ஹாய் பிரண்ட்ஸ்...
இதோ புதுக்கதையோட நானே... "தங்கம்மை..." என்னடா இப்படி தலைப்பான்னு கேட்கறீங்களா??? எஸ்.. இதை தவிர வேற எதையும் வைக்கத் தோணலை.. சோ இதே தான்.. தங்கம்மை தீனதயாளன்.. இவங்களை சுத்தித்தான் கதை.. வாரம் இரண்டு எபி போடுறேன்... சோ இப்போ இன்னிக்கு ப்ரீகேப்...
அறையை விட்டு வெளியேறிய போது அவனையும் திரும்பிப் பார்த்துவிட்டு போனது போல் இருந்தது. அவன்.. தீனதயாளன்.. தங்கம்மையின் கணவன்.. இந்த ஆறு நாட்களாய். துவைத்துக் காயப்போட்டிருந்த அவனின் ஆடைகளைத்தான் மடக்கிக் கொண்டு இருந்தாள். இதெல்லாம் செய் என்று அவனும் சொன்னதில்லை. அவள் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவுமில்லை. ஆனாலும் அவள் செய்வதை அவ்வப்போது கவனிப்பான்.
‘ஓ... இந்த சட்டையை இப்படி மடக்கனுமா??!!!’ என்றுதான் முதல் முறை தோன்றியது.
என்னவோ அவள் வந்தபிறகு இந்த அறையில் ஒரு நேர்த்தி இருப்பது போலிருந்தது. இல்லை அப்படியொரு தோற்றம் அவள் கொடுக்கிறாளா?? அந்த ஆராய்ச்சிக்கு எல்லாம் அவன் போகவே விரும்பவில்லை. காரணம் இந்தத் திருமணம் அவனின் விருப்பம் இல்லை.
-----------------------------------------------------
நீ என்னோடு பேசித்தான் நான் உன்னோடு பேசவேண்டியது இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்துகொண்டு இருந்தாள். ஆச்சர்யமாய் தான் இருந்தது அவனுக்கு. ஆனாலும் அவனால் தன்னை இந்த வாழ்விற்கு உட்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இந்தத் திருமணம் என்பது மட்டுமில்லை, யாரோடான திருமணமும் அவனின் விருப்பமாய் இல்லை. போதுமடா சாமி ஒருமுறை பட்டதே என்றுதான் நினைத்தான்.. அட ஆமாம்..!! போதும் போதும் என்றளவிற்கு பட்டுவிட்டான் தான். ஒருத்தியை திருமணம் செய்து.
அவள் தங்கம்மை அல்ல.
ரூபினி.. அழகி.. அப்படித்தான் அனைவரும் சொன்னார்கள். இவனுக்கும் அவளைக் கண்டதில் இருந்து அதே எண்ணம் தான்.. இத்தனை அழகானவள் என் மனைவியா என்று?!! ஒரு பெருமை.. ஒரு கர்வமும் கூட..
-----------------------------------------------
அவனின் பதிலுக்காக இறைஞ்சலாய் அவன் முகம் பார்த்தவளைப் பார்த்தவன் “எனக்கு டைம் கொடு..” என,
“ட.. டைம்.. டைம் எதுக்கு..??” என்றாள் நடுங்கி.
“யோசிக்க வேணாமா??? உனக்கு எப்படியோ எனக்குத் தெரியாது.. இது என்னோட வாழ்க்கையும் கூடத்தான்..” என்றான் பல்லைக் கடித்து.
ஆனால் என்ன யோசித்தும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவளோடு அந்த நிமிடம் அந்த அறையினில் இருக்கவே முடியவில்லை. மூச்சு முட்டுவது போலிருக்க, அவன் கண்ட கனவுகள் எல்லாம் அவனைக் கேலி செய்து சிரிப்பது போலிருந்தது.
வேகமாய் அறையில் இருந்து வெளியில் வந்தவன், யாரும் கண்டுவிடாதபடி மொட்டை மாடி செல்ல, அவனின் அக்கா ரோஜா பார்த்துவிட்டாள்.
“தீனா??!!! என்னடா??!!” என்று கேட்டபடி அவள் பின்னேயே வந்ததில், அவனின் அம்மா அப்பா எல்லாம் வந்துவிட்டனர்.
இதோ புதுக்கதையோட நானே... "தங்கம்மை..." என்னடா இப்படி தலைப்பான்னு கேட்கறீங்களா??? எஸ்.. இதை தவிர வேற எதையும் வைக்கத் தோணலை.. சோ இதே தான்.. தங்கம்மை தீனதயாளன்.. இவங்களை சுத்தித்தான் கதை.. வாரம் இரண்டு எபி போடுறேன்... சோ இப்போ இன்னிக்கு ப்ரீகேப்...
அறையை விட்டு வெளியேறிய போது அவனையும் திரும்பிப் பார்த்துவிட்டு போனது போல் இருந்தது. அவன்.. தீனதயாளன்.. தங்கம்மையின் கணவன்.. இந்த ஆறு நாட்களாய். துவைத்துக் காயப்போட்டிருந்த அவனின் ஆடைகளைத்தான் மடக்கிக் கொண்டு இருந்தாள். இதெல்லாம் செய் என்று அவனும் சொன்னதில்லை. அவள் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவுமில்லை. ஆனாலும் அவள் செய்வதை அவ்வப்போது கவனிப்பான்.
‘ஓ... இந்த சட்டையை இப்படி மடக்கனுமா??!!!’ என்றுதான் முதல் முறை தோன்றியது.
என்னவோ அவள் வந்தபிறகு இந்த அறையில் ஒரு நேர்த்தி இருப்பது போலிருந்தது. இல்லை அப்படியொரு தோற்றம் அவள் கொடுக்கிறாளா?? அந்த ஆராய்ச்சிக்கு எல்லாம் அவன் போகவே விரும்பவில்லை. காரணம் இந்தத் திருமணம் அவனின் விருப்பம் இல்லை.
-----------------------------------------------------
நீ என்னோடு பேசித்தான் நான் உன்னோடு பேசவேண்டியது இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்துகொண்டு இருந்தாள். ஆச்சர்யமாய் தான் இருந்தது அவனுக்கு. ஆனாலும் அவனால் தன்னை இந்த வாழ்விற்கு உட்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இந்தத் திருமணம் என்பது மட்டுமில்லை, யாரோடான திருமணமும் அவனின் விருப்பமாய் இல்லை. போதுமடா சாமி ஒருமுறை பட்டதே என்றுதான் நினைத்தான்.. அட ஆமாம்..!! போதும் போதும் என்றளவிற்கு பட்டுவிட்டான் தான். ஒருத்தியை திருமணம் செய்து.
அவள் தங்கம்மை அல்ல.
ரூபினி.. அழகி.. அப்படித்தான் அனைவரும் சொன்னார்கள். இவனுக்கும் அவளைக் கண்டதில் இருந்து அதே எண்ணம் தான்.. இத்தனை அழகானவள் என் மனைவியா என்று?!! ஒரு பெருமை.. ஒரு கர்வமும் கூட..
-----------------------------------------------
அவனின் பதிலுக்காக இறைஞ்சலாய் அவன் முகம் பார்த்தவளைப் பார்த்தவன் “எனக்கு டைம் கொடு..” என,
“ட.. டைம்.. டைம் எதுக்கு..??” என்றாள் நடுங்கி.
“யோசிக்க வேணாமா??? உனக்கு எப்படியோ எனக்குத் தெரியாது.. இது என்னோட வாழ்க்கையும் கூடத்தான்..” என்றான் பல்லைக் கடித்து.
ஆனால் என்ன யோசித்தும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவளோடு அந்த நிமிடம் அந்த அறையினில் இருக்கவே முடியவில்லை. மூச்சு முட்டுவது போலிருக்க, அவன் கண்ட கனவுகள் எல்லாம் அவனைக் கேலி செய்து சிரிப்பது போலிருந்தது.
வேகமாய் அறையில் இருந்து வெளியில் வந்தவன், யாரும் கண்டுவிடாதபடி மொட்டை மாடி செல்ல, அவனின் அக்கா ரோஜா பார்த்துவிட்டாள்.
“தீனா??!!! என்னடா??!!” என்று கேட்டபடி அவள் பின்னேயே வந்ததில், அவனின் அம்மா அப்பா எல்லாம் வந்துவிட்டனர்.