Jeevitha Ram prabhu
Active Member
மலர் 18
அங்கே அகிலன் வீட்டில் காயத்ரி கிளம்ப தயாரானாள். அதற்கு முன்னர் தமிழ் இங்கு வரும்பொழுது அவளுக்கு யாரையும் தெரியாது எப்படி தனியாக இருப்பாளோ என்று கவலையில் இருந்தேன் இப்பொழுது அவளை இங்கு விட்டு செல்லும்போது அவளுக்கு பக்க பலமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று புரிந்தது அதற்கு மேல் துணையாக அகிலன் இருப்பார் என்று தோன்றுகிறது.
அதனால் உங்களை நம்பி விட்டுச் செல்கிறேன் என்று கூறினாள்.
தைரியமாக நீங்கள் என்னை நம்பி விட்டுச் செல்லலாம் அதற்கு வாக்குறுதி நான் தருகிறேன் என்று கூறினான் அகிலன். இன்னும் இரண்டு நாட்களில் நான் கிளம்பி விடுவேன் அதன் பிறகு தமிழ் உங்கள் பொறுப்பு என்று கூறிவிட்டு காயத்திரியும் கைலாஷூம் கிளம்பினார்கள்.
அவர்கள் வீடு வந்து சேரவே ரொம்ப நேரமாகிவிட்டது வீட்டுக்கு வந்தவுடன் தமிழில் முதல் கேள்வி என்னது உங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் பார்த்தாயிற்றா.... என்று கேட்டாள்.
எனக்கு வேண்டியவர்கள் எல்லாம் இல்லை உனக்குத்தான் ரொம்ப வேண்டியவர்கள் என்று கூறினாள். பின்னர் இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு அகிலன் தன் நம்பரை கண்டுபிடித்து பேசியதில் இருந்து தற்போது நடந்த அனைத்து வரை ஒன்று விடாமல் அவளிடம் கூறினாள்.
தமிழுக்கு அகிலன் தன்னை விரும்புகிறான் என்று தெரியும் ஆனால் அவன் அதை நிரூபிக்க இவ்வளவு தூரம் போவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
காயத்ரியும் தமிழும் அவள் அறையில் படுக்க கைலாஷ் மொட்டை மாடிக்கு சென்று படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் தமிழ் ஆபிஸ் கிளம்பும்போது காயத்ரியை தன்னுடன் வருமாறு கேட்டாள் .ஆனால் காயத்ரி அதற்கு மறுத்துவிட்டாள். நீயே சென்று வா தமிழ் நான் வீட்டில் இருக்கிறேன் என்று கூறினாள்.
அவள் வழக்கம்போல் அலுவலகம் கிளம்பினாள். தனது அலுவல்களை கவனித்து கொண்டு இருந்தபோது கண்டிப்பாக இன்று அகிலன் வருவான் என்று நினைத்தாள் ஆனால் அவன் வரவில்லை.
பின் அடுத்தடுத்த வந்த நாட்களில் காயத்ரியும் கிளம்பி விட்டாள். பின் ஒரு
நாள் மாலை அகிலனிடமிருந்து கால் வந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்தவறே தமிழ் அதை எடுத்து பேசினாள்.
என்ன மேடம் எப்படி இருக்கீங்க என்ற கேட்டான். நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கள் என்று கூறினாள் அவள்.
ஓ ஓ...... அப்பொழுது நான் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறீர்கள் அல்லவா அதனால் தான் இவ்வளவு ஆசையாக கேட்கிறீர்களா என்று கேட்டான் அவன்..... அதற்குள் கற்பனைக்குள் போகிவிடாதீர்கள் சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லுங்கள் என்று கூறினாள் அவள்.
சரி சரி என்னிடம் கோபம் வேண்டாம் மேடம் நாளை கோவிலுக்கு செல்ல வேண்டும் காலையில் தயாராக இருங்கள் ....வந்து கூட்டிக் கொண்டு செல்கிறேன் என்ற கூறினான் அவன்...
அதற்கு அவள் இல்லை நான் வரமாட்டேன் என்று கூறினாள்.... சரி ஓகே அதையும் நாளைக்கு தான் பார்க்கலாமே என்று கூறி போனை கட் செய்தான் அவன்.
தமிழ் அடுத்த நாள் காலை ஆஃபீஸ் கிளம்பி கொண்டிருந்தாள். வழக்கமாக கிளம்புவதை விட சற்று அதிகமாக தன்னை அழகு படுத்திக் கொண்டாள். எதிர்பட்ட சமையல் அம்மா அவளிடம் இதையே கேட்கவும் இன்று கொஞ்சம் வெளியே வேலை இருக்கிறது என்று கூறி சமாளித்தாள் அவள்.
தனது அன்றாட அலுவல்களை பார்த்துக் கொண்டிருந்தபோது சொன்னது போலவே டைமுக்கு வந்து சேர்ந்தான் அகிலன்.... பார்க்கும்போது அவனுக்கே தெரிந்தது இவள் இன்று அதிகப்படியாக தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டது.
வந்தவன் சட்டென என்ன மேடம் கிளம்பலாமா.... அதற்கு அவள் எனக்கு இஷ்டமில்லை என்று தெரிந்தும் எப்படி இப்படி வற்புறுத்த தோன்றுகிறது என்று கேட்டாள். அதற்கு அவன் மேடம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இஷ்டம் இல்லாமல் எல்லாம் இல்லை உங்களுக்கு இஷ்டம் இருக்கிறது ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குறீர்கள். அதை வெளியே கொண்டு வருவதே என் நோக்கம் என்று கூறினான்.. அதற்கு அவள் எப்படி தன் மனதில் உள்ளதை அவனால் தெளிவாக படிக்க முடிகிறது என்று வியந்தாள்.... அவள் மனக்குறிப்பை முகத்தில் உணர்ந்தவன் அது எல்லாம் அப்படித்தான் மேடம் என்று கூறினான்.
சரி.... இப்பொழுது எதற்கு கோவிலுக்கு என்று கேட்டாள் அவள். என்ன மேடம்..... கடவுளை பார்க்க போக காரணம் தேவையா என்று திருப்பி பதில் அளித்தான் அவன்.... இதற்கு மேல் இவனிடம் பேச முடியாது என்று அவனுடன் கிளம்பினாள் தமிழ்....
கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு இடத்தில் அமர்ந்தார்கள் தமிழும் அகிலனும்.... சாமி தரிசனம் மிகவும் நன்றாக இருந்தது. சரி இப்பொழுதாவது சொல்லுங்கள் எனக்கு கோவிலுக்கு கூட்டி வந்தீர்கள் என்று கேட்டாள் தமிழ்..... அவன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்... அவள் அவன் கண்களை பார்த்ததும் அதில் முழுவதும் காதல் இருப்பது தெரிந்தது
...
மலரும்.....
அங்கே அகிலன் வீட்டில் காயத்ரி கிளம்ப தயாரானாள். அதற்கு முன்னர் தமிழ் இங்கு வரும்பொழுது அவளுக்கு யாரையும் தெரியாது எப்படி தனியாக இருப்பாளோ என்று கவலையில் இருந்தேன் இப்பொழுது அவளை இங்கு விட்டு செல்லும்போது அவளுக்கு பக்க பலமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று புரிந்தது அதற்கு மேல் துணையாக அகிலன் இருப்பார் என்று தோன்றுகிறது.
அதனால் உங்களை நம்பி விட்டுச் செல்கிறேன் என்று கூறினாள்.
தைரியமாக நீங்கள் என்னை நம்பி விட்டுச் செல்லலாம் அதற்கு வாக்குறுதி நான் தருகிறேன் என்று கூறினான் அகிலன். இன்னும் இரண்டு நாட்களில் நான் கிளம்பி விடுவேன் அதன் பிறகு தமிழ் உங்கள் பொறுப்பு என்று கூறிவிட்டு காயத்திரியும் கைலாஷூம் கிளம்பினார்கள்.
அவர்கள் வீடு வந்து சேரவே ரொம்ப நேரமாகிவிட்டது வீட்டுக்கு வந்தவுடன் தமிழில் முதல் கேள்வி என்னது உங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் பார்த்தாயிற்றா.... என்று கேட்டாள்.
எனக்கு வேண்டியவர்கள் எல்லாம் இல்லை உனக்குத்தான் ரொம்ப வேண்டியவர்கள் என்று கூறினாள். பின்னர் இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு அகிலன் தன் நம்பரை கண்டுபிடித்து பேசியதில் இருந்து தற்போது நடந்த அனைத்து வரை ஒன்று விடாமல் அவளிடம் கூறினாள்.
தமிழுக்கு அகிலன் தன்னை விரும்புகிறான் என்று தெரியும் ஆனால் அவன் அதை நிரூபிக்க இவ்வளவு தூரம் போவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
காயத்ரியும் தமிழும் அவள் அறையில் படுக்க கைலாஷ் மொட்டை மாடிக்கு சென்று படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் தமிழ் ஆபிஸ் கிளம்பும்போது காயத்ரியை தன்னுடன் வருமாறு கேட்டாள் .ஆனால் காயத்ரி அதற்கு மறுத்துவிட்டாள். நீயே சென்று வா தமிழ் நான் வீட்டில் இருக்கிறேன் என்று கூறினாள்.
அவள் வழக்கம்போல் அலுவலகம் கிளம்பினாள். தனது அலுவல்களை கவனித்து கொண்டு இருந்தபோது கண்டிப்பாக இன்று அகிலன் வருவான் என்று நினைத்தாள் ஆனால் அவன் வரவில்லை.
பின் அடுத்தடுத்த வந்த நாட்களில் காயத்ரியும் கிளம்பி விட்டாள். பின் ஒரு
நாள் மாலை அகிலனிடமிருந்து கால் வந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்தவறே தமிழ் அதை எடுத்து பேசினாள்.
என்ன மேடம் எப்படி இருக்கீங்க என்ற கேட்டான். நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கள் என்று கூறினாள் அவள்.
ஓ ஓ...... அப்பொழுது நான் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறீர்கள் அல்லவா அதனால் தான் இவ்வளவு ஆசையாக கேட்கிறீர்களா என்று கேட்டான் அவன்..... அதற்குள் கற்பனைக்குள் போகிவிடாதீர்கள் சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லுங்கள் என்று கூறினாள் அவள்.
சரி சரி என்னிடம் கோபம் வேண்டாம் மேடம் நாளை கோவிலுக்கு செல்ல வேண்டும் காலையில் தயாராக இருங்கள் ....வந்து கூட்டிக் கொண்டு செல்கிறேன் என்ற கூறினான் அவன்...
அதற்கு அவள் இல்லை நான் வரமாட்டேன் என்று கூறினாள்.... சரி ஓகே அதையும் நாளைக்கு தான் பார்க்கலாமே என்று கூறி போனை கட் செய்தான் அவன்.
தமிழ் அடுத்த நாள் காலை ஆஃபீஸ் கிளம்பி கொண்டிருந்தாள். வழக்கமாக கிளம்புவதை விட சற்று அதிகமாக தன்னை அழகு படுத்திக் கொண்டாள். எதிர்பட்ட சமையல் அம்மா அவளிடம் இதையே கேட்கவும் இன்று கொஞ்சம் வெளியே வேலை இருக்கிறது என்று கூறி சமாளித்தாள் அவள்.
தனது அன்றாட அலுவல்களை பார்த்துக் கொண்டிருந்தபோது சொன்னது போலவே டைமுக்கு வந்து சேர்ந்தான் அகிலன்.... பார்க்கும்போது அவனுக்கே தெரிந்தது இவள் இன்று அதிகப்படியாக தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டது.
வந்தவன் சட்டென என்ன மேடம் கிளம்பலாமா.... அதற்கு அவள் எனக்கு இஷ்டமில்லை என்று தெரிந்தும் எப்படி இப்படி வற்புறுத்த தோன்றுகிறது என்று கேட்டாள். அதற்கு அவன் மேடம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இஷ்டம் இல்லாமல் எல்லாம் இல்லை உங்களுக்கு இஷ்டம் இருக்கிறது ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குறீர்கள். அதை வெளியே கொண்டு வருவதே என் நோக்கம் என்று கூறினான்.. அதற்கு அவள் எப்படி தன் மனதில் உள்ளதை அவனால் தெளிவாக படிக்க முடிகிறது என்று வியந்தாள்.... அவள் மனக்குறிப்பை முகத்தில் உணர்ந்தவன் அது எல்லாம் அப்படித்தான் மேடம் என்று கூறினான்.
சரி.... இப்பொழுது எதற்கு கோவிலுக்கு என்று கேட்டாள் அவள். என்ன மேடம்..... கடவுளை பார்க்க போக காரணம் தேவையா என்று திருப்பி பதில் அளித்தான் அவன்.... இதற்கு மேல் இவனிடம் பேச முடியாது என்று அவனுடன் கிளம்பினாள் தமிழ்....
கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு இடத்தில் அமர்ந்தார்கள் தமிழும் அகிலனும்.... சாமி தரிசனம் மிகவும் நன்றாக இருந்தது. சரி இப்பொழுதாவது சொல்லுங்கள் எனக்கு கோவிலுக்கு கூட்டி வந்தீர்கள் என்று கேட்டாள் தமிழ்..... அவன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்... அவள் அவன் கண்களை பார்த்ததும் அதில் முழுவதும் காதல் இருப்பது தெரிந்தது
...
மலரும்.....