HI GUYS!!!
EPILOGUE படிச்சுட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க!! I'm Waiting...!!
கோட்டையின் முகப்பிலேயே தங்கநிற வளைவில்(ஆர்ச்சில்) நூறடி தொலைவில் நின்றாலும் பளிச்சென கண்ணை பறிக்கும்படி பொறிக்கப்பட்டிருந்தது, “தீ-பாரடைஸ்”. உண்மையிலேயே அது ‘சொர்க்கம்’ தான், அந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தான் தீபன் சக்கரவர்த்தி!
D-வில்லேஜ் பாணியில் பல முக்கிய நகரங்களில் தனது கிளைகளை பரப்பியிருந்தான் தீபன். ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் முக்கியம்சங்களை தேடி தேடி பிடித்து, பழமை மாறாது அவன் வழங்கியதன் பலன், D-வில்லேஜ் இப்போது தென்னிந்தியாவை தாண்டி புகழ் பெற்று வடமாநிலத்திலும் வெற்றிகரமாய் தொடங்கப்பட்டுவிட்டது.
வடமாநிலத்தவர்களை கவரும் வகையில் கிராம பாணியில் இல்லாது மன்னராட்சி காலகட்டத்தை நினைவுகூறும்படி செய்தாலென்ன என்ற யோசனை தோன்ற, உடனே அதை செயல்படுத்த தொடங்கிருந்தான் தீபன். சுமார் ஒரு வருட அயராத உழைப்பு! இப்போது கண் முன்னே உருவம் பெற்று நிற்கையில் அவனுக்குள்ளே பெருமிதம்!
தீபன் சக்கரவர்த்தி அரசியல் பின்னணியை விட்டு முற்றிலும் வெளிவந்து கைத்தேர்ந்த தொழிலதிபராய் உருபெற்றிருந்தான்! தந்தையின் பெயரை தாண்டி அவனுக்கென்ற தனி அடையாளம்!
இதற்கும் “D-வில்லேஜ்” என தீபன் பெயரிட, இதை வீடியோ காலில் பார்த்த உஷா இதன் பிரம்மிப்பில் சொக்கி, “இது வில்லேஜ் இல்லடா, சொர்க்கம்!” என வியந்து சொல்ல, அதையே பிடித்துக்கொண்டான் தீபன்.
‘அட, இதுக்கூட நல்லா இருக்கே?!’ என்ற எண்ணம் வந்ததுமே, ‘D-வில்லேஜ், D-பாரடைஸாய்’ மாறிவிட்டது.
நாளைய திறப்பு விழாக்கான ஏற்ப்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. விழாவுக்கு வரவிருக்கும் முக்கிய பிரமுகர்களை மலர் தூவி வரவேற்க ஆஜானுபாகுவான யானைகளும், அவர்களை உள்ளே அழைத்து செல்ல, தங்க நிறத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்களும் தயார் நிலையில் இருந்தன.
கோட்டை சுவர் தாண்டி சென்றால், உள்ளுக்குள்ளே குடிசை முதல் ஒட்டுக்கட்டடம் வரை பலவித அமைப்பிலான வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் சிறு தோட்டம்! அதன் அருகிலேயே பொதுகிணறு, நான்கு வீட்டிற்கு ஒன்று என்ற அமைப்பில் இருந்தது. இன்னும் சற்று உள்ளே சென்றால், படித்துரையோடு ஆறு போன்ற அமைப்பில் ஸ்விம்மிங் பூல்!
மத்தியில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாய் எழுந்து நின்ற கட்டிடத்தின் வனப்பே சொன்னது, ‘இது ராஜா மந்திர்’ என்று! அதன் முகப்பிலேயே பெரும்படகு போன்ற அமைப்பிலான வரவேற்ப்பு மேடை! அலுவலர்கள் நின்று தங்கள் பணியை செய்ய எதுவாய் கணினிமயத்தோடு அமைந்திருந்தது. விஐபி-கள் வந்தால் தங்க வைக்கவென அந்த ராஜா மந்திரின் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
முகலாயர்கள் கால கட்டிட கலையை பெரும்பாலும் ஒத்திருந்தது D-பாரடைஸ்!
நாளைய விழாக்கான வேலைகள் ஜரூராய் நடக்க, விழா நாயகன் அங்கே இல்லாமல் இருப்பானா என்ன?
‘ராஜா தர்பார்’ போல அமைக்கப்பட்டிருந்த மீட்டிங் ஹாலில் நடுநாயகமான ‘அரி’முகம் வைத்த கதிரையில் நிஜ சக்கரவர்த்தியாகவே அமர்ந்திருந்தான் தீபன் சக்கரவர்த்தி.
எப்போதும் எதற்கும் பதட்டப்படாது, ‘நான் இப்படிதான்! இப்போ என்ன?’ என்று இலகுவாய் கையாளும் அவனுக்கு இன்று இயல்பு மாறி பெரும் கலக்கம்! அவன் பற்கள் பதட்டத்தில் கை விரல்களை கடித்துக்கொண்டிருக்க, ‘அடுத்து என்ன செய்வது?’ என்று எப்போதும் தோன்றாத கேள்வி அவனுள்.
அவனுக்கு ஒரு நிமிடம் கூட கொடுக்காத எதிர்தரப்பு, “இப்போ சொல்ல முடியுமா? முடியாதா?” என கேட்டுவிட்டது.
அலைபேசியின் ஒளித்திரையில் காணும் அந்த எதிர்த்தரப்பின் முகம் தீபனை திணற வைக்க, “ஓகே டேட், ஐயம் கோன்ன கட் தி கால்!” என்று சொன்னவளின் குரலில் கோவமோ, ஆத்திரமோ, பிடிவாதமோ ஒன்றுமில்லை. சொல்லிவிட்டு வீடியோ காலை துண்டித்திருந்தாள் தீரா! ‘தீ’பனும் ‘ரா’காவும் சரிவிகிதத்தில் கலந்த அவர்களின் செல்ல மகவு!
தீரா காலை கட் செய்ததுமே, “போச்சு... போச்சு.. போச்சு...” என வாய்விட்டு அலட்றினான் தீபன்.
அடுத்து அவன் பலமுறை தொடர்புக்கொள்ள முயன்றும் பலனில்லை. அழைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. தீபனும் கொஞ்சமும் அசராது மீண்டும் முயன்றுக்கொண்டே இருந்தான்.
பல வருடங்கள் சென்று இவனை புதியாய் பார்க்கும் யாராயினும் ‘இவனுக்கு இத்தனை பொறுமை உண்டா?’ என அதிசயத்தில் மூர்சையாயிருப்பர். அத்தனை பொறுமைசாலியாய் அவனை பண்படுத்தியிருந்தாள் தீரா.
பல தொடர் முயற்சிகளின் பலனாய் வீடியோ கால் அழைப்பு ஏற்கப்பட்டு விட, தீபனை நேர்கொண்டு பாராது முகத்தை திருப்பிக்கொண்டாள் தீரா.
“பேபிம்மாக்கு கோவமா...!?” தீபன் தாஜா செய்து பேச்சை தொடங்க, அதெல்லாம் அவன் மகளிடம் எடுப்படுமா?
“சொல்ல முடியுமா? முடியாதா?” இறுதியாய் அவள் கேட்டிருந்த அதே கேள்விலேயே பிடியாய் வந்து நின்றாள் தீரா. இப்போதும் அவள் முகத்திலோ குரலிலோ கோவம் இல்லை! ஆனாலும் அவள் வார்த்தைகள் அவள் கோவத்தை பறைசாற்ற, தள்ளி நின்று பார்க்கும் தந்தைக்கு, தன் மகவை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
“என்னடா பேபி சொல்லணும்!?” தெரிந்தே கேட்டான் தீபன்.
“ப்ச்!! லாஸ்ட் சண்டே நைட், நான் உங்க ரூம்க்கு டோர் நாக் பண்ணாம வந்துட்டேன்னு மாம் எப்படி கத்துனாங்க!! யூ க்நொவ் தட் ரைட்?” என்று விரல் நீட்டி கேட்ட தீரா, “பட் டுடே ஷி டிட் த சேம் டு மி! என் ரூம்க்குள்ள வரப்போ டோர் நாக் பண்ணாம அப்படியே வராங்க! நான் செஞ்சா அது மிஸ்டேக், அதே அவங்க செஞ்சா மிஸ்டேக் இல்லையா?” என்றாள் தீரா.
கேட்டுக்கொண்டிருந்தவனோ, ‘அன்னைக்கு நாங்க இருந்த நிலை அப்படி! நீ சடன்னா உள்ளே வரவும் ராகா கத்திட்டா!’ என்று முணுமுணுத்துக்கொண்டு, “அதுக்கு என்னடா செய்யலாம் இப்போ?” என்றான் தணிவாய்.
“அட்வைஸ் பண்ணுங்க, இனி இப்படி ரிப்பீட் பண்ணக்கூடாதுன்னு!!” என்று தீரா சொல்ல, “யாருக்கு?” என்றான் திகிலாய்.
“ப்ச்!! தி கிரேட் அனுராகாக்கு தான்!!” கைகளை ஆட்டி தீரா சொன்ன தினுசில் தீபனுக்கு சிரிப்பு வர, எங்கிருந்தோ, “ஏய்ய்ய்...” என்ற ராகாவின் குரல் கேட்டது அவனுக்கு.
“சொல்லுங்க டேடி!!!” தீரா இப்போது கத்த, கேமரா அங்கும் இங்கும் ஆடியது. அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் சாடிக்கொள்வது வேறு அவனுக்கு கேட்க, அவன் முகம் புன்னகையில் விரிந்தது. ஒரு வழியாய் கேமராவின் ஆட்டம் நின்று நேராக, அதில் தெரிந்தாள் அவனின் ‘ராகா’!
“என்னடி சண்ட அங்க?” என்ற தீபனை முறைத்த ராகா, “அவ கேட்டா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள்.
அவள் புடவையை பிடித்து இழுத்துக்கொண்டே தீரா, “நோ...நோ...” என கத்துவது கேட்க, “சின்ன பொண்ணுடி!!” என்றான் தீபன். அவன் புன்னகை மட்டும் குறையவே இல்லை.
“இவளா? ஐஞ்சு வயசு பொண்ணு மாறியா பிகேவ் பண்றா? பேசுறதெல்லாம் பாரு....!!” வேண்டுமென்றே தீராவை சீண்டவென ராகா சொல்ல, “ஹாஹா...!! உன் பொண்ணாச்சே!” என்றவன் ராகாவின் முறைப்பில் உரக்க சிரிக்க, “டேடி திஸ் ஸ் நாட் அட் ஆல் ஃபேர்!” என்ற தீராவின் குரல் கேட்க, இவன் பதில் சொல்லும் முன்னே “சரிதான் போடி!!” என்றிருந்தாள் ராகா.
“ஹும்!! நான் பாட்டி கிட்ட சொல்றேன்!!” என்று அங்கிருந்து குடுகுடுவென ஓடியிருந்தாள் தீரா. உஷாவோ சக்ரவர்த்தியோ அனுராகாவின் பேச்சுக்கு ஆட்சேபணையோ, அவளை ஒரு சொல்லோ கூட சொல்லவே மாட்டார்கள் என்பது ஐந்து வயது சிட்டுக்கு நன்கு தெரியுமென்பதால், அவள் அழைத்து தன் அன்னையை பற்றி குறை படித்தது அவளது அன்னை தாராவிடம்!! தாராவும் லோகேஷும் வேர்ல்ட் டூருக்கு சென்றிருந்தனர்.
“உன்னை பார்த்து ஒன் வீக் ஆச்சு தீப்ஸ்!” ராகா முகம் சுருக்க, “இன்னைக்கு நைட் ராஜஸ்தான் வரப்போற!? அதுக்குள்ள என்ன பேபி!? கிளம்பிட்டியா? பிளைட் மிஸ் பண்ணிடாதீங்க!!” என்றான் தீபன்.
“நீ இவ்வளோ பொறுப்பா பேசுனா நல்லாவே இல்ல...!!” என்ற ராகா, “ஆபிஸ்ல ஒரு சின்ன வொர்க் இருக்கு! வீடியோ கான்பரென்ஸ்! ஜஸ்ட் ஹால்ப் ஆர் தான் ஆகும்! முடிச்சுட்டு கிளம்புடுவேன்!!” என்ற ராகாவுக்கு முன்பிருந்த கோவம், வேகம், ஆத்திரம் எல்லாம் எங்கே போனதென்றே தெரியாது. அவளது அக்மார்க் ‘எக்ஸ்சென்ட்ரிக் பீகேவியர்’ இத்தனை வருடங்களில் ஓடியே விட்டது.
வயதின் முதிர்வு, மனைவி என்ற பதவி, மருமகள் என்ற பொறுப்பு இதத்தனையும் தாண்டி, ‘தாய்மை’ என்ற செழுமை அவளை இன்னமும் மெருகேற்றி பேரழகாய் காட்ட, தீபன் அவளிடம் தினம் தினம் தொலைந்துக்கொண்டிருக்கிறான்.
அதற்குள் தீபனுக்கு அங்கே சில வேலைகள் வர, அதை கவனிக்க சென்றான். சிறிது நேரத்திலேயே அவன் தொலைபேசி அலற, திரையில் ‘தர்மா’ என பெயரை கண்டதுமே தீபனுக்கு ஆவேசம்!!
உடனே அழைப்பை ஏற்றவன், “என்னடா?” என்றான் பல்லிடுக்கில்.
“பத்து குதிரை இன்னைக்கு எவனிங் போல வந்து சேரும்ன்னு சொல்லிருக்காங்க! எல்லாமே இம்போர்ட்டட்! அதுக்கு இடம் அரேஜ் பண்ணனும்!” என்ற தர்மனின் குரலில், “டேய்......!! ஏன்டா இப்படி இருக்க நீ?” என அலுத்துக்கொண்டான் தீபன்.
பின்னே, ஸ்விட்சர்லேன்டில் புது மனைவியோடு ஹனிமூன் சென்றவன், போன வேலையை பார்க்காது இங்கே திறப்புவிழாக்கான வேலைகளை செய்துக்கொண்டிருந்தால் தீபனும் என்ன தான் செய்வான்!
அவன் சொல்ல சொல்ல கேட்காமல் போனிலேயே அத்தனை வேலைகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறான் தர்மன்.
“நீரஜா உன்னை கண்டுக்குறதே இல்லையா?” தீபனின் கேள்வியில், “நானே செம்ம கோவத்துல இருக்கேன் தீபன்! இவர்க்கூட வந்து போரிங்!!” என்ற நீரஜாவின் குரலில், “இதெல்லாம் அவமானம்டா தர்மா! உன்னை போரிங்ன்னு சொல்லுற அளவுக்கு வச்சுக்கலாமா நீ?” என்றவன், “இனியொரு முறை நீ கால் பண்ணுனா, உன்னோட டூரிஸ்ட் விசாவை இன்னும் ஒரு மாசத்துக்கு எக்ஸ்டென்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ!!” என மிரட்ட அது சரியாய் வேலை செய்தது.
“இங்க எனக்கு நாகா இருக்கான்! நீ உன் வேலையை மட்டும் பாரு அங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் தீபன்.
தீபனை அனுராகா விரும்பியபோது ‘அவன் உனக்கு செட்டே ஆக மாட்டான்!’ என ஒற்றைக்காலில் நின்ற நீரஜா, தர்மனின் மீது காதலில் விழுந்தது விந்தையிலும் விந்தையே!
அனுராகா கூட, “அவன் உனக்கு செட்டே ஆக மாட்டான் நீரு” என அவளை போலவே சொல்ல, தர்மன் தான் வேண்டும் என ஒரே பிடியாய் நின்றுவிட்டாள் நீரஜா. கடந்த மாதம் நடந்த அவர்கள் திருமணத்தில் கூட, “இப்போ புரியுதா? காதல் வந்துட்டா செட் ஆகாதுன்னு தோனுற எல்லாமே செட் ஆகிடும்ன்னு!” என்று ராகா சொல்லிக்காட்ட, அதை உணர்ந்தவள் என்பதால் வெட்கப்பூச்சோடு ஆமோதித்தாள் நீரஜா.
இரட்டையர்களில் ஒருவன் குடும்பஸ்த்தன் ஆகிவிட, இன்னொருவனுக்கு பெண்ப்பார்க்கும் படலம் நடந்துக்கொண்டே இருக்கிறது.
திறப்புவிழா ஏற்ப்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் மீண்டும் ஒலித்தது தீபனின் அலைபேசி.
‘அட!!’ என எடுத்து பார்த்தவன், அழைப்பு சக்கரவர்த்தியின் பி.ஏ விடம் இருந்து என தெரிந்ததும் சட்டென உயிர்ப்பித்தான்.
இவன் ‘ஹலோ’ என சொல்லும்முன்னே, “மிதுன் சார்க்கு நினைவு திரும்பிடுச்சு! ஹாஸ்பிட்டல் கொண்டு போய்க்கிட்டு இருக்கோம், நீங்க உடனே கிளம்பி வாங்க!!” தந்தி சொற்கள் போல வந்த வார்த்தைகள் இவனை சேர, வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு கிளர்ச்சி அவனுக்குள் பிரவாகமெடுத்தது.
“மி...து...ன்...” அவன் உதடுகள் முணுமுணுக்க, ஐந்து வருட தவம் ஒரு முடிவுக்கு வந்ததை எண்ணி, அவன் கண்கள் கூட மெலிதாய் பனித்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் அவன் விமானநிலையத்தை அடைந்திருக்க, கனத்த மனதோடும் பெருத்த எதிர்ப்பார்ப்போடும் பயணமானான் சென்னையை நோக்கி!!
EPILOGUE படிச்சுட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க!! I'm Waiting...!!
Epilogue
நிசப்தமான மாலை வேளை, சுற்றிலும் ஆள் அரவமற்ற அந்த வெட்டவெளியில் வானுயர நிமிர்ந்து நிற்கிறது கற்கால கோட்டை சுவர். பத்தாள் உயரத்தையும் விட பன்மடங்கு பிரமாண்டமாய், வர்ண பூச்சுகள் இல்லாத பெரும்பாறை கற்களால் உருவாக்கப்பட்ட அந்த சுவரின் மத்தியில் செங்குத்தாய் இமைகள் போல திறந்துக்கொள்ளும் கதவுகள்! அருகே சென்றாலே தன்னால் திறந்து வழிவிடும்படி நவீன மயமாய்!
கோட்டையின் முகப்பிலேயே தங்கநிற வளைவில்(ஆர்ச்சில்) நூறடி தொலைவில் நின்றாலும் பளிச்சென கண்ணை பறிக்கும்படி பொறிக்கப்பட்டிருந்தது, “தீ-பாரடைஸ்”. உண்மையிலேயே அது ‘சொர்க்கம்’ தான், அந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தான் தீபன் சக்கரவர்த்தி!
D-வில்லேஜ் பாணியில் பல முக்கிய நகரங்களில் தனது கிளைகளை பரப்பியிருந்தான் தீபன். ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் முக்கியம்சங்களை தேடி தேடி பிடித்து, பழமை மாறாது அவன் வழங்கியதன் பலன், D-வில்லேஜ் இப்போது தென்னிந்தியாவை தாண்டி புகழ் பெற்று வடமாநிலத்திலும் வெற்றிகரமாய் தொடங்கப்பட்டுவிட்டது.
வடமாநிலத்தவர்களை கவரும் வகையில் கிராம பாணியில் இல்லாது மன்னராட்சி காலகட்டத்தை நினைவுகூறும்படி செய்தாலென்ன என்ற யோசனை தோன்ற, உடனே அதை செயல்படுத்த தொடங்கிருந்தான் தீபன். சுமார் ஒரு வருட அயராத உழைப்பு! இப்போது கண் முன்னே உருவம் பெற்று நிற்கையில் அவனுக்குள்ளே பெருமிதம்!
தீபன் சக்கரவர்த்தி அரசியல் பின்னணியை விட்டு முற்றிலும் வெளிவந்து கைத்தேர்ந்த தொழிலதிபராய் உருபெற்றிருந்தான்! தந்தையின் பெயரை தாண்டி அவனுக்கென்ற தனி அடையாளம்!
இதற்கும் “D-வில்லேஜ்” என தீபன் பெயரிட, இதை வீடியோ காலில் பார்த்த உஷா இதன் பிரம்மிப்பில் சொக்கி, “இது வில்லேஜ் இல்லடா, சொர்க்கம்!” என வியந்து சொல்ல, அதையே பிடித்துக்கொண்டான் தீபன்.
‘அட, இதுக்கூட நல்லா இருக்கே?!’ என்ற எண்ணம் வந்ததுமே, ‘D-வில்லேஜ், D-பாரடைஸாய்’ மாறிவிட்டது.
நாளைய திறப்பு விழாக்கான ஏற்ப்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. விழாவுக்கு வரவிருக்கும் முக்கிய பிரமுகர்களை மலர் தூவி வரவேற்க ஆஜானுபாகுவான யானைகளும், அவர்களை உள்ளே அழைத்து செல்ல, தங்க நிறத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்களும் தயார் நிலையில் இருந்தன.
கோட்டை சுவர் தாண்டி சென்றால், உள்ளுக்குள்ளே குடிசை முதல் ஒட்டுக்கட்டடம் வரை பலவித அமைப்பிலான வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் சிறு தோட்டம்! அதன் அருகிலேயே பொதுகிணறு, நான்கு வீட்டிற்கு ஒன்று என்ற அமைப்பில் இருந்தது. இன்னும் சற்று உள்ளே சென்றால், படித்துரையோடு ஆறு போன்ற அமைப்பில் ஸ்விம்மிங் பூல்!
மத்தியில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாய் எழுந்து நின்ற கட்டிடத்தின் வனப்பே சொன்னது, ‘இது ராஜா மந்திர்’ என்று! அதன் முகப்பிலேயே பெரும்படகு போன்ற அமைப்பிலான வரவேற்ப்பு மேடை! அலுவலர்கள் நின்று தங்கள் பணியை செய்ய எதுவாய் கணினிமயத்தோடு அமைந்திருந்தது. விஐபி-கள் வந்தால் தங்க வைக்கவென அந்த ராஜா மந்திரின் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
முகலாயர்கள் கால கட்டிட கலையை பெரும்பாலும் ஒத்திருந்தது D-பாரடைஸ்!
நாளைய விழாக்கான வேலைகள் ஜரூராய் நடக்க, விழா நாயகன் அங்கே இல்லாமல் இருப்பானா என்ன?
‘ராஜா தர்பார்’ போல அமைக்கப்பட்டிருந்த மீட்டிங் ஹாலில் நடுநாயகமான ‘அரி’முகம் வைத்த கதிரையில் நிஜ சக்கரவர்த்தியாகவே அமர்ந்திருந்தான் தீபன் சக்கரவர்த்தி.
எப்போதும் எதற்கும் பதட்டப்படாது, ‘நான் இப்படிதான்! இப்போ என்ன?’ என்று இலகுவாய் கையாளும் அவனுக்கு இன்று இயல்பு மாறி பெரும் கலக்கம்! அவன் பற்கள் பதட்டத்தில் கை விரல்களை கடித்துக்கொண்டிருக்க, ‘அடுத்து என்ன செய்வது?’ என்று எப்போதும் தோன்றாத கேள்வி அவனுள்.
அவனுக்கு ஒரு நிமிடம் கூட கொடுக்காத எதிர்தரப்பு, “இப்போ சொல்ல முடியுமா? முடியாதா?” என கேட்டுவிட்டது.
அலைபேசியின் ஒளித்திரையில் காணும் அந்த எதிர்த்தரப்பின் முகம் தீபனை திணற வைக்க, “ஓகே டேட், ஐயம் கோன்ன கட் தி கால்!” என்று சொன்னவளின் குரலில் கோவமோ, ஆத்திரமோ, பிடிவாதமோ ஒன்றுமில்லை. சொல்லிவிட்டு வீடியோ காலை துண்டித்திருந்தாள் தீரா! ‘தீ’பனும் ‘ரா’காவும் சரிவிகிதத்தில் கலந்த அவர்களின் செல்ல மகவு!
தீரா காலை கட் செய்ததுமே, “போச்சு... போச்சு.. போச்சு...” என வாய்விட்டு அலட்றினான் தீபன்.
அடுத்து அவன் பலமுறை தொடர்புக்கொள்ள முயன்றும் பலனில்லை. அழைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. தீபனும் கொஞ்சமும் அசராது மீண்டும் முயன்றுக்கொண்டே இருந்தான்.
பல வருடங்கள் சென்று இவனை புதியாய் பார்க்கும் யாராயினும் ‘இவனுக்கு இத்தனை பொறுமை உண்டா?’ என அதிசயத்தில் மூர்சையாயிருப்பர். அத்தனை பொறுமைசாலியாய் அவனை பண்படுத்தியிருந்தாள் தீரா.
பல தொடர் முயற்சிகளின் பலனாய் வீடியோ கால் அழைப்பு ஏற்கப்பட்டு விட, தீபனை நேர்கொண்டு பாராது முகத்தை திருப்பிக்கொண்டாள் தீரா.
“பேபிம்மாக்கு கோவமா...!?” தீபன் தாஜா செய்து பேச்சை தொடங்க, அதெல்லாம் அவன் மகளிடம் எடுப்படுமா?
“சொல்ல முடியுமா? முடியாதா?” இறுதியாய் அவள் கேட்டிருந்த அதே கேள்விலேயே பிடியாய் வந்து நின்றாள் தீரா. இப்போதும் அவள் முகத்திலோ குரலிலோ கோவம் இல்லை! ஆனாலும் அவள் வார்த்தைகள் அவள் கோவத்தை பறைசாற்ற, தள்ளி நின்று பார்க்கும் தந்தைக்கு, தன் மகவை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
“என்னடா பேபி சொல்லணும்!?” தெரிந்தே கேட்டான் தீபன்.
“ப்ச்!! லாஸ்ட் சண்டே நைட், நான் உங்க ரூம்க்கு டோர் நாக் பண்ணாம வந்துட்டேன்னு மாம் எப்படி கத்துனாங்க!! யூ க்நொவ் தட் ரைட்?” என்று விரல் நீட்டி கேட்ட தீரா, “பட் டுடே ஷி டிட் த சேம் டு மி! என் ரூம்க்குள்ள வரப்போ டோர் நாக் பண்ணாம அப்படியே வராங்க! நான் செஞ்சா அது மிஸ்டேக், அதே அவங்க செஞ்சா மிஸ்டேக் இல்லையா?” என்றாள் தீரா.
கேட்டுக்கொண்டிருந்தவனோ, ‘அன்னைக்கு நாங்க இருந்த நிலை அப்படி! நீ சடன்னா உள்ளே வரவும் ராகா கத்திட்டா!’ என்று முணுமுணுத்துக்கொண்டு, “அதுக்கு என்னடா செய்யலாம் இப்போ?” என்றான் தணிவாய்.
“அட்வைஸ் பண்ணுங்க, இனி இப்படி ரிப்பீட் பண்ணக்கூடாதுன்னு!!” என்று தீரா சொல்ல, “யாருக்கு?” என்றான் திகிலாய்.
“ப்ச்!! தி கிரேட் அனுராகாக்கு தான்!!” கைகளை ஆட்டி தீரா சொன்ன தினுசில் தீபனுக்கு சிரிப்பு வர, எங்கிருந்தோ, “ஏய்ய்ய்...” என்ற ராகாவின் குரல் கேட்டது அவனுக்கு.
“சொல்லுங்க டேடி!!!” தீரா இப்போது கத்த, கேமரா அங்கும் இங்கும் ஆடியது. அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் சாடிக்கொள்வது வேறு அவனுக்கு கேட்க, அவன் முகம் புன்னகையில் விரிந்தது. ஒரு வழியாய் கேமராவின் ஆட்டம் நின்று நேராக, அதில் தெரிந்தாள் அவனின் ‘ராகா’!
“என்னடி சண்ட அங்க?” என்ற தீபனை முறைத்த ராகா, “அவ கேட்டா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள்.
அவள் புடவையை பிடித்து இழுத்துக்கொண்டே தீரா, “நோ...நோ...” என கத்துவது கேட்க, “சின்ன பொண்ணுடி!!” என்றான் தீபன். அவன் புன்னகை மட்டும் குறையவே இல்லை.
“இவளா? ஐஞ்சு வயசு பொண்ணு மாறியா பிகேவ் பண்றா? பேசுறதெல்லாம் பாரு....!!” வேண்டுமென்றே தீராவை சீண்டவென ராகா சொல்ல, “ஹாஹா...!! உன் பொண்ணாச்சே!” என்றவன் ராகாவின் முறைப்பில் உரக்க சிரிக்க, “டேடி திஸ் ஸ் நாட் அட் ஆல் ஃபேர்!” என்ற தீராவின் குரல் கேட்க, இவன் பதில் சொல்லும் முன்னே “சரிதான் போடி!!” என்றிருந்தாள் ராகா.
“ஹும்!! நான் பாட்டி கிட்ட சொல்றேன்!!” என்று அங்கிருந்து குடுகுடுவென ஓடியிருந்தாள் தீரா. உஷாவோ சக்ரவர்த்தியோ அனுராகாவின் பேச்சுக்கு ஆட்சேபணையோ, அவளை ஒரு சொல்லோ கூட சொல்லவே மாட்டார்கள் என்பது ஐந்து வயது சிட்டுக்கு நன்கு தெரியுமென்பதால், அவள் அழைத்து தன் அன்னையை பற்றி குறை படித்தது அவளது அன்னை தாராவிடம்!! தாராவும் லோகேஷும் வேர்ல்ட் டூருக்கு சென்றிருந்தனர்.
“உன்னை பார்த்து ஒன் வீக் ஆச்சு தீப்ஸ்!” ராகா முகம் சுருக்க, “இன்னைக்கு நைட் ராஜஸ்தான் வரப்போற!? அதுக்குள்ள என்ன பேபி!? கிளம்பிட்டியா? பிளைட் மிஸ் பண்ணிடாதீங்க!!” என்றான் தீபன்.
“நீ இவ்வளோ பொறுப்பா பேசுனா நல்லாவே இல்ல...!!” என்ற ராகா, “ஆபிஸ்ல ஒரு சின்ன வொர்க் இருக்கு! வீடியோ கான்பரென்ஸ்! ஜஸ்ட் ஹால்ப் ஆர் தான் ஆகும்! முடிச்சுட்டு கிளம்புடுவேன்!!” என்ற ராகாவுக்கு முன்பிருந்த கோவம், வேகம், ஆத்திரம் எல்லாம் எங்கே போனதென்றே தெரியாது. அவளது அக்மார்க் ‘எக்ஸ்சென்ட்ரிக் பீகேவியர்’ இத்தனை வருடங்களில் ஓடியே விட்டது.
வயதின் முதிர்வு, மனைவி என்ற பதவி, மருமகள் என்ற பொறுப்பு இதத்தனையும் தாண்டி, ‘தாய்மை’ என்ற செழுமை அவளை இன்னமும் மெருகேற்றி பேரழகாய் காட்ட, தீபன் அவளிடம் தினம் தினம் தொலைந்துக்கொண்டிருக்கிறான்.
அதற்குள் தீபனுக்கு அங்கே சில வேலைகள் வர, அதை கவனிக்க சென்றான். சிறிது நேரத்திலேயே அவன் தொலைபேசி அலற, திரையில் ‘தர்மா’ என பெயரை கண்டதுமே தீபனுக்கு ஆவேசம்!!
உடனே அழைப்பை ஏற்றவன், “என்னடா?” என்றான் பல்லிடுக்கில்.
“பத்து குதிரை இன்னைக்கு எவனிங் போல வந்து சேரும்ன்னு சொல்லிருக்காங்க! எல்லாமே இம்போர்ட்டட்! அதுக்கு இடம் அரேஜ் பண்ணனும்!” என்ற தர்மனின் குரலில், “டேய்......!! ஏன்டா இப்படி இருக்க நீ?” என அலுத்துக்கொண்டான் தீபன்.
பின்னே, ஸ்விட்சர்லேன்டில் புது மனைவியோடு ஹனிமூன் சென்றவன், போன வேலையை பார்க்காது இங்கே திறப்புவிழாக்கான வேலைகளை செய்துக்கொண்டிருந்தால் தீபனும் என்ன தான் செய்வான்!
அவன் சொல்ல சொல்ல கேட்காமல் போனிலேயே அத்தனை வேலைகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறான் தர்மன்.
“நீரஜா உன்னை கண்டுக்குறதே இல்லையா?” தீபனின் கேள்வியில், “நானே செம்ம கோவத்துல இருக்கேன் தீபன்! இவர்க்கூட வந்து போரிங்!!” என்ற நீரஜாவின் குரலில், “இதெல்லாம் அவமானம்டா தர்மா! உன்னை போரிங்ன்னு சொல்லுற அளவுக்கு வச்சுக்கலாமா நீ?” என்றவன், “இனியொரு முறை நீ கால் பண்ணுனா, உன்னோட டூரிஸ்ட் விசாவை இன்னும் ஒரு மாசத்துக்கு எக்ஸ்டென்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ!!” என மிரட்ட அது சரியாய் வேலை செய்தது.
“இங்க எனக்கு நாகா இருக்கான்! நீ உன் வேலையை மட்டும் பாரு அங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் தீபன்.
தீபனை அனுராகா விரும்பியபோது ‘அவன் உனக்கு செட்டே ஆக மாட்டான்!’ என ஒற்றைக்காலில் நின்ற நீரஜா, தர்மனின் மீது காதலில் விழுந்தது விந்தையிலும் விந்தையே!
அனுராகா கூட, “அவன் உனக்கு செட்டே ஆக மாட்டான் நீரு” என அவளை போலவே சொல்ல, தர்மன் தான் வேண்டும் என ஒரே பிடியாய் நின்றுவிட்டாள் நீரஜா. கடந்த மாதம் நடந்த அவர்கள் திருமணத்தில் கூட, “இப்போ புரியுதா? காதல் வந்துட்டா செட் ஆகாதுன்னு தோனுற எல்லாமே செட் ஆகிடும்ன்னு!” என்று ராகா சொல்லிக்காட்ட, அதை உணர்ந்தவள் என்பதால் வெட்கப்பூச்சோடு ஆமோதித்தாள் நீரஜா.
இரட்டையர்களில் ஒருவன் குடும்பஸ்த்தன் ஆகிவிட, இன்னொருவனுக்கு பெண்ப்பார்க்கும் படலம் நடந்துக்கொண்டே இருக்கிறது.
திறப்புவிழா ஏற்ப்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் மீண்டும் ஒலித்தது தீபனின் அலைபேசி.
‘அட!!’ என எடுத்து பார்த்தவன், அழைப்பு சக்கரவர்த்தியின் பி.ஏ விடம் இருந்து என தெரிந்ததும் சட்டென உயிர்ப்பித்தான்.
இவன் ‘ஹலோ’ என சொல்லும்முன்னே, “மிதுன் சார்க்கு நினைவு திரும்பிடுச்சு! ஹாஸ்பிட்டல் கொண்டு போய்க்கிட்டு இருக்கோம், நீங்க உடனே கிளம்பி வாங்க!!” தந்தி சொற்கள் போல வந்த வார்த்தைகள் இவனை சேர, வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு கிளர்ச்சி அவனுக்குள் பிரவாகமெடுத்தது.
“மி...து...ன்...” அவன் உதடுகள் முணுமுணுக்க, ஐந்து வருட தவம் ஒரு முடிவுக்கு வந்ததை எண்ணி, அவன் கண்கள் கூட மெலிதாய் பனித்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் அவன் விமானநிலையத்தை அடைந்திருக்க, கனத்த மனதோடும் பெருத்த எதிர்ப்பார்ப்போடும் பயணமானான் சென்னையை நோக்கி!!