UK - 4
சுமி அதிர்ச்சியில் சமைந்து நின்றாள், அவனுமே அதிர்ச்சியில் தான் இருந்தான் 'நானா அவளிடம் உரிமையோடு பேசினேன், எனக்கு அந்த உரிமை இல்லையே பின்னே நான் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும்' இவ்வாறு பலது யோசித்து சாப்பிடாது சென்று விட்டான்.
அவளும் எதுவும் கேட்கும் நிலைமையில் இல்லை.... பாத்திரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அறையை நோக்கி சென்றாள், அங்கு அவள் வரும் முன்னமே அவன் படுத்து விட்டான், படுக்கையில் இருந்து போர்வை, தலையணை எடுத்து கீழ் விரித்து படுத்து கொண்டாள்.
இருவரும் படுத்தார்களே தவிர உறங்க வில்லை, அவள் தன் அருகில் படுக்காது கீழே படுத்ததும் அவனுக்கு வருத்தத்தை தந்தது ' தன் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் முக்கியம் காரணம்' என்று அவன் நினைத்து கொண்டான். ஆனால் அவளோ ' நாம் இவனுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோம் , இனி இவனிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும்’ என்று முடிவு எடுத்துவிட்டு தூங்கிவிட்டாள்.
ஆனால் பாரதிக்கு தூக்கம் வந்த பாடு இல்லை தான்...... ஏன், அவளிடம் அப்படி நடந்து கொண்டோம் என்று யோசித்து கொண்டு இருந்தான். அவனுக்கு தெரியவில்லை அவன் மனதில் அவள் மீது காதல் இருப்பது, அதை அவன் இன்னும் உணரக்கூட இல்லை. ஒரு இனிமையான அதிர்ச்சி சமயத்தில் அவள் மீது உள்ள காதலை அவன் உணரப்போகிறான் என்று அவனுக்கு தெரியவில்லை.
காலையில் அவளுக்கு முன்பே எழுந்து ஆபீஸ் சென்று விட்டான். அவளுக்குதான் நிம்மதியாக இருந்தது அவன் முகத்தை பார்க்க வேண்டாமே என்று..... வழக்கம் போல் அவளுடைய காலை வேலையில் தன் கவனத்தை திருப்பி கொண்டாள்..... அவனை பற்றியே மறந்து விட்டாள், மதியம் அவள் அத்தை கேட்டதற்கு ஆஃபீஸ்ல் வேலை அதிகம்.....வந்தாலும்தான் வருவார் என்று சொல்லி விட்டாள்...இரவு ஒரு ஏழு மணிக்கு வந்தவன் தன் அம்மாவை காண சென்றான்.
"அம்மா நாளைக்கு காலையில் கனடா செல்கிறேன்....” என்றான்.
"ம்ம்... போயிட்டு எப்போ வருவ கோவிலில் ஒரு நாள் உனக்கும், சுமிக்கும் சடங்கு செய்து விட்டு சீக்கிரம் வரவேற்பு வைக்க வேண்டும்" என்றார்.
"அம்மா இப்பொழுது அதற்கு என்ன அவசரம் ஒரு ஆறு மாதம் கழித்து வைத்து கொள்ளலாம்" என்றான்.
"அதற்கு இல்லை கண்ணா.... கல்யாணம் அவசரமாக முடிந்து விட்டது, சடங்கு பண்றதாவது சம்பிருதாயம் படி நடக்க வேண்டும்... இல்லை கண்ணு பட்டு விடும்..." என்றார்
"அம்மா எனக்கு இதில் எல்லா நம்பிக்கை இல்லை, அவளையும் கஷ்டபடுத்தாதீர்கள்"
"இல்லடா நான் சுமிமாகிட்ட கேட்டு விட்டேன்" என்றார்.
கண்களில் ஒரு ஒளியுடன் "அதற்கு உங்கள் சுமிமா என்ன சொன்னாள்" என்றான் அந்த சுமிமாவில் ஒரு அழுத்தத்துடன்.
" அவள் உன்னிடம் கேட்க சொன்னாள், உனக்கு சம்மதம் என்றாள் அவளுக்கும் சம்மதம்மாம்.. அதான் உன்னிடம் கேட்டேன்"
இந்த பதிலை கேட்டு அவன் எப்படி உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை 'அவள் எனக்கு முக்கியத்துவம் தருகிறாள்' என்று எண்ணினான்.