அருமையான பதிவு சவீதா.இது என்ன புதுபிரச்சனை,கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சு அவ புருசன்ட்டயே பேசியிருக்கான்னா அவன் நினைச்சது நடக்க எதுவும் செய்வான்னு தெரியுதே.
கவுன்சிலர் மனைவி அவரை பார்க்க வந்து இவரை அடிக்கிறீங்கன்னு சொல்லும் போதே,ருத்ரா அவரிடம் நடந்ததை சொல்லியிருக்கலாம்.சிவநேசன் கவுன்சிலரிடம் நடந்ததை மறைத்து
ருத்ராவுக்கு பிரச்சனைய கொடுப்பானா,இவனால் ருத்ரா குடும்பத்துக்கு ஆபத்து வருமா.
குழந்தைய பத்தியே பேசறான்,குழந்தைக்காக கல்யாணம் பண்ணான்னு ருத்ராட்ட சண்டை போட்ட அருள்,டாக்டர்கிட்ட கூட்டிட்டு போக நீங்க தான் வருனும்னு சொல்றா.செக்கப்புக்கு போக அவன் வரனும் ஆனா,குழந்தைய பத்தி பேசக்கூடாதா.
குடும்பத்தோட லோகுவை ஶ்ரீரங்கத்துக்கு அனுப்பியது,சீமந்த வேலைகளில் பூரணிக்கு உதவியா இருக்கும்.சீமந்த நாளும் விடிஞ்சிருச்சு ருத்ரா இன்னும் வரலையா.
இதென்ன புதிய தலைவலி?
லோகுவின் மனைவியைத் தேடி சிவநேசன் பொறுக்கி ஸ்ரீரங்கத்துக்கே வந்து விட்டானா?
அங்கே ஆருத்ரா வருவதற்குள் ஏதாவது பிரச்சினையா?
தம்பியின் பொறுக்கித்தனத்தைப் பார்த்து கவுன்சிலர் ஒண்ணும் சொல்லவில்லையா?
சீமந்தத்துக்கு வந்தானா இல்லையா???
சிவநேசன் வம்புக்கு வந்துட்டானா???
ரொம்ப தான் இவன் பிடிச்சுட்டு முருங்கை மரத்துல தொங்குறான்......
பாத்துடா அது உடைஞ்சுடப்போகுது......
சிவநேசனுக்கு நல்லா போட்டதோட ஏண்டா விட்ட......
ஏன் அடிக்கிறேன்னு கேட்ட பொண்டாட்டிகிட்ட சொல்லவேண்டியது தானே......
நாய்களை உலகத்துக்கு தெரியப்படுத்துங்க...... ஒன்னுல அசிங்கப்படுத்துறாங்கன்னு அவனுங்க ஒதுங்கனும் இல்லையா சுற்றி இருக்கவங்க ஒதுக்கணும்......
ஊமை குத்து உள்குத்து மாதிரி இந்த நாய்ங்க ரொம்ப பேர் இருக்காங்க செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி.....
மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்....
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர்...
பெண்ணிலா
கண்ணீர்...
கண்ணிலா...
நானும்... வெறும் கானலா...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ
வளியே என் உயிர் வளியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே...