அடேய் ! இது என்னாங்கடா வாழ்க்கை...... ! கோ..... டர்ன்.... ரிபீட்டு....என்கிற மாதிரி.. முதல்ல உங்களுக்குள்ள லவ்வே இல்லடா..... ! சாமி சத்தியம் !
அப்ப இல்லைன்னாலும் பரவாயில்லை... ஆனா இப்ப கல்யாணம் ஆயிடுச்சில்ல.... அட்லீஸ்ட் இனிமேச்சாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணி தொலையுங்கடா.....
இது நடுவுல ஆத்தாக்காரி வேற....இப்பத்தான் ஓவரா பாசம் காட்டிக்கிட்டு....அதான் இத்தனை நாள் பொண்டாட்டியைக் கூட விட்டுட்டு உன் புள்ளையா இருந்தான் இல்ல..... அட இனிமேலாவது சைந்துவோட புருஷனா
வாழ விடு தெய்வமே...... நீ மட்டும் உன் குடிகார புருஷன் ஒருநாள் நைட் வீட்டுக்கு வராம மட்டையாயிட்டாலும்.... உடனே யாரையாவது கைய கால புடிச்சு வீட்டுக்கு கொண்டு வந்து விட சொல்றேயில்ல..... அப்புறம் உன் புள்ளைய மட்டும்
ஏன் வாழ விடாம பண்றே ஆத்தா.....!!!
இது கொஞ்சம் கூட சரியில்லை.... ஆமா சொல்லிட்டேன்.... உன் பொண்ணு பூவு மட்டும் அவ புருஷனோட வாழணும், புள்ளையும் பெத்துக்கணும்... ஆனா நீ மட்டும் உன் பிள்ளைய விட்டும் தரமாட்டே.... வாழிம் விடமாட்டே......உனக்கு காவலா உன் புருஷனும் இருக்கணும்.... உன் புள்ளையும் இருக்கணும்.... ஆனா தாலி கட்டிக்கிட்ட அவனோட பொண்டாட்டி மட்டும் கட்டினவன் துணைக்கூட இல்லாம.... தனியா ஒரு வீட்டுக்குள்ள பயந்து பயந்து வாழணும் அப்படித்தானே....????
இது கொஞ்சம் கூட சரியில்லை ஆத்தா....சரியில்லை..... ஆமா சொல்லிப்பூட்டேன்..... சின்ஞ்சிறுசுகளை வாழ விடுங்க தெய்வமே....!!!