Naan Enathu Manathu 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

'கௌஷி சிறப்பாய் எடுத்துக்காட்டி செய்வாள்' :p:p:p
வேலை மட்டும் அம்மா மாதிரி போதும்...... வாய் வேண்டாம்.......
சாப்பாடு போட்டு சந்தோஷ் மனசுல கல்லெறிஞ்சுட்டா போல.....
சந்தோஷ்க்கு நல்ல துணை தான்......

இன்னும் காம்ப்ளிகேட் பண்ண ரவி விரும்பலை......
அப்பா எப்போவும் போல் ரவி கையில் ஒப்படைச்சாச்சு......
அண்ணன் எட்டிநிற்கிறான்னு ஷர்மிக்கு தெரிஞ்சுடுச்சு......
இப்போ ஷர்மியின் அந்த உறுதி ரவியை எட்டி நிற்க வைப்பது தான் போல.......

இதுவரை செஞ்ச தப்பை இனி செய்யமாட்டான் ரவி......
அவனால பொண்டாட்டி புள்ளை ரெண்டு பேருக்கும் கஷ்டம்........
ஷர்மி என்ன பண்ணப்போறாளோ???

அம்மா இல்லை....... அப்பா அண்ணன் கிட்ட எல்லாம் சொல்லமுடியாது.......
இந்த நிலைமையில் வீட்டுக்காரன் போடி போ-னு சொன்னது அவ்ளோ சீக்கிரம் போய்டுமா என்ன......

சிலநாட்கள் அப்பா கௌஷியை இங்கே விட்டுட்டு போகலாம்.......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
சீதாவுக்கு இது தேவை தான்,குடும்பத்துக்காக உழைத்து, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து,இன்று தங்களை நல்லநிலையில் வைத்திருப்பவன் என்று எண்ணாமல்,பேசியே கல்யாணத்தன்று வீட்டை விட்டு போக வைத்து விட்டார்.

கர்ப்பிணி என்றும் பார்க்காமல் ஷர்மிக்கு விருப்பமில்லாததை பேசி மருத்துவமனையில் சேர்க்க காரணமாகி விட்டார்.

எல்லாம் எனக்கு தெரியும் என அப்படி என்ன ஆணவம்,நான் தான் உன் மாமியார்,இனி நான் சொல்வதை தான் கேட்கனும் என்று சொல்லி மாமியாராக ஆட்டம் போட்ட சீதாவை மருமகளாக அடங்கி இருக்க வைத்து விட்டார்.

ஷர்மியின் உடல்நிலை சரியாகிவிட்டது,ஷர்மி தன்னிடம் எதுவும் சொல்லாதது சந்தோஷூக்கு வருத்தத்தையும்,ஏதாவது நடந்திருந்தால் என்ற பயத்தையும் கொடுத்திருக்கு.

எனக்கு இவ டென்ஷனே பெருசு,அதனாலே யாரோடும் பேசலை.நல்லவேளை ரவி சொன்னதை ஷர்மி கவனிக்கலை போல,கவனிச்சிருந்தா தர்மஅடி கிடைச்சிருக்கும்.

கௌசியின் மனதில் எதுவுமில்லை.அம்மாவிற்க்கு பிறகு தன்னை யாரும் இப்படி கவனித்து கொள்ளாதது சந்தோஷ் மனதுக்கு இதமாகவும்,கௌசியை கவனிக்கவும் வைக்கிறது.

ரவி தனது பேச்சால் மனைவி,குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதை புரிந்து கொண்டான்.இனி ஷர்மியிடம் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டான்.அருமையான பதிவு மல்லி.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

வாங்க மல்லி.. வாங்க..:love::love:
இப்பதான் சைட்டு களை கட்டுது...

ரெண்டு பேருக்கும் நடுவுல இன்னும் ஒண்ணுமே சரி ஆகலையா??? :(:(இனியாவது ரவி, ஷர்மி மனசை புரிஞ்சு நடந்துப்பானா??? இப்ப வீட்டுக்கு வேற கூப்பிடுறான்... ஷர்மி போவாளா???:unsure::unsure:

ஆஹா அடுத்த ஜோடி ரெடி ஆயிருச்சு போல... சந்தோஷ் - கௌசி..
கௌசி பேச்சுல அவங்க அம்மா மாதிரி இல்லாம இருந்தா போதும்...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:)சந்தோஷ் கௌசி நைஸ் ஜோடி தான்...

செயற்கையா ஒரு உறுதியை வர வச்சிக்கிறா னு ரவி புரிஞ்சிக்கிட்டானா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top