மிகவும் அருமையான பதிவு சவீதா.விஸ்வாவின் ஜாதகத்தை கணித்தவர் சொன்னது போலவே நடக்கிறது.விஸ்வா திருமணம் முடிந்த பின் உண்மை தெரிந்து வீட்டை விட்டு சென்று விட்டான்.
விஸ்வா சென்ற பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையினால் சொத்து பிரிக்கப்பட்டு, அண்ணன்களின் கூடாத பழக்கத்தால் கடையும் போய் விட்டது.இத்தனை நடந்தும் கனகு கிழவனுக்கு விஸ்வாக்கு சொத்து தரவேண்டும் என தோனவில்லை.
விஸ்வா ஒன்றும் இல்லாமல் வீட்டை விட்டு சென்றவன் சொந்தவீடு வசதியுடன் இருப்பதை பார்த்து கார்த்திக்,சரவணன் மனதில் பொறாமை தெரியுது.
தங்கள் தவறான பழக்கங்களை இவர்கள் மாற்றிக் கொண்ட பிறகு தான் இவர்களுக்கு கடையை தர வேண்டும் என விஸ்வா,காஞ்சனாவிடம் சொல்வது சரியே,இல்லையென்றால் அதுவும் போய்விடும்
மாமா தன் பிள்ளைகளுக்கு எதுவும் செய்யாமல் போய் விட்டோம் என நினைத்திருப்பார், அதனால் அமுதனுக்கு ஒரு பகுதி எழுதி தரவேண்டும் என விஸ்வா நினைப்பது நியாயமே.
தெய்வானை பாட்டி பேரன்களிடம் சம்பளப்பணத்தில் மனைவிக்கும் கொடுக்கவில்லை,வீட்டுக்கும் செலவு செய்யவில்லை எங்கே போயிற்று பணம் என சரியாக கேட்டார்.
அப்பாவியான விஸ்வாவை அடப்பாவியாக மாற்றிய பெருமை காஞ்சுவையே சேரும்.வீட்டில் மைக் வைத்து மனைவி பேசுவதை கேட்டிருக்கான்.வந்த இடத்தில் எண்டர்டெயின்மென்ட் வேண்டும்னு விஜயை,சங்கவிகிட்ட மாட்டி விட்டு போய்ட்டீயே விஸ்வா.எபிலாக் போடலாம்.