I R Caroline
Well-Known Member
இரவு மணி 11.30 இருக்கும், எல்லோரும் உறங்கச் செல்லும் நேரம், அந்த அமைதியான நேரத்தில், "யாராவது இருக்கீங்களா" என்ற குரல் திரும்ப திரும்ப கேட்டதும், வெளியில் வந்து குரல் எங்கிருந்து வருதுனு சுற்றி சுற்றி பார்த்தா, குரல் வரும் திசையை கண்டுபிடிக்க முடியலை.
திரும்ப திரும்ப சத்தம் கேட்க, எல்லோரும் அமைதியாகி சத்தம் வரும் திசையை உன்னிப்பாக கவனிக்க, அருகில் இருந்த ஃப்ளாட்லருந்து சத்தம் கேட்க, உடனே அந்த ஃப்ளாட்க்கு போனா எந்த வீட்டிலிருந்து சத்தம் வருதுனு தெரியலை.
எல்லோர் வீட்டுக் கதவையும் தட்ட வேண்டியதுதான்னு, முதல்ல ஒரு வீட்டுக் கதவை தட்ட, அவர்களிடம் சத்தம் கேட்பதை சொல்ல, "எங்களுக்கு எந்த சத்தமும் கேட்கலை, நீங்கெல்லாம் யாரு" என்று கேட்டாங்க, "நாங்க மூணாவது வீட்ல இருக்கோம்" என்றதும், "உங்க யாரையும் இதுவர பார்த்ததே இல்லையே"
"நாங்க முப்பது வருஷமா இங்கதான் இருக்கோம், உங்க ஃப்ளாட்ல யாருக்கோ பிரச்சினை போல சத்தம் போடுறாங்க", "எங்களுக்கு கேட்கலை" திரும்ப திரும்ப அதையே சொன்னாங்க, எல்லோரும் அமைதியாகி கவனிச்சா அங்க எந்த சத்தமும் கேட்கலை, ஃப்ளாட் விட்டு வெளில வந்தா கேட்குது.
தேடி தேடி ஒரு வீட்டு ஜன்னலிருந்து சத்தம் கேட்க, அது எந்த வீட்டு ஜன்னல்னு கேட்டு அந்த வீட்டு கதவை தட்டி, "என்ன ஆச்சு" என்று கேட்க,
அவங்க சொல்றது ஒன்றுமே புரியலை, வெளியில் ஆட்கள் சத்தம் கேட்டதும், உள்ள குழந்தை பயத்தில் அழத் தொடங்க, குழந்தை ஏன் அழுதுனு வெளில இருக்கறவங்களுக்கு புரியலை,
உள்ளே என்ன பிரச்சினைனு தெரியாம, கதவை உடைச்சா போலீஸ் கேஸானா என்ன செய்யனு எல்லாம் குழப்பமாக, குழந்தை சத்தம் வேறு அதிகமாக, கதவை உடைங்க குழந்தை விடாம அழுது குழந்தைக்கு ஏதாவது ஆகிடப் போகுதுனு உடைக்கப் போக,
ஹவுஸ் ஓனர்ட்ட கேட்கனும்னு மத்த வீட்டுக்காரங்க சொல்ல, உடனே அவருக்கு கால் பண்ணா பூட்டு 1250 ரூபாயாச்சேனு புலம்பறார், அவங்க கிட்ட இன்னொரு சாவி இருக்கும்னு சொன்னார்.
பக்கத்து வீட்டுக்காரங்க, "அது அவங்க கணவர்ட்ட இருக்கும், அவர் வேலைக்கு போயிருப்பார்", உடனே அவர் நம்பர் கேட்டு அவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல, "நான் இங்கிருந்து வர 1 மணி நேரமாகும்" என்று சொன்னார்.
பக்கத்து பில்டிங்ல வேலை பார்க்கும் கார்பென்டர், இது வேலைக்கு ஆகாது குழந்தை இப்படி அழுதுட்டு இருந்தா, அதுக்கு ஏதாவது ஆகிடும்னு, வுட் கட்டர் வைத்து ஒரு செகண்ட்ல லாக் கட் பண்ணிட்டு உள்ள போனா,
அவங்க கணவரை நைட் ஷிப்ட் வேலைக்கு அனுப்பிட்டு, இவங்க மெயின் கதவையும் பூட்டிட்டு ரூம்க்கு போயிருக்காங்க, ஹால்ல விளையாடிட்டு இருந்த குழந்தை ரூம் கதவை வெளில லாக் பண்ணிட்டான், லாக் பண்ணவனுக்கு அதை திறக்க தெரியலை, அம்மா ரூம்ல குழந்தை ஹால்ல, அவங்க மொபைலும் ஹால்ல மாட்டிட்டு, ராத்திரி முழுவதும் குழந்தை எப்படி தனியா இருப்பான், பயந்திருவானேனு அவங்க குரல் கொடுத்திருக்காங்க, இதாங்க பிரச்சனை...
இது என் அம்மா வீட்டு பக்கத்தில் நடந்தது, அண்ணன் அவர் பொண்ணும் சத்தம் கேட்டு போனது, இவங்க வெளியில் வந்து தேட, பக்கத்துல நைட் வேலை பார்த்த கார்பென்டரும் சேர்ந்து கொண்டார்.
பக்கத்து வீட்டில் யார் இருக்காங்க என்றும் தெரியலை, உள்ள இருக்கும் உயிரை விட 1000 ரூபா பூட்டுதான் பெரிசா இருக்கு, என்னய்யா மனுஷங்க... குழந்தைங்க குழந்தைங்களாதான் இருப்பாங்க, அவங்க கிட்ட நாமதான் எச்சரிக்கையா இருக்கனும், இல்லை இப்படிதான் மாட்டிட்டு முழிக்கனும்...
திரும்ப திரும்ப சத்தம் கேட்க, எல்லோரும் அமைதியாகி சத்தம் வரும் திசையை உன்னிப்பாக கவனிக்க, அருகில் இருந்த ஃப்ளாட்லருந்து சத்தம் கேட்க, உடனே அந்த ஃப்ளாட்க்கு போனா எந்த வீட்டிலிருந்து சத்தம் வருதுனு தெரியலை.
எல்லோர் வீட்டுக் கதவையும் தட்ட வேண்டியதுதான்னு, முதல்ல ஒரு வீட்டுக் கதவை தட்ட, அவர்களிடம் சத்தம் கேட்பதை சொல்ல, "எங்களுக்கு எந்த சத்தமும் கேட்கலை, நீங்கெல்லாம் யாரு" என்று கேட்டாங்க, "நாங்க மூணாவது வீட்ல இருக்கோம்" என்றதும், "உங்க யாரையும் இதுவர பார்த்ததே இல்லையே"
"நாங்க முப்பது வருஷமா இங்கதான் இருக்கோம், உங்க ஃப்ளாட்ல யாருக்கோ பிரச்சினை போல சத்தம் போடுறாங்க", "எங்களுக்கு கேட்கலை" திரும்ப திரும்ப அதையே சொன்னாங்க, எல்லோரும் அமைதியாகி கவனிச்சா அங்க எந்த சத்தமும் கேட்கலை, ஃப்ளாட் விட்டு வெளில வந்தா கேட்குது.
தேடி தேடி ஒரு வீட்டு ஜன்னலிருந்து சத்தம் கேட்க, அது எந்த வீட்டு ஜன்னல்னு கேட்டு அந்த வீட்டு கதவை தட்டி, "என்ன ஆச்சு" என்று கேட்க,
அவங்க சொல்றது ஒன்றுமே புரியலை, வெளியில் ஆட்கள் சத்தம் கேட்டதும், உள்ள குழந்தை பயத்தில் அழத் தொடங்க, குழந்தை ஏன் அழுதுனு வெளில இருக்கறவங்களுக்கு புரியலை,
உள்ளே என்ன பிரச்சினைனு தெரியாம, கதவை உடைச்சா போலீஸ் கேஸானா என்ன செய்யனு எல்லாம் குழப்பமாக, குழந்தை சத்தம் வேறு அதிகமாக, கதவை உடைங்க குழந்தை விடாம அழுது குழந்தைக்கு ஏதாவது ஆகிடப் போகுதுனு உடைக்கப் போக,
ஹவுஸ் ஓனர்ட்ட கேட்கனும்னு மத்த வீட்டுக்காரங்க சொல்ல, உடனே அவருக்கு கால் பண்ணா பூட்டு 1250 ரூபாயாச்சேனு புலம்பறார், அவங்க கிட்ட இன்னொரு சாவி இருக்கும்னு சொன்னார்.
பக்கத்து வீட்டுக்காரங்க, "அது அவங்க கணவர்ட்ட இருக்கும், அவர் வேலைக்கு போயிருப்பார்", உடனே அவர் நம்பர் கேட்டு அவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல, "நான் இங்கிருந்து வர 1 மணி நேரமாகும்" என்று சொன்னார்.
பக்கத்து பில்டிங்ல வேலை பார்க்கும் கார்பென்டர், இது வேலைக்கு ஆகாது குழந்தை இப்படி அழுதுட்டு இருந்தா, அதுக்கு ஏதாவது ஆகிடும்னு, வுட் கட்டர் வைத்து ஒரு செகண்ட்ல லாக் கட் பண்ணிட்டு உள்ள போனா,
அவங்க கணவரை நைட் ஷிப்ட் வேலைக்கு அனுப்பிட்டு, இவங்க மெயின் கதவையும் பூட்டிட்டு ரூம்க்கு போயிருக்காங்க, ஹால்ல விளையாடிட்டு இருந்த குழந்தை ரூம் கதவை வெளில லாக் பண்ணிட்டான், லாக் பண்ணவனுக்கு அதை திறக்க தெரியலை, அம்மா ரூம்ல குழந்தை ஹால்ல, அவங்க மொபைலும் ஹால்ல மாட்டிட்டு, ராத்திரி முழுவதும் குழந்தை எப்படி தனியா இருப்பான், பயந்திருவானேனு அவங்க குரல் கொடுத்திருக்காங்க, இதாங்க பிரச்சனை...
இது என் அம்மா வீட்டு பக்கத்தில் நடந்தது, அண்ணன் அவர் பொண்ணும் சத்தம் கேட்டு போனது, இவங்க வெளியில் வந்து தேட, பக்கத்துல நைட் வேலை பார்த்த கார்பென்டரும் சேர்ந்து கொண்டார்.
பக்கத்து வீட்டில் யார் இருக்காங்க என்றும் தெரியலை, உள்ள இருக்கும் உயிரை விட 1000 ரூபா பூட்டுதான் பெரிசா இருக்கு, என்னய்யா மனுஷங்க... குழந்தைங்க குழந்தைங்களாதான் இருப்பாங்க, அவங்க கிட்ட நாமதான் எச்சரிக்கையா இருக்கனும், இல்லை இப்படிதான் மாட்டிட்டு முழிக்கனும்...