ஒரு ஆடியோ போதுமா பாவனா உனக்கு விஜய் பத்தி தெரிந்து கொள்ள அப்போ இரண்டு வருடம் எந்த நம்பிக்கையில் காதலிச்ச . எத்தனை பேர் மிமிக்ரி பண்றாங்க அது எல்லாம் நீ பார்த்ததே இல்லையா.
பாவனா தான் சின்ன பொண்ணு பயத்தில் என்ன செய்றது என்று தெரியல ரமணன் ஷைலஜாவுக்கும் கொஞ்சம் கூடவா இரக்கமே இல்லை எவ்வளவு தடவை தேடி வந்திருக்கிறான் பாவனா எங்க இருக்கிறாள் என்று சொல்லி இருந்தால் அவனே எல்லாம் சரி செய்து இருப்பானே. தானும் பொண்ணுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க மாட்டோம் அவளே அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுகிட்டா அதையும் கெடுத்து வச்சிருக்கீங்க. ஷைலஜாக்கு வயசான பிறகு கல்யாண வாழ்க்கை அமைச்சிக்கிட்டாங்க எதுக்கு கல்யாணம் தான் சமூகத்தில் மரியாதை கொடுக்கும் என்பதற்காக தானே அப்போ அதே மரியாதை தன்னோட பெண்ணுக்கும் கிடைக்கணும் என்கிற அறிவு கொஞ்சம் கூட இல்லையா.
அரங்கநாதன் ஷ்யாம் எல்லாம் யாரோ ஒருத்தங்க தான் அதனால் பாவனாவுக்கு கெடுதல் செய்தாங்க ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பெத்தவங்க தான . நீங்களே பாவனாவுக்கு துரோகம் பண்ணும் போது அடுத்தவன் எப்படி நல்லது செய்வான். யார் என்ன செய்து இருந்தாலும் பெத்தவங்க நீங்கள் நினைச்சுருந்தா அவளுக்கு நல்லது நடந்து இருக்கும். நீங்கள் ஒன்னும் விஜயை தேடி போக வேண்டிய அவசியமே இல்லாமல் அவனே தேடி வந்திருக்கிறான் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் எல்லா பிரச்சினையும் அவனே பார்த்திருப்பானே .
அரங்கநாதன் ஷ்யாம் மட்டும் இல்லை பிருந்தா அப்பனும் இதுக்கு துணை போல
ஒரு ஆடியோ கேட்டு விஜயை தப்பா நினைச்ச அதுல ஊரை விட்டு போக சொன்னால் போகணுமா .விஜய்க்கு கல்யாணம் சொன்னதும் நம்புன அது நின்னுடுச்சுன்னு தெரிஞ்சதும் விஜய் நிறுத்திருக்க மாட்டான் என்று நினைச்சுருக்க என்ன ஒரு நம்பிக்கை அவன் மேல். விஜய் உன்னை ஏமாற்றணும் என்று நினைச்சுருந்தா அவனோட சொந்த ஊருக்கே அழைச்சிட்டு வந்து கல்யாணம் செய்து இருக்க மாட்டானே. ஆடியோ கேட்டு அவனை விட்டுட்டு போன ஆனால் நீ தாலியை கழட்டி கொடுத்துட்ட என்று சொல்லியும் உன்னை தேட தான் செய்தான் அவன்.
ஸ்ரீ கிட்ட ஷ்யாம் தாலி பத்தி விசாரித்து இருந்தால் விஜய் கிட்ட சொல்லாமல் இருந்து இருக்கமாட்டாளே அப்போ என்ன தான் நடந்து இருக்கும். இனிமேல் ஷ்யாம் கிட்ட கேட்டால் அவன் ஒரு கதை சொல்லுவான் .
விஜய் : ஏதோ சற்று அசதியில் சிறிது நேரம் கண் அசந்து விட்டேனாம் அதற்குள் என் வாழ்க்கையில் இத்தனை அக்க போரா இதில் இலவச இணைப்பாக குழந்தை வேறு இனிமேல் வாழ்க்கையில் நான் தூங்கவே மாட்டேன்
பாலில் தூக்கமாத்திரை கலந்து தூங்க வச்சிருவாங்க அதை அந்த எபில சொல்லிட்டாங்கAsathila kann asarala athuvum tablet aah irukkalaam