அருமையான பதிவு சவீதா.அன்னபூரணி மகன் செய்யறதெல்லாம் சரின்னு நினைக்காம நியாயமா பேசறாங்க.அருளை வேலைக்கு அனுப்பறதா சொல்லி வேணாம்னு சொன்னது, இவன் இஷ்டம் போல ஆட்டி வைக்கறது தப்புன்னு சொல்றவர்,இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என ருத்ராவை,அருளிடம் பேச சொல்வது சரியே.
வெளிநாட்டுல இருக்கற பொண்ணுட்ட ரெண்டு நாள் முன்னாடி எல்லாரும் நல்லா இருக்காங்களானு
கேட்டா,மறுபடியும் போன் பண்ணா கேட்க மாட்டாங்களா.வேண்டாதவ மாதிரி பேசறாங்களா.ஒருத்தி ஓடிப்போன இன்னொருத்தியும் அப்படியே இருப்பாளா.
எத்தனை நாளைக்கு இந்த மருமகன்னு ஏடாகூடமா கேட்கறாளே.நல்லவேளை இவ வெளிநாட்ல இருக்கா,இங்கே வந்தா என்ன ஆட்டம் போடுவாளோ.அன்னபூரணி பலாப்பழம் போல பார்க்க,பேசறத கேட்க கரடு முரடா தெரிஞ்சாலும் மனசு இனிப்பா இருக்கு.
அம்மா முக்கியம் தான்,அம்மாவை போல பொண்டாட்டியை கவனிக்கனும்னு தெரியலை. இவன் பொண்டாட்டிய நாங்க பார்த்துக்கனுமாம்,கேள்வி கேட்கக்கூடாதாம்பூரணி,மகனையும்
சாப்பிடாம இருந்ததுக்காக அருளையும் பேசியே ஒருவழி பண்ணிட்டார்.
என்னோட லட்சியத்தை யாருக்காகவும் மாத்திக்க முடியாதுன்னு சொல்லி அருள் ஸ்கூலுக்கு போக ரெடியாகிட்டா.ஆட்டோவும் வந்திருச்சு.இனி இவர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும்