Chitrasaraswathi
Well-Known Member
சஞ்சனாவின் மகேஸ் ன் விஷ்வதுளசி எனது பார்வையில். எழுத்தாளர் தனது முதல் கதை என்று பதிவு செய்துள்ளார். அழகான குடும்பம் அதில் சண்டை பிரிவு, காதல் , திருமணம் என்று ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை.
விஸ்வநாதன் என்ற பெயர் சொல்லும் மனிதரின் அன்பு மனைவி பார்வதி அவர்களின் மூன்று ஆண்மக்கள் ஒரு பெண் கோதை. மகள் கோதையின் கணவர் சிவராமன் அவரின் சிறுதடுமாற்றத்தால் மாமனாருடன் சண்டை போட்டு தப்பாக நினைத்து ஊரைவிட்டு மனைவி மகனுடன் வெளியேறுகிறார்.
மகளை பிரிந்த பெற்றோர் வருத்தத்தில் இருக்கின்றனர். கோதை அப்பாவிடம் கணவரை மன்னிப்பு கேட்க சொல்கிறார், ஆனாலும் அண்ணியின் கட்டாயத்தால் கணவருடன் செல்லும் கோதையும் 24
வருட பிரிவை எண்ணி வருந்துகிறார். இந்நிலையில் கோதையின் மகன் வினயக்காக தங்கை துளசி தாத்தா வீட்டிற்கு வந்து சமாதானம் செய்ய வருகிறாள். அதே நேரம் அவர்களின் பெற்றோரும் மன்னிப்பு கேட்க வருகிறார்கள். சில நெருடல்களுடன் குடும்பம் ஒன்று சேருகிறது. பாட்டி பார்வதி உடல்நிலை காரணமாக விஷ்வா மற்றும் துளசியின் திருமணம் அவசரமாக நடைபெறுகிறது. அந்த திருமணத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டார்களா, குடும்பம் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையை காப்பாற்றினரா என்பதை யதார்த்தமாக தந்துள்ளார். முதல் கதையை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் மகி.
விஸ்வநாதன் என்ற பெயர் சொல்லும் மனிதரின் அன்பு மனைவி பார்வதி அவர்களின் மூன்று ஆண்மக்கள் ஒரு பெண் கோதை. மகள் கோதையின் கணவர் சிவராமன் அவரின் சிறுதடுமாற்றத்தால் மாமனாருடன் சண்டை போட்டு தப்பாக நினைத்து ஊரைவிட்டு மனைவி மகனுடன் வெளியேறுகிறார்.
மகளை பிரிந்த பெற்றோர் வருத்தத்தில் இருக்கின்றனர். கோதை அப்பாவிடம் கணவரை மன்னிப்பு கேட்க சொல்கிறார், ஆனாலும் அண்ணியின் கட்டாயத்தால் கணவருடன் செல்லும் கோதையும் 24
வருட பிரிவை எண்ணி வருந்துகிறார். இந்நிலையில் கோதையின் மகன் வினயக்காக தங்கை துளசி தாத்தா வீட்டிற்கு வந்து சமாதானம் செய்ய வருகிறாள். அதே நேரம் அவர்களின் பெற்றோரும் மன்னிப்பு கேட்க வருகிறார்கள். சில நெருடல்களுடன் குடும்பம் ஒன்று சேருகிறது. பாட்டி பார்வதி உடல்நிலை காரணமாக விஷ்வா மற்றும் துளசியின் திருமணம் அவசரமாக நடைபெறுகிறது. அந்த திருமணத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டார்களா, குடும்பம் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையை காப்பாற்றினரா என்பதை யதார்த்தமாக தந்துள்ளார். முதல் கதையை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் மகி.