மிதுலா செல்லத்தின் மீது அவ்வளவு காதலை வைத்து அவளோட ஊருக்கே வந்து மிதுலாவை, அவளுக்கே தெரியாமல் பாலோ பண்ணி, லவ் பண்ணி எதிர்பாராத விதமாக வில்லன் வினோத் போட்டத் திட்டத்தில் அந்த பொறாமைப் பிடிச்ச மூர்த்தியால் வசீகரன் மாட்டி, மிதுலாவை திடீர் மேரேஜ் பண்ணுறதும், தன்னோட லவ்வை முதலிலேயே இவளிடம் சொல்லாமல் எப்போப் பாரு கடுகடுன்னு சிடுமூஞ்சியாட்டம் முகத்தை வைச்சுக்கிட்டு மிதுலாவை முறைப்பதும் சூப்பர்ப் தான் மதுமதி பரத் டியர்
ஆனால் நம்ம மிதுலாவும் சளைத்தவள் இல்லையே
இவளின் சின்ன வயதிலேயே அப்பா இறந்ததால் தெய்வானை அம்மா கண்டிப்பை விட செல்லம் அதிகம் கொடுத்து வளர்த்ததால் அம்மிணி என்ன ஆட்டம் போடுவாங்க?
முதல் காட்சியிலேயே மற்ற ஜீவராசிகளிடம் காட்டும் பரிவும் பாசமும் அமோகமா இருக்கும்
அது மட்டுமில்லாமல் தந்தையின் போட்டோவோடு மிதுலா பேசுவதும் நல்லா இருந்தது பா
மிதுலாவைப் பற்றி உயர்த்திப் பேசும் கங்காதரனின் பேச்சினால் கடுப்பாகி அவள் வாழ்க்கையை அழிக்க நினைத்து வினோத் செய்த காரியம் மிதுவுக்கு நன்மையையே கொடுக்கிறது
வினோத்தின் பேச்சை நம்பி மிதுவின் தோழி சங்கவி நல்லது தான் நினைக்கிறாள் அவளுடைய வருங்கால கணவன் மகேஷ் கொடுக்கும் பார்ட்டிக்கு அழைத்து சென்றதால் நம்ம வசீ மிதுலாவை மேரேஜ் செய்தார் இல்லேன்னா…………………………………?
ராஜேஸ்வரியும் அருமையான தங்கை தான்
பெரியம்மா சொந்த தாய் போலத் தான் பார்த்து பார்த்து வசீ=க்கு பண்ணுறாங்க
டாக்டர் நர்மதா ஒரு நல்லத் தோழியா இருக்காள்
எல்லோருக்கும் மேலே உயிராய் இருக்கும் நண்பன் சதீஷ்
நண்பனின் காதலை அறிந்து அவனை அண்ணனாக ஏற்ற மனைவியின் ரெகமெண்டேஷனை ஏற்கும் வசீகரனும் சூப்பர்ப் தான்
அது மட்டுமில்லாமல் வசீகரன், மனைவிக்காக துடிக்கும் தவிப்பு, தேடல், ராஜியே எதிர்பார்க்காத கோபம், மிது வந்தவுடன் அவளுக்காக அமைத்தத் தோட்டம் எல்லாமே ரொம்பவே சூப்பர்ப்
அருமையான இந்த நாவலில் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் வைத்து கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருந்த அழகான காதலை உணர வைத்து மிகவும் அருமையாக நாவலை கொண்டு சென்றுள்ளீர்கள், மதுமதி பரத் செல்லம்
இந்த ‘’நிலவே உந்தன் நிழல் நானே’’ உங்கள் முதல் கதையா, மதுமதி பரத் டியர்?
நம்பவே முடியலையே பா
அவ்வளவு அருமையாக ஒரு தேர்ந்த எழுத்தாளரைப் போல ரொம்பவே அருமையாக இந்த நாவலை எழுதியிருக்கீங்க பா
உங்களுக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுக்களும் ஆசீர்வாதங்களும் மதுமதி பரத் டியர்