பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா*

Advertisement

Eswari kasi

Well-Known Member
*பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா*

தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது, _தன்னுடைய மருத்துவருக்கு போன்செய்து, நெஞ்சுவலி அதிகமாக இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார்.._

_அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர்,_ எனவே தன்னால் வரமுடியாது, *ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியது தானே?* என்றார்.

ஷா, *"தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க முடியவில்லை". "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை"* என்றார். சரியென்று மருத்துவரும் *பெர்னார்ட்ஷா* வீட்டிற்கு வந்தார். மாடியில் தங்கியிருந்த *ஷா* வைப் பார்க்க படியேறிவந்தார்.

*ஷா* வைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார். அதைப்பார்த்து பதறிப்போன *ஷா* எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார். டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து *30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார்.*

*ஷா*, சிரித்துக் கொண்டே டாக்டரைப் பார்த்து, *என்னப்பா டாக்டர் இது? எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கே பில் எழுதி தருகிறாயே?* எனக்கேட்டார்.

அதற்கு டாக்டர் *உங்களுக்கு பார்த்த வைத்தியதிற்குத் தாங்க இந்த ஃபீஸ்* என்றார். மீண்டும் டாக்டர் சொன்னார்..

_போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்.._ *"எழுந்து நடக்க முடியவில்லை"* என்றீர்கள். இப்போ ஓடோடிவந்தீர்கள். *"உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள முடியவில்லை"* என்றீர்கள். இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க. *"தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு"* சொன்னீங்க.

இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார்..

*அப்பொழுது, உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள்* அதனால் *அவை பெரிதாக தெரிந்தன.* இப்போ *எனது கஷ்டத்தைப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது* என்றார்.

*நம்முடைய கவலைகளையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவை பூதாகரமாகத்தான் தெரியும்.* *பிறரின் கவலைகளையும் நினைத்துப் பாருங்கள்..* *அவற்றின் முன்பு நம்முடைய கவலைகள் புஸ்வானமாகிப் போகும்..* *கவலைகள் மறப்போம்..* *சிறகுகள் விரிப்போம
 

Santhiya s

Active Member
சத்தியமான உண்மை. இதைத் தான் நம்மூருல வீட்டுக்கு வீடு வாசற்ப்படினு சொல்லிருக்காங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top