பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 11. செய்ந்நன்றி அறிதல், குறள் எண்: 106 & 109.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 106:- மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

பொருள் :- குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
 

Sasideera

Well-Known Member
குறள் 109:- கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள் :- முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

பிறர் செய்த நன்மையை மறவாது உணர்ந்திருப்பது செய்ந்நன்றியறிதல் ஆகும். செய்யாமல் செய்த உதவி, காலத்தினால் செய்த உதவி, பயன் தூக்கார் செய்தார் உதவி என்றிவை நன்றி உணர்தலில் அளவிட்டு அறியமுடியாத மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பேசப்பட்டுள்ளன. செய்ந்நன்றி கொல்வது அதாவது தனக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறத்தல் அல்லது அவற்றை அறிந்துகொள்வதை மறுத்தல் என்பது மன்னிப்பே இல்லாத குற்றமாம் என்று கூறப்படுகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top