அதிகார விளக்கம் :-
நெடுங்கால நட்புத் தொடர்பைப் பழைமை என்ற சொல்லால் குறித்துப் பழைய நட்பின் பெருமைகளை நன்கு உரைக்க, ஓர் அதிகாரமே அமைக்கின்றார் வள்ளுவர். நட்பு இலக்கணம் கூறி, ஆய்ந்து ஆய்ந்து நட்புச் செய்க என்று அறிவுறுத்தியபின், இங்கு, உரிமையோடு கூடிய மனித உறவுகளில் உயரிய வகையான அந்த நட்புறவு பற்றி சொல்கிறார். இதன் பின் தீநட்பு, கூடாநட்பு என்ற தலைப்புகளில் இரு அதிகாரங்கள் அமைவதால் இப்பாடல் தொகுதியை 'நல்ல நட்பு' அதிகாரம் என அழைக்கலாம். எந்த நிலையிலும் பழையாரை விட்டுக் கொடுக்காமல் பழகுபவரை எல்லோரும் விரும்புவர் என்கின்றன அதிகாரப் பாடல்கள்.