"உன் மதிமுகம்
கண்டேன்
மது உண்ட வண்டானேன்"
"உன்
கொலுசொலியில்
கொள்ளை போனேன்"
"உன்
புன்சிரிப்பில்
மென்மை கொண்டேன்"
"உன்
இதழ் மலர்ந்து
வரும் வார்த்தையதில்
வசந்த காலத்தின்
வாசல் கண்டேன்"
"உன்
மீன் விழி
காண்கையில்
மொத்தமாய்
பித்தனானேன்"
"உன்
வளையோசை கேட்கையில்
என் வசம் இழந்தேன்"
"உன்
கார்கூந்தல் மேகத்தில்
மோகம் கொண்டேன்"
"நீ
அசைந்தாடி நடக்கையிலே
ஆடி வரும் தேர்
நீயோ என
அசந்து நின்றேன்"
"உன்
அழகில்
அகப்பட்ட நான்
உன்
அகம் கண்ட
நாள் அன்று
அதிசயித்து போனேன்"
"அழகிய அகம்
கொண்டவளே
உன் இதய நாட்டில்
என் ஆயுள்
முழுதும்
அகதியாய்
அகப்பட்டிட
ஆசை கொள்கிறேனடி
ஆசி வழங்கடி"
கண்டேன்
மது உண்ட வண்டானேன்"
"உன்
கொலுசொலியில்
கொள்ளை போனேன்"
"உன்
புன்சிரிப்பில்
மென்மை கொண்டேன்"
"உன்
இதழ் மலர்ந்து
வரும் வார்த்தையதில்
வசந்த காலத்தின்
வாசல் கண்டேன்"
"உன்
மீன் விழி
காண்கையில்
மொத்தமாய்
பித்தனானேன்"
"உன்
வளையோசை கேட்கையில்
என் வசம் இழந்தேன்"
"உன்
கார்கூந்தல் மேகத்தில்
மோகம் கொண்டேன்"
"நீ
அசைந்தாடி நடக்கையிலே
ஆடி வரும் தேர்
நீயோ என
அசந்து நின்றேன்"
"உன்
அழகில்
அகப்பட்ட நான்
உன்
அகம் கண்ட
நாள் அன்று
அதிசயித்து போனேன்"
"அழகிய அகம்
கொண்டவளே
உன் இதய நாட்டில்
என் ஆயுள்
முழுதும்
அகதியாய்
அகப்பட்டிட
ஆசை கொள்கிறேனடி
ஆசி வழங்கடி"