ரவி கல்யாணத்துக்கு முன்னாடி தான் ஷர்மி அவனை காதலிக்கறதா ஊரெல்லாம் பேச வைத்து அசிங்கப்படுத்துனான்,இப்போ குழந்தைய பெத்து கொடுத்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்றான்.வீட்டை விட்டு போறவள சமாதானம் செய்யாம இப்படி பேசறானே
.
கர்ப்பகாலத்தில் மனஅழுத்தம் கூடாது,நிம்மதியா இருக்கனும்னு கல்யாணம் ஆகாத சந்தோஷ், கௌசல்யாக்கு தெரியுது ,கல்யாணம் பண்ணவனுக்கும்,மூனு புள்ளை பெத்த சீதாக்கும் தெரியலை.
ரவி,ஷர்மியை திருமணம் செய்த விதம் தவறென்றாலும்,அவன் உழைப்பில் மூன்று தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து,வீடும் கட்டி கொடுத்து எந்த குறையும் இல்லாமல் இருப்பதால் தான் சீதா நியாயத்தை பேசறேன்னு பேசி,அவங்க பையன் செத்துட்டான்னு சொல்ல வச்சிடுச்சு
.
ஷர்மி அப்பா வீட்டுக்கு போக விரும்பலைனு தெரிஞ்சும்,சீதா அவளை போகச் சொன்னது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்
.ரவி கல்யாணம் ஆனவுடனே சீதா பேசின பேச்சில் சொல்லாமல் வீட்டை விட்டு போனான்,இப்போ பேசியே ஷர்மியையும் தொறத்திடுச்சு
.
கௌசல்யா சொன்னது போல இனியாவது வாசன் மனைவியை அடக்குவாறா
.ரவியின் கோபத்தால் மனைவியையும்,தன் குடும்பத்தையும் யாரும் தேவையில்லை இனி என் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறி மீளாத பழிக்கு ஆளாகிட்டான்
.அருமை மல்லி
..