பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 103. குடிசெயல்வகை, குறள் எண்: 1026 & 1029.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1026:
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

பொருள் :-ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
 

Sasideera

Well-Known Member
குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

பொருள் :- தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-


செயல்பட துணியும் கைகளைப் போல் சிறந்தது இல்லை. செயல்திறனும் சிந்தனை திறனும் இணைந்தே வாழ்வை வளமாக்கும். குடி சிறக்க நினைப்பவற்கே தெய்வமும் முன்வந்து உதவும், தானாக நல்முடிவு வரும், உறவுகளும் சூழும். நல்லாண்மை என்ற சிறந்த மனித ஆற்றல் என்பது வாழ்வை வறுமை அற்றதாக மாற்றுவது. போர்களத்தில் போராடும் வீரரைப் போல் கவனமுடன் வாழ்வு சிறக்க செயல்பட வேண்டும். வாழ்வு சிறக்க ஏற்ற பருவம் என்று இல்லை தொடர் முயற்சியே வாழ்வை வளமாக்கும். துன்பத்திற்கு துன்பம் தரும் கொள்கலன் உழைக்கும் ஒருவரின் உடம்பு ஆகும். இக்கட்டான சுழலில் சிக்குண்டு அழியும் அதைக் காக்கும் நல்லாள் இல்லாத குடி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top