Raasitha's Ninmel Kadhalaagi Nindraen Precap-5

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
பார்வதி ஒரு தவிப்பு கலந்த பார்வையை மகன் மீது நிலைக்கவிட, கண்களால் மெல்ல ஆறுதல் சொல்லியவன், "எந்த மாற்றமும் இல்ல. தப்பு செய்யாம தல குனிஞ்சு மன்னிப்பு கேட்டுதா இந்த ஊருல இருக்கணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல.

அப்படி மன்னிப்புகேட்டு தான் இருக்கணும்னு வந்துச்சுனா அதுக்கு என்னோட மனசாட்சி ஒத்துக்காது என்ன பெத்த அம்மாவும் ஒத்துக்கமாட்டாங்க.

அவுங்களுக்கு அவுங்க புள்ளையோட மரியாத தாங்க முக்கிய" என லிங்கத்தைப் பார்த்துக்கொண்டே, பார்வதியிடம் கண் சிம்மிட்டியபடி லேசான முறுவலுடன் கூற, அவனின் செய்கையில் பார்வதி கூடக் கண்ணீரை உதிர்த்தபடியே லேசாகப் புன்னகைத்தார்.
--------------------------------------------------------------------------------------

சூழல் சற்று இறுக்கமாகவே செல்ல, அதை விரும்பாத சக்கரை, "டேய்...ரொம்ப நேரமா கேக்கனும்னே இருந்தே. எப்படிடா அந்தச் சுந்தரோட அப்பா ஏற்பாடு பண்ணின அந்த மூணு ஆளுங்களையும் துரத்தின. அந்த ரோசாக்கா கூட அதோட அல்லக்கைய கூப்டுட்டு உடனே போய்டுச்சு. அப்படி என்ன தாண்டா செஞ்ச ?" எனத் தலையைப் பிய்த்துக் கொண்டு கேட்க, "அது சப்ப மேட்டர் மாப்பு.

-------------------------------------------------------------------------------------

ரொம்பத் தலைவலிக்கிதுன்னு ஒரு காப்பித்தண்ணிக்கு தா வந்தே. அதுக்கு மூஞ்ச திருப்புராக. இதுக்குத் தான் அவுங்க அவுங்க வீட்ல இருக்கணும்னு சொல்றது. எங்கெளுக்கென்னத் தலையெழுத்தா… இங்கன வந்து உக்காரனும்னு. ஏதோ கூடப் பொறந்த பொறுப்பு ஒத்தையா அல்லாடுத்தேன்னு தான அந்த மனுஷன கூட்டிட்டு இங்க வந்தே. சொல்லுனே, உன்னோட மகன பாத்துக்கணும்னு தான எம்மவள கூட ஹாஸ்டெல்ல சேத்துவிட்டே." என எங்கெங்கோ போய் எதை எதையோ சேர்த்து எப்படியோ முடிக்க, லிங்கத்திற்குச் சுறு சுறுவென்று கோவம் வந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top