banumathi jayaraman
Well-Known Member
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு இல்லமே!!
ராதையின் பதிவிதே...நம்
கருத்துக்கே விருந்தாமே!!
ஆமாம் என் ப்ரிய தோழி சோதரி ராதையின் பதிவு இது
படித்தேன் கரைந்தேன் பகிர்ந்தேன்
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவே!!
ராதையின் நெஞ்சம்...
ஒரு சமயம் பகவான் க்ருஷ்ணர் தமது பரிவாரங்களுடன் சித்தாஸ்ரம தீர்த்தத்தில் நீராட சென்றார்.
தெய்வாதீனமாக ராதையும் தன் தோழிகளுடன் அங்கே வந்திருந்தாள்.
இரு தரப்பினரும் மகிழ்ச்சியாக கலந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
க்ருஷ்ணர் வாயினாலேயே ராதையின் பெருமைகளை கேட்டிருந்த பட்டத்து அரசிகள் சமயம் பார்த்து ராதையிடம் பேசினர்.
அப்போ ராதை..... சகோதரிகளே சந்த்ரன் ஒன்றுதான்.
ஆனால் கண்களோ அநேகம் என்ற பொருளில் இந்த ஸ்லோகம் சொன்னாள்...
சந்த்ரோ யதைகோ பஹவ: சகோரா
ஸுர்யோ யதைகோ பஹவோ த்ருசா:ஸ்யு
ஸ்ரீ க்ருஷ்ண சந்த்ரோ பகவான் ததைவ,
பக்தா பகிந்யோ பஹவோ வயம் ச...
பகவான் க்ருஷ்ணா ஒருவரே.
சகோதரிகளான நாம் அனைவரும் அவரது பக்தைகள் என்றாள்..
ராதை சொன்னது கேட்டு மகிழ்ந்த ராணிகள் அரண்மனைக்கு ராதையை அழைத்து சென்று உபசாரம் செய்தனர்.
ருக்மணி தேவியே ராதைக்குப் பால் தந்து அருந்தும்படி செய்தாள்.
பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு ராதை தன் இருப்பிடம் போனாள்.
இரவும் வந்தது.
தினசரி வழக்கப்படி ஸ்ரீ க்ருஷ்ணரின் பாதங்களைப் பிடித்து விட ருக்மணி வந்தாள்.
க்ருஷ்ணரின் உள்ளங்கால்கள் முழுவதும் கொப்புளங்கள் இருப்பதைப் பார்த்து வியப்படைந்த ருக்மணி தோழிகளை அழைத்து விஷயத்தை சொல்றாள்
எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு அதன் காரணத்தைக் கேட்டனர்..
அவரும் சொல்றார்.
ராதையின் நெஞ்சில்... இதயத்தில் என் திருவடித் தாமரைத் திருவடிகள் இரவும் பகலும் எப்போதும் விளங்கிக் கொண்டு இருக்கின்றன.
நீ மிகவும் சூடான பாலை ராதைக்கு கொடுத்தாய்.
அவளும் நீ கொடுத்தாய் என்று குடித்து விட்டாள்.
பால் உள்ளே சென்றதால் என் கால்கள் சூடு தாங்காமல் கொப்பளித்து விட்டன என்றார்..
க்ருஷ்ணரின் இந்த வார்த்தைகளை கேட்ட எல்லோரும் ராதையின் இமாலய அன்பிற்கு முன்னால் தங்கள் அன்பு தூசுக்கு சமானம் என்ற முடிவுக்கு வந்தனர்.
.
கோலோகத்தில் கண்ணன்_அது இரண்டாக கண்ணன் (அவள் சக்தி ஹ்லாதினி சக்தி) ராதையாக பிரிந்தது..
கண்ணனிடமிருந்து கோபால இடையர்கள்...
ராதையிடமிருந்து கோபிகைகள் உதித்தனர்..
கண்ணன் ஜ்யோதி என்றால் ராதை ஒளி..
கண்ணன் நெருப்பு என்றால் ராதை சூடு...
கண்ணன் சர்க்கரை என்றால் ராதை தித்திப்பு..
கண்ணன் புஷ்பம் என்றால் ராதை வாசனை..
கண்ணன் சந்தனம் என்றால் ராதை குளிர்ச்சி..
கண்ணன் ஒலி என்றால் ராதை நாதம்..
கண்ணன் பரமாத்மா என்றால் ராதை ஜீவாத்மா...
ராதையின் பெருமையைக் குறிக்கும் இந்த நிகழ்ச்சி ஜாதக சம்ஹிதையில் இருக்கிறது
ருத்ர யாமளையில் ராதைக்கு ஸகஸ்ரநாமம் உள்ளது
ராதையினால் கண்ணனுக்கு கூறப்பட்டுள்ளது..
ஸம்மோஹன தந்தரத்திலும் உள்ளது..
இது தவிர ஜுகள ஸகஸ்ரநாமம் முதல் 500 க்ருஷ்ணருக்கும் பின்னையது 500 ராதைக்கு..
ராதா உபநிஷதம் கூறுவது...
க்ருஷ்ணேன ஆராத்யத இதி ராதா க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா..
ராதே ராதே
ராதையின் பதிவிதே...நம்
கருத்துக்கே விருந்தாமே!!
ஆமாம் என் ப்ரிய தோழி சோதரி ராதையின் பதிவு இது
படித்தேன் கரைந்தேன் பகிர்ந்தேன்
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவே!!
ராதையின் நெஞ்சம்...
ஒரு சமயம் பகவான் க்ருஷ்ணர் தமது பரிவாரங்களுடன் சித்தாஸ்ரம தீர்த்தத்தில் நீராட சென்றார்.
தெய்வாதீனமாக ராதையும் தன் தோழிகளுடன் அங்கே வந்திருந்தாள்.
இரு தரப்பினரும் மகிழ்ச்சியாக கலந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
க்ருஷ்ணர் வாயினாலேயே ராதையின் பெருமைகளை கேட்டிருந்த பட்டத்து அரசிகள் சமயம் பார்த்து ராதையிடம் பேசினர்.
அப்போ ராதை..... சகோதரிகளே சந்த்ரன் ஒன்றுதான்.
ஆனால் கண்களோ அநேகம் என்ற பொருளில் இந்த ஸ்லோகம் சொன்னாள்...
சந்த்ரோ யதைகோ பஹவ: சகோரா
ஸுர்யோ யதைகோ பஹவோ த்ருசா:ஸ்யு
ஸ்ரீ க்ருஷ்ண சந்த்ரோ பகவான் ததைவ,
பக்தா பகிந்யோ பஹவோ வயம் ச...
பகவான் க்ருஷ்ணா ஒருவரே.
சகோதரிகளான நாம் அனைவரும் அவரது பக்தைகள் என்றாள்..
ராதை சொன்னது கேட்டு மகிழ்ந்த ராணிகள் அரண்மனைக்கு ராதையை அழைத்து சென்று உபசாரம் செய்தனர்.
ருக்மணி தேவியே ராதைக்குப் பால் தந்து அருந்தும்படி செய்தாள்.
பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு ராதை தன் இருப்பிடம் போனாள்.
இரவும் வந்தது.
தினசரி வழக்கப்படி ஸ்ரீ க்ருஷ்ணரின் பாதங்களைப் பிடித்து விட ருக்மணி வந்தாள்.
க்ருஷ்ணரின் உள்ளங்கால்கள் முழுவதும் கொப்புளங்கள் இருப்பதைப் பார்த்து வியப்படைந்த ருக்மணி தோழிகளை அழைத்து விஷயத்தை சொல்றாள்
எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு அதன் காரணத்தைக் கேட்டனர்..
அவரும் சொல்றார்.
ராதையின் நெஞ்சில்... இதயத்தில் என் திருவடித் தாமரைத் திருவடிகள் இரவும் பகலும் எப்போதும் விளங்கிக் கொண்டு இருக்கின்றன.
நீ மிகவும் சூடான பாலை ராதைக்கு கொடுத்தாய்.
அவளும் நீ கொடுத்தாய் என்று குடித்து விட்டாள்.
பால் உள்ளே சென்றதால் என் கால்கள் சூடு தாங்காமல் கொப்பளித்து விட்டன என்றார்..
க்ருஷ்ணரின் இந்த வார்த்தைகளை கேட்ட எல்லோரும் ராதையின் இமாலய அன்பிற்கு முன்னால் தங்கள் அன்பு தூசுக்கு சமானம் என்ற முடிவுக்கு வந்தனர்.
.
கோலோகத்தில் கண்ணன்_அது இரண்டாக கண்ணன் (அவள் சக்தி ஹ்லாதினி சக்தி) ராதையாக பிரிந்தது..
கண்ணனிடமிருந்து கோபால இடையர்கள்...
ராதையிடமிருந்து கோபிகைகள் உதித்தனர்..
கண்ணன் ஜ்யோதி என்றால் ராதை ஒளி..
கண்ணன் நெருப்பு என்றால் ராதை சூடு...
கண்ணன் சர்க்கரை என்றால் ராதை தித்திப்பு..
கண்ணன் புஷ்பம் என்றால் ராதை வாசனை..
கண்ணன் சந்தனம் என்றால் ராதை குளிர்ச்சி..
கண்ணன் ஒலி என்றால் ராதை நாதம்..
கண்ணன் பரமாத்மா என்றால் ராதை ஜீவாத்மா...
ராதையின் பெருமையைக் குறிக்கும் இந்த நிகழ்ச்சி ஜாதக சம்ஹிதையில் இருக்கிறது
ருத்ர யாமளையில் ராதைக்கு ஸகஸ்ரநாமம் உள்ளது
ராதையினால் கண்ணனுக்கு கூறப்பட்டுள்ளது..
ஸம்மோஹன தந்தரத்திலும் உள்ளது..
இது தவிர ஜுகள ஸகஸ்ரநாமம் முதல் 500 க்ருஷ்ணருக்கும் பின்னையது 500 ராதைக்கு..
ராதா உபநிஷதம் கூறுவது...
க்ருஷ்ணேன ஆராத்யத இதி ராதா க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா..
ராதே ராதே
Last edited: