“என்னடா வாய்ஸ் எப்படியோ இருக்கே??!!”
“இ.. இல்லையேம்மா.. நே.. நேத்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டேன்... ஒருவேளை..” எனும்போதே,
“என்ன தங்கம் நீ..??!! ஐஸ் க்ரீம் உனக்கு சேராதுன்னு தெரியாதா..” என்று படபடத்தார் பாரிஜாதம்.
உண்ணாத ஐஸ் க்ரீம்முக்கு இப்படி படபடப்பவர், மகளுக்கு தான் அமைத்துக் கொடுத்த வாழ்வு சரியாய் அமையவில்லை என்று தெரிந்தால்..
ம்ம்ஹும் தெரியவே கூடாது..
இதுமட்டும் தான் தங்கம்மையின் மனதில்.
‘தங்கம்மை..’ அவர்களின் குலசாமி பெயர்.. அவளுமே அவள் வீட்டிற்கு குலசாமி தான்.
------------------------
“ம்ம்ச் ம்மா.. உனக்குத் தெரியாதா என்னோட நல்லது எதுன்னு??? உனக்கு இது சரின்னு தோணிச்சுன்னா கண்டிப்பா இது சரியா தான் இருக்கும்..” என்றுவிட்டாள்
ஆனால் தினேஷும் சுப்ரஜாவும் சண்டையிட, தங்கம்மை தான் “அண்ணா.. அம்மாதான் உனக்கும் அண்ணியப் பார்த்தாங்க.. நீ சந்தோசமா இல்லையா என்ன??” என்று வாயடைத்தாள்.
அனைத்துக்கும் மேலாகா தீனதயாளனை அவளுக்குப் பிடித்திருந்தது. இரண்டாவதோ முதலாவதோ, திருமணம்.. கணவன்.. அவனோடான வாழ்வு.. இப்படிதான் எண்ணினாள் தங்கம்மை. அவர்கள் வீட்டிலேயே வந்து பேசியிருக்கிறார்கள் என்றால் அப்போது அவனுக்கும் சம்மதம் இல்லாமலா இருக்கும்??!!!
அப்படி ஏற்றுக்கொண்ட வாழ்வு. ஆனால்... தீனதயளான் திருமணமான முதல்நாளே “ஐம் சோ சாரி..” என, புரியாது தான் பார்த்தாள்.
---------------------------------------------
தீனதயாளனுக்கு, எரிச்சலாய் இருந்தது. என்ன இந்த பெண்.. நேற்றே தன் மனதில் இருப்பதை சொல்லியாகிற்று. இப்போது போய் அறையை மாற்றச் சொல்லியிருக்கிறாள் என்றால்??!!
இவளா விலகிப் போவாள்??!!
சங்கர் வந்தவன், தீனாவின் இந்த அறையை தான் பயன்படுத்திக்கொள்வதாய் சொல்ல, புதிய அறையில் அனைத்தும் புதிய பொருட்கள்.. தீனாவும் தீனாவின் ஆடைகள் தவிர அனைத்தும் புதியது.. அதில் மிக மிக கவனமாய் இருந்தாள் தங்கம்மை..
சங்கர் பொருட்களை மாற்றி வைக்க ஆள் அழைத்து வந்துவிட “அண்ணா எதுக்குண்ணா எல்லாம் மாத்தி மாத்தி வச்சுக்கிட்டு.. அதெல்லாம் அங்கேயே இருக்கட்டும்.. அம்மா அனுப்பின திங்க்ஸ் எல்லாம் அப்படியே தானே இருக்கு.. அதை மட்டும் இங்க செட் பண்ணலாமே..” என்று மிக மிக தன்மையாய் தான் சொன்னாள்.
“இ.. இல்லையேம்மா.. நே.. நேத்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டேன்... ஒருவேளை..” எனும்போதே,
“என்ன தங்கம் நீ..??!! ஐஸ் க்ரீம் உனக்கு சேராதுன்னு தெரியாதா..” என்று படபடத்தார் பாரிஜாதம்.
உண்ணாத ஐஸ் க்ரீம்முக்கு இப்படி படபடப்பவர், மகளுக்கு தான் அமைத்துக் கொடுத்த வாழ்வு சரியாய் அமையவில்லை என்று தெரிந்தால்..
ம்ம்ஹும் தெரியவே கூடாது..
இதுமட்டும் தான் தங்கம்மையின் மனதில்.
‘தங்கம்மை..’ அவர்களின் குலசாமி பெயர்.. அவளுமே அவள் வீட்டிற்கு குலசாமி தான்.
------------------------
“ம்ம்ச் ம்மா.. உனக்குத் தெரியாதா என்னோட நல்லது எதுன்னு??? உனக்கு இது சரின்னு தோணிச்சுன்னா கண்டிப்பா இது சரியா தான் இருக்கும்..” என்றுவிட்டாள்
ஆனால் தினேஷும் சுப்ரஜாவும் சண்டையிட, தங்கம்மை தான் “அண்ணா.. அம்மாதான் உனக்கும் அண்ணியப் பார்த்தாங்க.. நீ சந்தோசமா இல்லையா என்ன??” என்று வாயடைத்தாள்.
அனைத்துக்கும் மேலாகா தீனதயாளனை அவளுக்குப் பிடித்திருந்தது. இரண்டாவதோ முதலாவதோ, திருமணம்.. கணவன்.. அவனோடான வாழ்வு.. இப்படிதான் எண்ணினாள் தங்கம்மை. அவர்கள் வீட்டிலேயே வந்து பேசியிருக்கிறார்கள் என்றால் அப்போது அவனுக்கும் சம்மதம் இல்லாமலா இருக்கும்??!!!
அப்படி ஏற்றுக்கொண்ட வாழ்வு. ஆனால்... தீனதயளான் திருமணமான முதல்நாளே “ஐம் சோ சாரி..” என, புரியாது தான் பார்த்தாள்.
---------------------------------------------
தீனதயாளனுக்கு, எரிச்சலாய் இருந்தது. என்ன இந்த பெண்.. நேற்றே தன் மனதில் இருப்பதை சொல்லியாகிற்று. இப்போது போய் அறையை மாற்றச் சொல்லியிருக்கிறாள் என்றால்??!!
இவளா விலகிப் போவாள்??!!
சங்கர் வந்தவன், தீனாவின் இந்த அறையை தான் பயன்படுத்திக்கொள்வதாய் சொல்ல, புதிய அறையில் அனைத்தும் புதிய பொருட்கள்.. தீனாவும் தீனாவின் ஆடைகள் தவிர அனைத்தும் புதியது.. அதில் மிக மிக கவனமாய் இருந்தாள் தங்கம்மை..
சங்கர் பொருட்களை மாற்றி வைக்க ஆள் அழைத்து வந்துவிட “அண்ணா எதுக்குண்ணா எல்லாம் மாத்தி மாத்தி வச்சுக்கிட்டு.. அதெல்லாம் அங்கேயே இருக்கட்டும்.. அம்மா அனுப்பின திங்க்ஸ் எல்லாம் அப்படியே தானே இருக்கு.. அதை மட்டும் இங்க செட் பண்ணலாமே..” என்று மிக மிக தன்மையாய் தான் சொன்னாள்.