அருமையான பதிவு சவீதா.அம்மாவுக்கும்,மனைவிக்கும் சண்டை வந்தா நடுவுலே போகக்கூடாதுன்னு சொல்லுறது தெரியாம வந்து வாய விட்டு வாங்கி கட்டிட்டியே உதிரா.
சீதா வேலை செய்ய விடாததற்கு காரணம் இருக்கும் என சிமி சொல்வதும்,பிடிக்காத திருமணம் செய்ததால் தன்னை வேலைக்காரியாக நடத்தியதையும்,எனக்கு இந்த வீட்டில் கிடைக்காதது உனக்கு
கிடைத்து சந்தோஷமாக இருக்கனும் என சொல்வது கண்கலங்க வைக்கிறது.
சினாக்கு கொடுத்த கடையை வாங்கியும் நீலாவுக்கு ஆசை அடங்கலையா.தனியே கடை தொடங்க போவதை தெரிந்து, பொதுவான சொத்தில் இருந்து தொடங்க போறான்னு நோட்டீஸ் அனுப்பி இருக்கானே.இவனோட மேகாவும் கூட்டா.
மேகா தனக்கு கொடுத்த கடைய காப்பாத்திக்க தான் இப்படி செஞ்சான்னு சினா சரியா சொல்லிட்டா..
நீலா பணத்தாசை பிடிச்சவன்னா, நீ சுயநலவாதின்னு வேலன் சொன்னது சரிதான்.மூத்த பெண்ணாக பிறந்ததால தம்பி,தங்கைக்கு எவ்வளவு தான் விட்டு கொடுப்பாள் என தமிழுக்கு தெரியலையா
சினா எடுத்த முடிவு மிகவும் சரியே.இந்த நிமிஷத்துலே இருந்து உங்க பொண்ணு மட்டும் தான்னு சொன்ன சினாவை,அதுவும் இல்லைன்னு தமிழ் சொல்ல வச்சிடுவாங்க போல இருக்கே..
சபாஷ் சினமிகா
மேகாவுக்கு சூப்பரா கொடுத்தாள்
இனி தனக்கு தம்பி தங்கச்சி உறவே இல்லைன்னுட்டாள்
சினா ஒரு நல்ல புடவை கட்டினால் கூட பொறாமையில் பொசுங்கும் தங்கச்சிக்கு இது தேவைதான்
இதே மாதிரி நீலவண்ணனுக்கும் செமத்தியா ஒரு பாடம் விரைவில் இருக்குன்னு நினைக்கிறேன்
சாது மிரண்டால் காடு கொள்ளுமா?
சீதாம்மா பாவம்
சின்ன வயசுல எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க
அருமையான மருமகள் சினமிகாவுக்கு சீதா அருமையான மாமியாராய் இருக்காங்க