Ansadoss
Well-Known Member
பாரதி கண்ட புதுமை பெண் பற்றி விளக்கம் வேண்டும் பானும்மா.அருமை, அருமை, வெகு அருமையான, மிகச்சரியான விளக்கம், பாத்திமா டியர்
பாரதி தன் புதுமை பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளது என்ன? என்று பட்டியலிடுங்களேன். நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.
எனக்கு இன்னும் புரியவில்லை மல்லியின் நாயகியை பற்றி பேசும் போது.
இதுவல்ல பாரதியின் கனவு என்று பாத்திமா எதை குறிப்பிட்டிருக்கிறார்கள்?
பாரதியின் கனவுக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் இங்கு யாரேனும் மோசமான கருத்தினை பதிவிட்டீருக்கிறார்களா?
அப்படி இருந்தால் அந்த கருத்துப் பதிவு எது என்று குறிப்பிடுங்கள் திருத்தி கொள்கிறோம்.
அப்படி இல்லை மனதில் தோன்றியதை எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக போட்டேன் என்பவர்கள் அதை இங்கே பதிவிட வேண்டாமே.
தங்கள் திறமைகளை வெளிகொணர நினைக்கும் தோழமைகள் மல்லியிடம் கேட்டால் புதிய Forum உருவாக்கி தர அவர்கள் தயங்குவதே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே பானும்மா.
பாத்திமா கூட இந்த கதைக்கு சம்பந்தமில்லாத ஆனால் சமுதாயத்திற்கு தேவையானதாக கருதும் தனக்கு தோன்றிய கருத்துக்களை தனி Forumல் பதிவிடலாமே.
இங்கே மல்லியின் கதாபாத்திரங்களை பற்றியும் அக்காதாபாத்திரங்களின் குணாதிசயங்களை பற்றி மட்டும் விமர்சிப்பது மட்டுமே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.
மற்றபடி நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்வதும். நான் உங்களை பற்றி தெரிந்து கொள்வதும். நாம் நம் குடும்பம், வேலை, குழந்தைகள் மற்றும் நமது சுகதுக்கங்களை பற்றி பகிர்ந்து கொள்வதும் நன்றாக இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். நமக்கிடையே கண்ணுக்கு தெரியாத பந்தத்தை அது உருவாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.