அருமையான பதிவு மல்லி
.ஒரு சண்டை, அதில் என் மண்டை உடைஞ்சாலும் பரவாயில்லை,எதுக்கு இப்படி உடம்பை கெடுத்துக்கறான்னு நெனைக்கறவனுக்கு,சீதா,விசாலியம்மா இப்படியே டென்சன் பண்ணா,யார் மண்டை உடைய போகுதுன்னு தெரியாது ரவி
.
குழந்தைக்காக தான் தன்னை அழைத்து வந்திருக்கிறான்,பேபியை பெத்து கொடுத்துட்டு போகச் சொன்னவன் தானே,அவனுக்கு நான் தேவையில்லை என்ற எண்ணமும்,என்னை போக சொன்னால் இவனை விட்டு தனியே எப்படி இருக்க முடியும் என நினைத்து மனம் குழம்புகிறாள்
.
கல்யாணம் அன்றே விட்டு விட்டு சென்றவன் தானே,அதனால் தன்னை எல்லோரும் இளாக்காரமாக
நினைக்கிறார்கள் என்ற எண்ணமும்
,நான் மட்டும் தான் அவனை தேடுகிறேன்,அவன் என்னை தேடுவதில்லை என்ற நினைப்பும் ஷர்மியை சுயபச்சாதாபம் கொள்ள செய்கிறது
ஷர்மி குழந்தை பெத்து எடுக்கறதுக்குள்ளே,இவன் தான் ஷர்மியை ஒரு வழியாக்கிடுவான் போல,
இதுல பேபி இவனுக்கு கம்பெனி குடுக்கனுமாம்
.
ஷர்மியை பற்றி நன்கு புரிந்து,அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கவதை,அன்பாக,பாசமாக பேசி அரவணைத்து அவளுக்கு புரிய வைக்க வேண்டாமா,அதட்டி,மிரட்டி,கோபப்பட்டு கத்துவதால் ஷர்மி தானும் குழம்பி,தன் உடலையும் கெடுத்துக்கொள்கிறாள்
.