேஜ் வந்தது...அவங்க இந்த ஆப் . ரிஜிஸ்டர் பண்ணும்போது உங்க நம்பரை கொடுத்து இருந்தாங்கன்னா, உங்களுக்கும் மெசேஜ் வந்திருக்கும் பாருங்க..."
அலைபேசியை பார்த்தான்.. தகவல் இருந்தது... ஆனால் அது மூளையில் உரைத்தால் தானே?, திரும்பவும் ஷானுவை அழைத்தான்..., அவனுக்கு அவள் குரல் கேட்டால்தான் நிம்மதி.. எத்தனை படித்திருந்தும், எத்தனை புத்திசாலியாய் இருந்தும், மனிதன் என்றும் உணர்வுகளின் அடிமைதான் என்பதை கணேஷ் நிரூபித்தான்.... பத்திரிக்கைகளில் எத்தனை பார்க்கிறான்? ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த பொண்ணை கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்த கொடூரம், [அடுத்த நாட்களில் அதே நிலையத்தில் அதே இடத்தில் நின்று பார்த்த அனுபவம்] மேலும் விதிர்க்க வைத்தது.
ஷண்மதியின் நம்பர் மீண்டும் அணைத்துவைக்கப்பட்டு இருந்தது... "இப்போ எப்படி சார்.. ஆஃப் பண்ணிட்டாங்களே?" , கேட்கும் கணேஷின் குரல் நடுங்கியது...
"சார் கவனிங்க.. அவங்க SOS கொடுத்த உடனேயே அது எந்த ஏரியா, எங்கேயிருந்து சிக்னல் வருதுன்னு எங்களுக்கு தெரிஞ்சிடும்.. நாங்க ரோந்து போலீஸ்-க்கு தகவலை ஏற்கனவே அனுப்பிட்டோம், இந்நேரம் அவங்களை நெருங்கி இருப்பாங்க.... மொபைல் ஆஃப் பண்ணி இருந்தாலும், அந்த ஏரியாவை விட்டு அதிக தூரம் போய் இருக்க முடியாது"
கணேஷின் கண்ணுக்குள், இள மஞ்சள் புடவையில், அன்றலர்ந்த மலர் போல, இவன் காதலுக்கு "ம்ம்ம்...", என்று சம்மதம் சொன்ன ஷானுவே நின்றாள்... அவனை அறியாமலே கண்களில் நீர்... நிறைந்தது...
அவளை யோசிக்கும்போதே, அவள் கூறிய "ஆல் இன் தி கேம்", அபத்தமாய் நினைவுக்கு வர, "இல்ல, அவளுக்கு ஒன்னும் ஆகாது", என்று திரும்ப திரும்ப ஜெபித்தான்.... கூடவே, அவள் சொன்ன "நான் ரிப்போர்ட்டர், எப்பவும், எங்கயும் தயாரா இருப்பேன்",ம் நினைவுக்கு வந்தது... தைரியமான பெண்தான்... ஆனாலும்.. சற்றே தெளிந்து, "சிக்னல் எந்த ஏரியாலேர்ந்து வந்தது?", காவலரைக் கேட்டான்..
"தாம்பரம் டு மதுரவாயல் பை-பாஸ் ரோட், திருநீர்மலை-க்கு முன்னால ன்னு சிக்னல் காமிச்சது..."
"தேங்க்ஸ் சார்", கிளம்பியிருந்தான்...
காரில் இருந்தாள் ஷானு, கைகள் இரண்டையும், வாயையும் கட்டி பின் சீட்டில் போட்டிருந்தான் C.K என்று அனைவராலும் அழைக்கப்படும் சந்திரகுமார்... "சே... எந்த பிரேம்-லயும் மாட்டாத மாதிரி, சிங்கப்பூர்-ல இருந்துகிட்டே பூபேஷை பார்ட்னர் ஆக்கி, அவங்க பெரியப்பாவோட பதவியை, அதிகாரத்தை வச்சு அழகா இந்த கடத்தல் தொழிலை பண்ணிக்கிட்டு இருந்தேன்... எப்போ அந்த கோவை கார் விபத்து நடந்ததோ, அப்போ ஆரம்பிச்சது.... எல்லாம் இந்த ஷண்மதி-யினால... கட்டுரை எழுதி, என்னோட கடத்தல் லாஜிக் மொத்தமும் வெளிய விட்டு, ஆள் மாறாட்டத்தை கண்டு பிடிச்சு....,", "ஷிட் ", கையை இருக்கையில் குத்திக் கொண்டே " கடைசியா ஒரே கண்டைனர் அனுப்பினேன்.. அதையும் தேடி யாரோ விசாரிச்சு மோப்பம் பிடிச்சு....எல்லாம் போச்சு... எல்லாம் இந்த ஒரு பொண்ணால.... வர்ற ஆத்திரத்துக்கு ... நீ மயக்கம் தெளிஞ்சு எந்திரி.... உன்னை வச்சு அந்த போலீசுக்கும், உன் லவ்வர் , அந்த கணேஷுக்கு தண்ணீ காமிக்கலை .. நான் C.K. இல்லை..", தனியாய் புலம்பிக் கொண்டிருந்தான்..., ஆள் அரவம் இல்லாத அந்த கிரஷர்கள் நிறைந்து இருக்கும் பகுதியில்....
அவன் புலம்புவது பாதி கேட்டாலும் எந்த விதமான அசைவும் இல்லாமல் கிடந்தாள் ஷானு... ஏர்போர்ட்-இல் இவள் புக் செய்த காருக்கு காத்திருக்க, அதே நிறுவன காரில் இவன் வர, கிஞ்சித்தும் சந்தேகப்படாமல், pin நம்பரை கூறி ஏறினாள்... அவனும் சரி பார்ப்பது போல் நடித்து, அவளிடம் திரும்பியது வரையே நினைவில் இருந்தது.. முகத்தில், மயக்க மருந்தினை அனாயாசமாக ஸ்பிரே செய்திருந்தான் சந்திரகுமார்.. நொடிகளில் சுதாரித்து, மூச்சு அடக்கி இருந்தாள் , இல்லையெனில், நினைவு திரும்ப இன்னமும் தாமதம் ஆகி இருக்கும்...
அந்தி மயங்கும் நேரம் .. தூரத்தில் கிரஷர் இயங்கும் ஓசை தவிர எதுவும் இல்லை.... அப்படியே படுத்துக் கிடந்தாள்... அசைந்தால், அவள் உயிருக்கு உத்திரவாதமில்லை, கூடவே பகடையாய் பயன்படுத்தப்படுவாள் என்பதும் நிச்சயமாய் தெரிந்தது... ஷானுவின் உயிர் அவன் குறியாய் இருந்தால், இந்நேரம் காத்திருப்பானேன்?
இயற்க்கை உபாதையை நேர் செய்ய அவன் வெளியேற, சத்தமின்றி தன கைப்பையை திறந்து அலைபேசியில் இருந்த காவலன் செயலி-க்கு விரல்களை ஓட்டி... அதிலிருந்த சிகப்பு பொத்தானை அமுக்கினாள்... இன்டர்நெட் தொடர்புக்குகெல்லாம் நேரமில்லை... பேசவும் இயலாது.. அவள் வாழ்நாளை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஐந்து நொடிகள்.... எஸ்.... சிக்னல் சென்றிருக்கும்... காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு வரும்.. மாட்டிக்கொள்வாள்...
அலைபேசியை ஆப் செய்து கைப்பையில் போட்டு , மீண்டும் மயக்க நாடகம் துவக்கினாள் ..
அதிகபட்சமாக அரைமணி நேரம் கடத்த வேண்டும்.... உதவி வரும் வரை.. வரும் நிச்சயம் வரும்....
ரோந்துப் படையினருடன் மிகச் சரியாக சிக்னல் வந்த இடத்தில வந்து நின்றார் DCP, சிறியதாய் ஒரு வழி, லாரிகளுக்கானது... மலையை ஒட்டி இருந்தது.... மஃப்டியில் இருந்தவர் மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்.... மரங்களின் ஊடே ஒரு வாகனம் மறைவாய் இருந்தது தெரிய, சின்னதாய் விசிலில் சைகை தர, பத்து நிமிடத்தில் காரை சுற்றி வளைத்தனர், அதில் இருந்த C.K. சுதாரிக்கும் முன் அவன் முன் துப்பாக்கி பிடித்தபடி நின்றிருந்தார் DCP .. இத்தனை வேகமாய் எப்படி கண்டுபிடித்தனர் என்கிற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், தப்பிப்பது ஒன்றே குறிக்கோளாய் கதவைத் திறந்து ஓட ஆரம்பித்தான் சந்திரகுமார்.. " சி.கே. ஓடாத.. நில்லு...", எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை... "ஓடாத.. கண்டிப்பா ஷூட் பண்ணிடுவேன்".... மேலும் அவன் ஓட...
விஷ்க் .. விஷ்க்..., சி.கே. சடலமாய் சரிந்தான்....
"சார் லைன்ல இருக்கீங்களா?"
"ம்ம். இருக்கேன்.... நீங்க எங்க இருந்து பேசறீங்க, எப்படி உங்களை அவங்க காண்டாக்ட் பண்ணினாங்க?, ஏன்னா நானே இப்போ போலீஸ் ஹெட் குவார்ட்டர்ஸ் -ல தான் இருக்கேன் ", பேசிய கணேஷ் பதட்டமாய் இருந்தான்....
"சார்.. பொதுமக்கள் இங்க வரணும்-னு அவசியமில்லை. ம்ம்ம்ம்.", சிறிது யோசித்தவர் .., "சரி.. நீங்க ஹெட் குவார்ட்டர் பக்கமா இருக்கிறதால வாங்க... நாங்க காவலன் டீம், பக்கமாத்தான் இருக்கோம், அங்க இருக்கற ஆபீசரை கேளுங்க, எங்க ப்ளாக் வந்து செல்வம்-னு கேட்டு வாங்க.."
அடுத்த சில நிமிடத்தில் அவர் முன் கணேஷ் ஆஜர்..."ஸார் ...நான் கணேஷ், இப்போ பத்துஎங்க இருந்து மெசேஜ் பண்ணி இருக்காங்க?, எப்போ வந்தது?", இவன் டென்ஷன் அவரை தொற்றவில்லை.., ஒரு நாளைக்கு எவ்வளவு பார்க்கிறார்?
அமைதியாய், "சார் பதறாதீங்க.. இது SMS -ல்லாம் கிடையாது.. காவலன் -ன்னு ஒரு ஆப்..[செயலி]. இத உங்க மொபைல்-ல டவுன் லோட் பண்ணி, அதுக்கு தேவையான தகவல்களை குடுத்து இருந்தீங்கன்னா... எமெர்ஜென்சி நேரத்துல.. இதுல இருக்கிற ரெட் பட்டனை அமுக்கினா, அஞ்சாவது செகண்ட்-ல இங்க தகவல் வந்துடும்.. அப்படித்தான் எங்களுக்கு மெசேஜ் வந்தது...அவங்க இந்த ஆப் . ரிஜிஸ்டர் பண்ணும்போது உங்க நம்பரை கொடுத்து இருந்தாங்கன்னா, உங்களுக்கும் மெசேஜ் வந்திருக்கும் பாருங்க..."
அலைபேசியை பார்த்தான்.. தகவல் இருந்தது... ஆனால் அது மூளையில் உரைத்தால் தானே?, திரும்பவும் ஷானுவை அழைத்தான்..., அவனுக்கு அவள் குரல் கேட்டால்தான் நிம்மதி.. எத்தனை படித்திருந்தும், எத்தனை புத்திசாலியாய் இருந்தும், மனிதன் என்றும் உணர்வுகளின் அடிமைதான் என்பதை கணேஷ் நிரூபித்தான்.... பத்திரிக்கைகளில் எத்தனை பார்க்கிறான்? ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த பொண்ணை கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்த கொடூரம், [அடுத்த நாட்களில் அதே நிலையத்தில் அதே இடத்தில் நின்று பார்த்த அனுபவம்] மேலும் விதிர்க்க வைத்தது.
ஷண்மதியின் நம்பர் மீண்டும் அணைத்துவைக்கப்பட்டு இருந்தது... "இப்போ எப்படி சார்.. ஆஃப் பண்ணிட்டாங்களே?" , கேட்கும் கணேஷின் குரல் நடுங்கியது...
"சார் கவனிங்க.. அவங்க SOS கொடுத்த உடனேயே அது எந்த ஏரியா, எங்கேயிருந்து சிக்னல் வருதுன்னு எங்களுக்கு தெரிஞ்சிடும்.. நாங்க ரோந்து போலீஸ்-க்கு தகவலை ஏற்கனவே அனுப்பிட்டோம், இந்நேரம் அவங்களை நெருங்கி இருப்பாங்க.... மொபைல் ஆஃப் பண்ணி இருந்தாலும், அந்த ஏரியாவை விட்டு அதிக தூரம் போய் இருக்க முடியாது"
கணேஷின் கண்ணுக்குள், இள மஞ்சள் புடவையில், அன்றலர்ந்த மலர் போல, இவன் காதலுக்கு "ம்ம்ம்...", என்று சம்மதம் சொன்ன ஷானுவே நின்றாள்... அவனை அறியாமலே கண்களில் நீர்... நிறைந்தது...
அவளை யோசிக்கும்போதே, அவள் கூறிய "ஆல் இன் தி கேம்", அபத்தமாய் நினைவுக்கு வர, "இல்ல, அவளுக்கு ஒன்னும் ஆகாது", என்று திரும்ப திரும்ப ஜெபித்தான்.... கூடவே, அவள் சொன்ன "நான் ரிப்போர்ட்டர், எப்பவும், எங்கயும் தயாரா இருப்பேன்",ம் நினைவுக்கு வந்தது... தைரியமான பெண்தான்... ஆனாலும்.. சற்றே தெளிந்து, "சிக்னல் எந்த ஏரியாலேர்ந்து வந்தது?", காவலரைக் கேட்டான்..
"தாம்பரம் டு மதுரவாயல் பை-பாஸ் ரோட், திருநீர்மலை-க்கு முன்னால ன்னு சிக்னல் காமிச்சது..."
"தேங்க்ஸ் சார்", கிளம்பியிருந்தான்...
காரில் இருந்தாள் ஷானு, கைகள் இரண்டையும், வாயையும் கட்டி பின் சீட்டில் போட்டிருந்தான் C.K என்று அனைவராலும் அழைக்கப்படும் சந்திரகுமார்... "சே... எந்த பிரேம்-லயும் மாட்டாத மாதிரி, சிங்கப்பூர்-ல இருந்துகிட்டே பூபேஷை பார்ட்னர் ஆக்கி, அவங்க பெரியப்பாவோட பதவியை, அதிகாரத்தை வச்சு அழகா இந்த கடத்தல் தொழிலை பண்ணிக்கிட்டு இருந்தேன்... எப்போ அந்த கோவை கார் விபத்து நடந்ததோ, அப்போ ஆரம்பிச்சது.... எல்லாம் இந்த ஷண்மதி-யினால... கட்டுரை எழுதி, என்னோட கடத்தல் லாஜிக் மொத்தமும் வெளிய விட்டு, ஆள் மாறாட்டத்தை கண்டு பிடிச்சு....,", "ஷிட் ", கையை இருக்கையில் குத்திக் கொண்டே " கடைசியா ஒரே கண்டைனர் அனுப்பினேன்.. அதையும் தேடி யாரோ விசாரிச்சு மோப்பம் பிடிச்சு....எல்லாம் போச்சு... எல்லாம் இந்த ஒரு பொண்ணால.... வர்ற ஆத்திரத்துக்கு ... நீ மயக்கம் தெளிஞ்சு எந்திரி.... உன்னை வச்சு அந்த போலீசுக்கும், உன் லவ்வர் , அந்த கணேஷுக்கு தண்ணீ காமிக்கலை .. நான் C.K. இல்லை..", தனியாய் புலம்பிக் கொண்டிருந்தான்..., ஆள் அரவம் இல்லாத அந்த கிரஷர்கள் நிறைந்து இருக்கும் பகுதியில்....
அவன் புலம்புவது பாதி கேட்டாலும் எந்த விதமான அசைவும் இல்லாமல் கிடந்தாள் ஷானு... ஏர்போர்ட்-இல் இவள் புக் செய்த காருக்கு காத்திருக்க, அதே நிறுவன காரில் இவன் வர, கிஞ்சித்தும் சந்தேகப்படாமல், pin நம்பரை கூறி ஏறினாள்... அவனும் சரி பார்ப்பது போல் நடித்து, அவளிடம் திரும்பியது வரையே நினைவில் இருந்தது.. முகத்தில், மயக்க மருந்தினை அனாயாசமாக ஸ்பிரே செய்திருந்தான் சந்திரகுமார்.. நொடிகளில் சுதாரித்து, மூச்சு அடக்கி இருந்தாள் , இல்லையெனில், நினைவு திரும்ப இன்னமும் தாமதம் ஆகி இருக்கும்...
அந்தி மயங்கும் நேரம் .. தூரத்தில் கிரஷர் இயங்கும் ஓசை தவிர எதுவும் இல்லை.... அப்படியே படுத்துக் கிடந்தாள்... அசைந்தால், அவள் உயிருக்கு உத்திரவாதமில்லை, கூடவே பகடையாய் பயன்படுத்தப்படுவாள் என்பதும் நிச்சயமாய் தெரிந்தது... ஷானுவின் உயிர் அவன் குறியாய் இருந்தால், இந்நேரம் காத்திருப்பானேன்?
இயற்க்கை உபாதையை நேர் செய்ய அவன் வெளியேற, சத்தமின்றி தன கைப்பையை திறந்து அலைபேசியில் இருந்த காவலன் செயலி-க்கு விரல்களை ஓட்டி... அதிலிருந்த சிகப்பு பொத்தானை அமுக்கினாள்... இன்டர்நெட் தொடர்புக்குகெல்லாம் நேரமில்லை... பேசவும் இயலாது.. அவள் வாழ்நாளை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஐந்து நொடிகள்.... எஸ்.... சிக்னல் சென்றிருக்கும்... காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு வரும்.. மாட்டிக்கொள்வாள்...
அலைபேசியை ஆப் செய்து கைப்பையில் போட்டு , மீண்டும் மயக்க நாடகம் துவக்கினாள் ..
அதிகபட்சமாக அரைமணி நேரம் கடத்த வேண்டும்.... உதவி வரும் வரை.. வரும் நிச்சயம் வரும்....
ரோந்துப் படையினருடன் மிகச் சரியாக சிக்னல் வந்த இடத்தில வந்து நின்றார் DCP, சிறியதாய் ஒரு வழி, லாரிகளுக்கானது... மலையை ஒட்டி இருந்தது.... மஃப்டியில் இருந்தவர் மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்.... மரங்களின் ஊடே ஒரு வாகனம் மறைவாய் இருந்தது தெரிய, சின்னதாய் விசிலில் சைகை தர, பத்து நிமிடத்தில் காரை சுற்றி வளைத்தனர், அதில் இருந்த C.K. சுதாரிக்கும் முன் அவன் முன் துப்பாக்கி பிடித்தபடி நின்றிருந்தார் DCP .. இத்தனை வேகமாய் எப்படி கண்டுபிடித்தனர் என்கிற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், தப்பிப்பது ஒன்றே குறிக்கோளாய் கதவைத் திறந்து ஓட ஆரம்பித்தான் சந்திரகுமார்.. " சி.கே. ஓடாத.. நில்லு...", எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை... "ஓடாத.. கண்டிப்பா ஷூட் பண்ணிடுவேன்".... மேலும் அவன் ஓட...
விஷ்க் .. விஷ்க்..., சி.கே. சடலமாய் சரிந்தான்....