எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களுக்கும்..*

Advertisement

Eswari kasi

Well-Known Member
*மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களுக்கும்..*

*எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களுக்கும்..*

*இந்த பதிவு சமர்ப்பணம்..*
_________________________

பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் .. கூட்டத்தில் உள்ள ஒரு பெண்மணியை பார்த்து கேட்டார்.

*"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"*

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து .. நம்பிக்கையுடன் அமர்ந்தார்.
காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.

அவர் சந்தோஷமாகவே இருந்தார்.

ஆனால், அந்த மனைவி தெளிவாக கூறினார் ..

*"இல்லை"*

என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.

கணவர் அதிர்கிறார் ..

ஆனால், மனைவி தெளிவாக தொடர்கிறார் ..

ஆமாம் ..

*"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை"*
*"என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை"*

ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.

என்னையே சார்ந்தது.

நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."

"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.

அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்..

இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்..

இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்..

*"நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்"*

"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல் நிலை, தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், மன ஆரோக்கியம்.................... இன்னும் பல பல ............ இது ஒரு நீண்ட பட்டியல்...............................

*"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு"*

நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை ..

வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை ..

ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை ..

இன்னும் பல பல ..

"திருமணத்துக்கு முன்பும் சந்தோஷமாகத்தான் இருந்தேன்..
பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்..
என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்"

"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல..

நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."

"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.

இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.

அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.

*கைதட்டல் ஓயவே இல்லை*

*உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்*

வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ, உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்..

உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள்..

*சந்தோஷம் உள்ளே உள்ளது. வெளியில் இல்லவே இல்லை*

படித்ததில் பிடித்தது
 

Raksha

New Member
*மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களுக்கும்..*

*எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களுக்கும்..*

*இந்த பதிவு சமர்ப்பணம்..*
_________________________

பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் .. கூட்டத்தில் உள்ள ஒரு பெண்மணியை பார்த்து கேட்டார்.

*"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"*

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து .. நம்பிக்கையுடன் அமர்ந்தார்.
காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.

அவர் சந்தோஷமாகவே இருந்தார்.

ஆனால், அந்த மனைவி தெளிவாக கூறினார் ..

*"இல்லை"*

என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.

கணவர் அதிர்கிறார் ..

ஆனால், மனைவி தெளிவாக தொடர்கிறார் ..

ஆமாம் ..

*"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை"*
*"என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை"*

ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.

என்னையே சார்ந்தது.

நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."

"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.

அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்..

இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்..

இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்..

*"நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்"*

"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல் நிலை, தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், மன ஆரோக்கியம்.................... இன்னும் பல பல ............ இது ஒரு நீண்ட பட்டியல்...............................

*"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு"*

நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை ..

வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை ..

ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை ..

இன்னும் பல பல ..

"திருமணத்துக்கு முன்பும் சந்தோஷமாகத்தான் இருந்தேன்..
பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்..
என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்"

"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல..

நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."

"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.

இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.

அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.

*கைதட்டல் ஓயவே இல்லை*

*உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்*

வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ, உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்..

உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள்..

*சந்தோஷம் உள்ளே உள்ளது. வெளியில் இல்லவே இல்லை*

படித்ததில் பிடித்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top