Rudraprarthana
Well-Known Member
'பொய் சொல்லாதீங்க நீங்க அப்படி நினைக்கலை' என்று அவனை பார்த்து கீர்த்தி முனுமுனுக்க
'என்ன சொன்ன..??'
'ஒண்ணுமில்லை'
'ஏதோ சொன்ன எனக்கு கேட்டுச்சி ஒழுங்கா சொல்லுடி' என்று அதட்ட,
அழுத்தமாக மௌனம் சாதித்தாள் கீர்த்தி,
'சொல்லுடி' என்றான்
"நீங்க என்னை கன்னத்துல அடிக்க நினைக்கலைன்னு சொன்னேன்" என்று மெல்லிய குரலில் கூற,
'அப்படியா..!! என்று அவளை பார்க்க இப்போது அவனை பார்த்தவளின் விழிகளில் என்றுமே அவனை காணும்போது தோன்றும் நாணமும் படபடப்பும் போட்டி போடுவதை கண்டவன்..,
'அப்போ நான் என்ன நினைக்கறேன்னு உனக்கு தெரியுமாடி' என்றான் சற்று தணிந்த குரலில்,
'தெரியும்'
'ஓஒ..!! சொல்லு கேட்போம்' என்று அவளை பார்க்க,
அவளோ அவன் இலகுவான குரலில் தைரியம் வரபெற்றவள் அவன் முகத்தை தன் கரங்களால் தாங்கி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு சொற்களால் இல்லாமல் செய்கையால் அவன் எண்ணங்களை அவனுக்கு உணர்த்த ஆரம்பித்தாள்.
அவள் முத்தத்தை எதிர்பாராதவனிடம் சிறு புருவதூக்கல், "இதுவா நான் நினைச்சது" என்றிட 'ஆம்' என்ற தலையசைப்பு பெண்னவளிடம்
உடனே 'அவ்ளோதானா..???' என்ற சரணின் மயக்கும் குரல்,
'இல்லை' என்று தலை அசைத்தவள் அவன் மறுகன்னத்திலும் முத்தமிட,
'அவ்ளோதானா..??'
நாணம் மீதுற மறுப்பாக தலை அசைத்தவள் அவனை இன்னுமே நெருங்கி அவன் நெற்றியிலும் முத்தமிட்டு அவனை பார்க்க,
விழிகளில் ரசனை பொங்க அவளை பார்த்தவன் மீண்டும் 'அவ்ளோதானா..??' என்று கேட்க,
'இல்லை' என்று தலை அசைத்தவள் இதழ்கள் அவன் கண்களில் அழுத்தமாக பதிந்தது.
இமை தீண்டி விலக முயன்றவளை தன் அணைப்பில் நிறுத்தி 'அவ்ளோதானா..??' என்று அவள் செவியுரசி கேட்க
அவன் மீசையின் குறுகுறுப்பில் தகித்த பெண்ணவள் 'இல்லை' என்பதாக தலை அசைக்க,
"ஹ்ம்ம் அப்போ அடுத்து..??" என்ற சரணின் அதரங்கள் இப்போது அவள் செவியில் உஷ்ணத்தோடு உரச,
படபடத்து போனது கீர்த்திக்கு ..!! மேலும் முன்னேற முடியாமல் நாணம் அவளை இறுக்கி பிடிக்க இதழ்கள் நடுங்க சட்டென இமை தாழ்த்தி கொண்டாள்.
அவள் முகம் நிமிர்த்தி, "அவ்ளோதானா..??" என்ற சரணின் குரலில் குறும்பு கூத்தாடியது.
'இல்லை' என்பதாக தலை அசைத்தவள் அவன் நுனிமூக்கில் முத்தமிட்டு அவனை பார்க்க,
"அவ்ளோதானா..??" என்று கேட்டவனின் விழிகளிலும் குரலிலும் தாபம் வழிந்தது,
அதை கண்டவளுக்கு இது நேரம் வரை இருந்த தைரியம் பின்னங்கால் பிடரியில் படுமளவு அவளை விட்டு ஓடிட அடுத்து அவன் இதழ்களை நெருங்க அச்சம் கொண்டு அவளை அறியாமல் மீண்டும் தலை குனிய,
குனிய விடாமல் அவள் முகத்தை தன் கரங்களில் தாங்கியவன், "நான் மனசுல நினைச்சது எல்லாம் தெரியும்ன்னு சொன்ன அவ்ளோதானா..??" என்று கேட்க,
இதழ்கள் துடிக்க அவனை பார்த்தவளுக்கு கரங்கள் வியர்க்க தொடங்கியது "சொல்லு...?? அடுத்து என்ன நெனச்சேன்" என்று அவள் நெற்றி முட்ட,
'மாமா' என்று தயங்கி அவனை பார்த்தவள் நாசி விடைக்க கண்களை இறுக மூடிக்கொண்டு ஈரக்கங்களால் அவன் தோள்களை பற்றிக்கொண்டு மெல்ல நெருங்கி துடிக்கும் இதழ்களால் அவன் அதரங்களை லேசாக உரசி செல்ல,
அவளிடையை வளைத்தவனின் உயிர்காற்றின் வெப்பம் அதிகரித்து பெண்ணவளை பொசுக்க கீர்த்தியின் நிலையை சொல்லவும் வேண்டுமா..??
இறுக மூடிய கண்களை திறக்காமல் இருப்பவளின் நுனிமூக்கில் செல்லமாக கடித்து,
"அவ்ளோதானா..??" என்றான்.
ஹாய் செல்லகுட்டீஸ்...
நாளைக்கு விஷ்வா ப்ரீத்தி தான் இவங்க புதன் தான் வருவாங்க, கீர்த்தி சரனுக்காக காத்திருப்போருக்காக டீசர் போட்டிருக்கேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க.. கதை இன்னும் ஐந்து அத்தியாயத்தில் முடிந்துவிடும் அதிக நாள் தளத்தில் இருக்காது அதனால் இதுவரை படிக்காதவர்கள் இப்போதே தொடங்கி விடுங்கள்.
நன்றிகள்
ருத்ரப்ரார்த்தனா