"டேய் சக்கர, கடைய பாத்தது சோமசுக்கு ஆடர் பண்ணிடனும். அங்க போய்க் காசில்லை கப்பியில்லன்னு கத சொன்ன... மாப்புல உனக்குச் சங்குதா" என எச்சரித்தபடி கூட்டி சென்றான். அவர்கள் பின்னோடு கதிரவனும் கடனே என்று வந்துகொண்டிருந்தான்.
அவனுக்கு இதில்லெலாம் ஆர்வமில்லை. தொழில், தொழில் செய்வதில் தான் நாட்டம் அதிகம். அதற்கு ஒரு பட்டப்படிப்பு வேணும். அவ்வளவே அவனுடைய எண்ணம்.
அவர்களுக்கு விவசாயத்துடன் இறால் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இவனுக்கு அதில் ஆர்வம் அதிகம், ஆனால் அவன் பேச்சு அவ்வளவாக அங்கே எடுபடாது. காரணம் சிவலிங்கத்தின் தங்கையின் கணவர் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். சொத்து இவர்களுடையது தான் என்றாலும் பொறுப்பு அவர் கையிலிருந்தது. அதற்கான இடத்தையும் அளித்தது லிங்கமே. லிங்கத்தைப் பொறுத்தவரை தங்கை பாரிஜாதமும் அவரது கணவன் மச்சக்காளையும் சொல்வதனைத்தும் உண்மை. பாரிஜாதமென்றால் பாசமலர் சாவித்திரி என்ற எண்ணம் நம் நாயகனின் தலைக்கட்டு தலைவருக்கு….
---------------------------------------------------------------------------------------------------------
"அட! அட! எம்புட்டு அழகான புள்ளைங்க... நம்ம ஊருலயு இருக்குதுங்களே" என புலம்பியபடி சக்கரை வர, பாண்டிகூட சோமாஸ் நினைவிலிருந்து மெல்ல வெளிவந்தவனாக, "அட நல்லா புதுசா சுட்ட பலகாரமாறி பிரெஷா இருக்குதுங்களே" என ரசித்தபடி சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தான்.
"ஏ... உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா நா நிக்கும்போதே ஒரு பையன கை நீட்டி அடிப்ப. அதுவு இந்த வயசுல உனக்கு லவ் லெட்டர் வேற… தப்பு செஞ்சது நீ" என ஏகத்துக்கும் குதிக்க. அந்தப் பெண் கொஞ்சமும் அசையாமல் நின்றாள்.
அது கனல்விழியே!
அவளின் ஸ்திரமான பாவனைச் சுற்றி இருந்தவர்களுக்கு அவளைத் திமிறானவளாகக் காட்டியது.
"கொஞ்சமாச்சு பயமிருக்கா? கைய நீட்டு" எனக் கூறியபடியே அருகிலிருந்த ஸ்கேலய் எடுத்து அடிக்கப் போக, கனல் விழி வாய் திறந்தாள். ஆனால் அதில் பயமுமில்லை பதற்றமும் இல்லை.
"மிஸ். நீங்க என்ன அடிங்க. அதுக்கு முன்னாடி ஒரு நிமிச" எனக் கூறி மீண்டும் தனக்கு முன் நின்ற பையனை ஓங்கி மற்றொரு அரை இம்முறை சற்று பலமாகவே கொடுத்தவள், "இப்ப மரியாதையா உண்மைய சொல்லல. உன்ன தொலைச்சுடுவே. யார்கிட்ட இத கொடுக்க வந்த ? நானா உண்ட கேட்டே ? எனக்கு ஒன்னு இல்ல. எங்க அப்பாவை இப்பவே கூட்டியாரே. ஆனா சும்மா இல்ல, உன்னை இப்பவே உன் வீட்டுக்கு முன்னாடிவிட்டு அடிப்பே.
அவனுக்கு இதில்லெலாம் ஆர்வமில்லை. தொழில், தொழில் செய்வதில் தான் நாட்டம் அதிகம். அதற்கு ஒரு பட்டப்படிப்பு வேணும். அவ்வளவே அவனுடைய எண்ணம்.
அவர்களுக்கு விவசாயத்துடன் இறால் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இவனுக்கு அதில் ஆர்வம் அதிகம், ஆனால் அவன் பேச்சு அவ்வளவாக அங்கே எடுபடாது. காரணம் சிவலிங்கத்தின் தங்கையின் கணவர் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். சொத்து இவர்களுடையது தான் என்றாலும் பொறுப்பு அவர் கையிலிருந்தது. அதற்கான இடத்தையும் அளித்தது லிங்கமே. லிங்கத்தைப் பொறுத்தவரை தங்கை பாரிஜாதமும் அவரது கணவன் மச்சக்காளையும் சொல்வதனைத்தும் உண்மை. பாரிஜாதமென்றால் பாசமலர் சாவித்திரி என்ற எண்ணம் நம் நாயகனின் தலைக்கட்டு தலைவருக்கு….
---------------------------------------------------------------------------------------------------------
"அட! அட! எம்புட்டு அழகான புள்ளைங்க... நம்ம ஊருலயு இருக்குதுங்களே" என புலம்பியபடி சக்கரை வர, பாண்டிகூட சோமாஸ் நினைவிலிருந்து மெல்ல வெளிவந்தவனாக, "அட நல்லா புதுசா சுட்ட பலகாரமாறி பிரெஷா இருக்குதுங்களே" என ரசித்தபடி சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தான்.
"ஏ... உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா நா நிக்கும்போதே ஒரு பையன கை நீட்டி அடிப்ப. அதுவு இந்த வயசுல உனக்கு லவ் லெட்டர் வேற… தப்பு செஞ்சது நீ" என ஏகத்துக்கும் குதிக்க. அந்தப் பெண் கொஞ்சமும் அசையாமல் நின்றாள்.
அது கனல்விழியே!
அவளின் ஸ்திரமான பாவனைச் சுற்றி இருந்தவர்களுக்கு அவளைத் திமிறானவளாகக் காட்டியது.
"கொஞ்சமாச்சு பயமிருக்கா? கைய நீட்டு" எனக் கூறியபடியே அருகிலிருந்த ஸ்கேலய் எடுத்து அடிக்கப் போக, கனல் விழி வாய் திறந்தாள். ஆனால் அதில் பயமுமில்லை பதற்றமும் இல்லை.
"மிஸ். நீங்க என்ன அடிங்க. அதுக்கு முன்னாடி ஒரு நிமிச" எனக் கூறி மீண்டும் தனக்கு முன் நின்ற பையனை ஓங்கி மற்றொரு அரை இம்முறை சற்று பலமாகவே கொடுத்தவள், "இப்ப மரியாதையா உண்மைய சொல்லல. உன்ன தொலைச்சுடுவே. யார்கிட்ட இத கொடுக்க வந்த ? நானா உண்ட கேட்டே ? எனக்கு ஒன்னு இல்ல. எங்க அப்பாவை இப்பவே கூட்டியாரே. ஆனா சும்மா இல்ல, உன்னை இப்பவே உன் வீட்டுக்கு முன்னாடிவிட்டு அடிப்பே.