அவனுக்குள் ஒரு தெளிவு இல்லை அது தான் ஈஸ்வர் கதாபாத்திரம் மேல் ஒரு பிடித்தம் வரவில்லை. நானும் ரவுடி தான் சொல்லிக்கொள்கிறேன், அவ்வளவே ...
நீல நயங்களில் முத்து எடுப்பதற்காக அவன் மூழ்கும்போது நமக்கு தான் மூச்சு திணறுகிறது, அய்ய எப்ப பாரு இவனோட இதே ரோதனை னு தோணுது.. கண்களால் கவரப்படுகிறான், ஒரு அளவிற்கு இருந்தால் ஓகே..................... அவளின் குணம் அவனிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.,.. அவன் அவளின் மனதை அறிய முயற்சிக்க மாட்டேங்கிறான்..... தன் தவறை திருத்த நினைக்கிறன், அப்படி தவறை உணர்ந்தவன் மேல் ஒரு அபிப்பிராயமே வரவில்லை..
ஐஸிடம் காதல் சொன்னான் அவளிடம் காதல் மட்டுமே சொன்னான் அவளிடம் எப்போதும் ஒரு இடைவெளி வைத்துக்கொண்டான், அவளை வார்த்தைகளால் வாட்டினான், மொத்தத்தில் மதிக்கவில்லை...
வர்ஷினியிடம் கூட அப்படியே முதலில், பின்னர் அந்த நீல கண்கள் செய்த மாயம் அவளிடம் எல்லாம் தலைகீழாகப் போக வைத்தது....
மல்லி கதையின் கதாநாயகர்களில் அதிகம் ஆராய்ச்சி, அலசல், விமர்சிக்கப்படுவது ஈஸ்வர் பற்றி தான் நினைக்கிறன்
என்ன மல்லி சரியா!!!.. ஒரு வகையில் இதுவும் ஒரு வெற்றியே மல்லி உங்கள் எழுத்துக்களுக்கு, ஒரே மாதிரி ஸ்டிரோ டைப்பாக இல்லாமல், நாயகனின் இன்னொமொரு பரிமாணம்..... ஆனாலும் நான் ஈஸ்வருக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன்
எல்லாம் சரி தான் மல்லி, ஆனாலும் எனக்கொரு ஆசை, வர்ஷினி வூடு கட்டி சுத்தி சுத்தி சுத்தவிடனும் ஈஸ்வரை ஹா ஹா...