“ம்ம் என்னாச்சு??!! தெரியலை.. டாக்டர்ஸ் ஒன்னும் சொல்லலை..” என்றவனுக்கு அண்ணனும் அம்மாவோடு வருவானோ என்ற யோசனை??
கூடாது என்ற ஆசையும்.
இவன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வியும்.
“ஓ..!! அனு பேரன்ட்ஸ் கிட்ட சொல்லலையா??! நான் வேணும்னா சொல்லிடவா..” என்று மிதுன் கேட்க, வேகமாய் வேண்டாம் என்றான் தீபன்.
“ஏன்டா??! சொல்லவேணாமா???” என,
“இப்போ வேணாம்... அம்மா வரட்டும்..” என்றவனின் குரலில் நீ வந்திடாதே என்ற செய்தி இருக்க,
“அம்மாவோட நானும் தான் வர்றேன்.. அங்க கொஞ்சம் வேலை இருக்கு..” என்று மிதுன் அழுத்தம் திருத்தமாய் சொல்லி, தீபனுக்கு அண்ணன் என்பதை நிரூபித்தான்.
---------------------------------------------
பொழுது விடியவே அனைவரும் காத்துக்கொண்டு இருந்தனர். ஒருபுறம் தீபனின் நண்பர்கள் பெங்களூருவை தொட்டிருக்க, உஷாவும் மிதுனும் சென்னையிலிருந்து கிளம்பியிருந்தனர். தாராவிற்கு அழைத்துப் பார்க்க, லைன் கிடைக்கவேயில்லை. மிதுன் லோகேஸ்வரனுக்கு அழைக்க, அவருக்கும் லைன் கிடைக்கவில்லை.
“என்னடா??!!” என்று உஷா கேட்க,
“இப்போதைக்கு சொல்லவேணாம்னு தீப்ஸ் சொன்னான் ம்மா.. பார்த்துக்கலாம்.. அங்கிளோட பிஏ க்கு சொல்லியாச்சு..” என, அப்போதும் கூட உஷாவிற்கு மனது
சமாதானம் ஆகவில்லை.
என்னவோ ஒன்று அவரை நிம்மைதியடைய விடாது செய்துகொண்டு இருந்தது.
அங்கே மருத்துவமனையிலோ, நான்கு மணி நேரத்திலேயே அனுராகா கண் விழித்துவிட,
முதலில் அவள் கேட்டது “தீபன் எங்கே??” என்பதுதான்..
------------------------------
“புரியலையா??!!” என்று அவன் முகம் பார்த்தவள், “ட்ரிப் போனோம்.. எனக்கு அடிபட்டிடுச்சு.. நீ அட்மிட் பண்ணிட்ட.. இவ்வளோதான் விசயம்.. ஓகே வா.. தென் பிரண்ட்ஸ்..” என்று சொல்லி முடிக்கும் முன்னே,
“வந்திட்டு இருக்காங்க..” என,
“ம்ம் தட்ஸ் குட்.. நமக்குள்ள நடந்தது நமக்கு மட்டும் தெரிஞ்சதா இருந்தா போதும்..” என்றவளின் முகத்தினில் ஒரு அமைதி தெரிந்தது. முன்னிருந்த கோபமும் ஆவேசம் அதெல்லாம் எதுவுமில்லை.
ஆனால் அவனுக்கோ ‘நமக்குள்ள அப்படி என்ன நடந்துச்சு??!!’ என்றுதான் கேள்வி ஓடியது.
“நான் ஒருவிசயம் நினைச்சேன்.. அதுவும் நடந்திடுச்சு.. தென் நீ ஒன்னு நினைச்ச அதுவும் கூட நடந்திடுச்சு..” என, தீபன் நீயே பேசு என்றுதான் பார்த்தான்.
-------------------------------------------------------
அவனுக்கான அறைக்கு வந்தவன், அப்படியே கண்களை மூடி சாய்ந்துகொள்ள, நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு.. தான் என்ன நினைக்கிறோம் என்பதுகூட அவனுக்கு உணரவில்லை.
அனுராகாவோ தீபன் எழுந்து போவதையே பார்த்தவள் ‘நான் ஒன்றும் இனி செய்ய முடியாது..’ என்பதுபோல் அவளாகவே லேசாய் தோள்களை குலுக்கிக்கொள்ள மனதோ தான் என்ன தவறு செய்தோம் என்று தோன்றியது.
பிரஷாந்தும் இப்படிதான் பாதியில் எழுந்து வந்துவிட்டான்..
அனுராகாவிற்கு இப்போது அதை நினைத்தால் சிரிப்புத்தான் வந்தது. அவன் செய்த தவறு அப்போது அவனுக்குத் தெரியவில்லையா என்ன?? இதற்கும் அனுராகா வேறொன்றும் செய்யவில்லை பிரஷாந்திடம் மன்னிப்புத்தான் கேட்டாள்.
கூடாது என்ற ஆசையும்.
இவன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வியும்.
“ஓ..!! அனு பேரன்ட்ஸ் கிட்ட சொல்லலையா??! நான் வேணும்னா சொல்லிடவா..” என்று மிதுன் கேட்க, வேகமாய் வேண்டாம் என்றான் தீபன்.
“ஏன்டா??! சொல்லவேணாமா???” என,
“இப்போ வேணாம்... அம்மா வரட்டும்..” என்றவனின் குரலில் நீ வந்திடாதே என்ற செய்தி இருக்க,
“அம்மாவோட நானும் தான் வர்றேன்.. அங்க கொஞ்சம் வேலை இருக்கு..” என்று மிதுன் அழுத்தம் திருத்தமாய் சொல்லி, தீபனுக்கு அண்ணன் என்பதை நிரூபித்தான்.
---------------------------------------------
பொழுது விடியவே அனைவரும் காத்துக்கொண்டு இருந்தனர். ஒருபுறம் தீபனின் நண்பர்கள் பெங்களூருவை தொட்டிருக்க, உஷாவும் மிதுனும் சென்னையிலிருந்து கிளம்பியிருந்தனர். தாராவிற்கு அழைத்துப் பார்க்க, லைன் கிடைக்கவேயில்லை. மிதுன் லோகேஸ்வரனுக்கு அழைக்க, அவருக்கும் லைன் கிடைக்கவில்லை.
“என்னடா??!!” என்று உஷா கேட்க,
“இப்போதைக்கு சொல்லவேணாம்னு தீப்ஸ் சொன்னான் ம்மா.. பார்த்துக்கலாம்.. அங்கிளோட பிஏ க்கு சொல்லியாச்சு..” என, அப்போதும் கூட உஷாவிற்கு மனது
சமாதானம் ஆகவில்லை.
என்னவோ ஒன்று அவரை நிம்மைதியடைய விடாது செய்துகொண்டு இருந்தது.
அங்கே மருத்துவமனையிலோ, நான்கு மணி நேரத்திலேயே அனுராகா கண் விழித்துவிட,
முதலில் அவள் கேட்டது “தீபன் எங்கே??” என்பதுதான்..
------------------------------
“புரியலையா??!!” என்று அவன் முகம் பார்த்தவள், “ட்ரிப் போனோம்.. எனக்கு அடிபட்டிடுச்சு.. நீ அட்மிட் பண்ணிட்ட.. இவ்வளோதான் விசயம்.. ஓகே வா.. தென் பிரண்ட்ஸ்..” என்று சொல்லி முடிக்கும் முன்னே,
“வந்திட்டு இருக்காங்க..” என,
“ம்ம் தட்ஸ் குட்.. நமக்குள்ள நடந்தது நமக்கு மட்டும் தெரிஞ்சதா இருந்தா போதும்..” என்றவளின் முகத்தினில் ஒரு அமைதி தெரிந்தது. முன்னிருந்த கோபமும் ஆவேசம் அதெல்லாம் எதுவுமில்லை.
ஆனால் அவனுக்கோ ‘நமக்குள்ள அப்படி என்ன நடந்துச்சு??!!’ என்றுதான் கேள்வி ஓடியது.
“நான் ஒருவிசயம் நினைச்சேன்.. அதுவும் நடந்திடுச்சு.. தென் நீ ஒன்னு நினைச்ச அதுவும் கூட நடந்திடுச்சு..” என, தீபன் நீயே பேசு என்றுதான் பார்த்தான்.
-------------------------------------------------------
அவனுக்கான அறைக்கு வந்தவன், அப்படியே கண்களை மூடி சாய்ந்துகொள்ள, நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு.. தான் என்ன நினைக்கிறோம் என்பதுகூட அவனுக்கு உணரவில்லை.
அனுராகாவோ தீபன் எழுந்து போவதையே பார்த்தவள் ‘நான் ஒன்றும் இனி செய்ய முடியாது..’ என்பதுபோல் அவளாகவே லேசாய் தோள்களை குலுக்கிக்கொள்ள மனதோ தான் என்ன தவறு செய்தோம் என்று தோன்றியது.
பிரஷாந்தும் இப்படிதான் பாதியில் எழுந்து வந்துவிட்டான்..
அனுராகாவிற்கு இப்போது அதை நினைத்தால் சிரிப்புத்தான் வந்தது. அவன் செய்த தவறு அப்போது அவனுக்குத் தெரியவில்லையா என்ன?? இதற்கும் அனுராகா வேறொன்றும் செய்யவில்லை பிரஷாந்திடம் மன்னிப்புத்தான் கேட்டாள்.