Thangammai - Precap 7

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
இருவருக்குமே உறக்கம் இல்லை... மற்றவரின் விழிப்பு ஒருவர் அறிந்ததாகவே இருந்தது. ஆனாலும் பேசிக்கொள்ளவில்லை.. நடந்து எல்லாம் தங்களை மீறிய செயலாகவே இருந்தாலும் அது பிடித்திருக்கிறது என்பது மட்டுமே நிஜம் என்று உணர்ந்தனர்..

தங்கம்மைக்கு ஒருவித ஆச்சர்யம் என்றால், தீனாவிற்கு அது இன்னமும் கூடுதலாய் இருந்தது..

‘நானா இப்படி??’ என்று...

அவனின் தோள்களில் தான் தலை வைத்திருந்தாள். அணைத்தது போல்தான் பிடித்திருந்தான்.. இருந்தும் பேச்சில்லை.. தங்கம்மையின் கண்கள் மூடியிருக்க, தீனாவின் கரமோ அவளின் வெற்று தோளை வருடியபடி இருந்தது..

இருவர் மனத்திலும் மற்றவர் பற்றிய சிந்தனை.. இப்போது அவன் என்ன நினைப்பான்??!! என்றும் இப்போது அவள் என்ன நினைப்பாள் என்றும்..

----------------------------------------------------

“சாரி கேட்டீங்க.. அப்படியே கொன்னுடுவேன்...” என்று தங்கம்மை சொல்ல, “ஹா ஹா அப்போ ஒன்ஸ் மோர் கேட்கவா??!!!” என்றான் தீனா..

பதிலுக்கு பதில் பேசியவளுக்கு இப்போது அப்படியே பேச்சு நின்றுபோக, “அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...” என்று தீனா கேட்க,

“ம்ம்ச் அதெல்லாம் முடியாது..” என்று அவளும் சொல்ல,
“அப்போ.. இதெல்லாம் உனக்கு பிடிக்கலைன்னு தான் அர்த்தம்.. அப்படிதான் நான் மீன் பண்ணிப்பேன்..” என்று இவனும் சொல்ல,


‘அய்யோடா...’ என்று பார்த்தாள்.

“அப்போ சொல்லு...” என,

“ஹ்ம்ம்.. பொதுவா ஜென்ட்ஸ்க்கு மட்டும் தான் இந்த கனவு கற்பனை ரொமாண்டிக் தாட்ஸ் எல்லாம் இருக்கும்னு இல்லை.. நாங்களும் யோசிப்போம்.. புரிஞ்சதா...” என்று தங்கம்மை முகத்தினில் ஒரு பாவனை காட்டி சொல்ல,

“ஆ..!! அப்புறம்..” என்றான் தீனா கொஞ்சம் ஆவலாய்..

---------------------------------------------------------------


“எல்லாம் பேக் பண்ணியாச்சா ??!!” என்று ரோஜா கேட்க,

“ம்ம் ஆச்சு அண்ணி.. இனி அவர் வந்து ஒன்ஸ் செக் பண்ணிட்டா போதும்..” என்று தங்கம்மையும் சிரித்தபடி சொல்ல,

“பார்ரா இப்போதான் உங்க அத்தைக்கு இப்படியொரு சிரிப்பு வருதுடா..” என்று மகனிடம் சொல்வது போல் ரோஜா கேலி பேச, தங்கம்மையின் சிரிப்பு இன்னமும் மலர்ந்தது.

தீனா வந்தவனோ “எல்லாம் ஓகேவா??” என்று பார்க்க,

“என் சர்டிபிகேட்ஸ் இருக்க பைல் இதுல இல்லையே??!!” என்று தீனா சொல்ல,

“அது எல்லாமே கொண்டு போகவா இல்லை உங்களுக்குத் தேவையானது மட்டும் போதுமான்னு கேட்கத்தான் அந்த பைல் அப்படியே வச்சிருக்கேன்..” என்றவள் அந்த ஜிப் பைல் வந்து கொடுக்க,

“இப்படி உக்கார்ந்து, நான் சொல்றதை மட்டும் எடுத்து கொடு..” என்றவன், அவனும்
அவளின் அருகேயே அமர்ந்துகொண்டு சொல்ல, தங்கம்மையும் அவன் சொல்ல சொல்ல எடுத்துக் கொடுதவளின் கரத்தினில் அடுத்து வந்து சிக்கியது தீனா, ரூபினி இருவரின் பிரிவு பத்திரம்..
 

banumathi jayaraman

Well-Known Member
அதான், அவிய இரண்டு
பேரும் பிரிஞ்சு பிரிவுப்
பத்திரமே இருக்கே?
யூவு டோன்ட் ஒர்ரி, தங்கம்

சிங்கிள் பெட் ரூம் பிளாட்ல
போயி செட்டிலாலாலாலாகுற
வழியைப் பாரு, தங்கம்மை
 
Last edited:

priya raghavan

Well-Known Member
இருவருக்குமே உறக்கம் இல்லை... மற்றவரின் விழிப்பு ஒருவர் அறிந்ததாகவே இருந்தது. ஆனாலும் பேசிக்கொள்ளவில்லை.. நடந்து எல்லாம் தங்களை மீறிய செயலாகவே இருந்தாலும் அது பிடித்திருக்கிறது என்பது மட்டுமே நிஜம் என்று உணர்ந்தனர்..

தங்கம்மைக்கு ஒருவித ஆச்சர்யம் என்றால், தீனாவிற்கு அது இன்னமும் கூடுதலாய் இருந்தது..

‘நானா இப்படி??’ என்று...

அவனின் தோள்களில் தான் தலை வைத்திருந்தாள். அணைத்தது போல்தான் பிடித்திருந்தான்.. இருந்தும் பேச்சில்லை.. தங்கம்மையின் கண்கள் மூடியிருக்க, தீனாவின் கரமோ அவளின் வெற்று தோளை வருடியபடி இருந்தது..

இருவர் மனத்திலும் மற்றவர் பற்றிய சிந்தனை.. இப்போது அவன் என்ன நினைப்பான்??!! என்றும் இப்போது அவள் என்ன நினைப்பாள் என்றும்..

----------------------------------------------------

“சாரி கேட்டீங்க.. அப்படியே கொன்னுடுவேன்...” என்று தங்கம்மை சொல்ல, “ஹா ஹா அப்போ ஒன்ஸ் மோர் கேட்கவா??!!!” என்றான் தீனா..

பதிலுக்கு பதில் பேசியவளுக்கு இப்போது அப்படியே பேச்சு நின்றுபோக, “அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...” என்று தீனா கேட்க,

“ம்ம்ச் அதெல்லாம் முடியாது..” என்று அவளும் சொல்ல,
“அப்போ.. இதெல்லாம் உனக்கு பிடிக்கலைன்னு தான் அர்த்தம்.. அப்படிதான் நான் மீன் பண்ணிப்பேன்..” என்று இவனும் சொல்ல,


‘அய்யோடா...’ என்று பார்த்தாள்.

“அப்போ சொல்லு...” என,

“ஹ்ம்ம்.. பொதுவா ஜென்ட்ஸ்க்கு மட்டும் தான் இந்த கனவு கற்பனை ரொமாண்டிக் தாட்ஸ் எல்லாம் இருக்கும்னு இல்லை.. நாங்களும் யோசிப்போம்.. புரிஞ்சதா...” என்று தங்கம்மை முகத்தினில் ஒரு பாவனை காட்டி சொல்ல,

“ஆ..!! அப்புறம்..” என்றான் தீனா கொஞ்சம் ஆவலாய்..

---------------------------------------------------------------


“எல்லாம் பேக் பண்ணியாச்சா ??!!” என்று ரோஜா கேட்க,

“ம்ம் ஆச்சு அண்ணி.. இனி அவர் வந்து ஒன்ஸ் செக் பண்ணிட்டா போதும்..” என்று தங்கம்மையும் சிரித்தபடி சொல்ல,

“பார்ரா இப்போதான் உங்க அத்தைக்கு இப்படியொரு சிரிப்பு வருதுடா..” என்று மகனிடம் சொல்வது போல் ரோஜா கேலி பேச, தங்கம்மையின் சிரிப்பு இன்னமும் மலர்ந்தது.

தீனா வந்தவனோ “எல்லாம் ஓகேவா??” என்று பார்க்க,

“என் சர்டிபிகேட்ஸ் இருக்க பைல் இதுல இல்லையே??!!” என்று தீனா சொல்ல,

“அது எல்லாமே கொண்டு போகவா இல்லை உங்களுக்குத் தேவையானது மட்டும் போதுமான்னு கேட்கத்தான் அந்த பைல் அப்படியே வச்சிருக்கேன்..” என்றவள் அந்த ஜிப் பைல் வந்து கொடுக்க,

“இப்படி உக்கார்ந்து, நான் சொல்றதை மட்டும் எடுத்து கொடு..” என்றவன், அவனும்
அவளின் அருகேயே அமர்ந்துகொண்டு சொல்ல, தங்கம்மையும் அவன் சொல்ல சொல்ல எடுத்துக் கொடுதவளின் கரத்தினில் அடுத்து வந்து சிக்கியது தீனா, ரூபினி இருவரின் பிரிவு பத்திரம்..


Ippathaan nammalu sirikkiran..Athukkulla antha divorce sheet manjula padanuma..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top