ஹாய் கியூட்டிபாய்ஸ்
Sundayனாவே site ரொம்ப போர் அடிக்குது. யாரெல்லாம் இருக்கீங்க ஓடிவங்க {tension ஏத்தவே கூப்டுற}
19வது அத்தியாயத்திலிருந்து
இரவு சாப்பாட்டுக்காக அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க, சலீம் பாய் சமைத்தவைகளை கொண்டு வந்து வைக்க ஆயிஷாபேகம் சாப்பாடு பரிமாற, விஷ்வதீரன் அஜய்க்கு ஊட்ட ஆரோஹி விஜய்க்கு ஊட்ட தாத்தா தீரமணியும், திருமாறனும் வந்தமர பிங்கியும் வந்து சேர்ந்தாள்.
"விஷ்வா! எங்க டா முகுந்த்" தாத்தா தீரமணி கேள்வியை விஷ்வதீரனிடம் கேட்டாலும் பார்வை பிங்கியிடமே இருந்தது.
உள்அறையினுள் புகுந்தவன் சிறிது நேரத்திலேயே வெளியே வந்து பிங்கியிடம் எதுவுமே சொல்லாது அறையிலிருந்து வெளியேறி இருந்தான். திருமாறன் அவளிடம் தான் கேக்கிறார் என்று நன்றாகவே புரிந்தாலும், "சொல்லிக்கொள்ளாமல் சென்றவன் எங்கே சென்றான் என்று மை போட்டு பாக்காவா முடியும்" என்று நொடித்துக் கொண்டவள் அவரை பார்க்காமல் தலை தாழ்த்தி "இப்போ நான் உக்காந்து சாப்பிடணுமா? பனமரம் வரும் வரைக்கும் வெயிட் பண்ணனுமா?" என்று யோசிக்க
விஷ்வதீரன் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் வெளியே சென்றவன் மீது கோபம் வர உடனே தீரமுகுந்தனுக்கு அழைக்க அவன் உள்ளே நுழைந்தான்
"எங்கடா போன?" விஷ்வதீரன் குரலை உயர்த்த
"என் பொண்டாட்டிக்கு இத வாங்க போனேன்" என்று ஒரு பையை தூக்கிக் காட்ட அதில் பழங்கள் இருக்கவே "இவன் பொழச்சிக்குவான்" என்று அனைவரும் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள பிங்கி அவனை விழிவிரித்து காதல் கசிய பார்க்க அவன் அடுத்து கூறியதில் கோவம் கணக்க முறைத்தாள்.
"ரொம்ப குண்டா இருக்கா இன்னைல இருந்து பழம் மட்டும் சாப்பிடட்டும்" தீரன் நக்கலாக சொல்லியவாறே பழப்பையை பிங்கியின் கையில் வைக்க
"உனக்கு உன் வாய் தான் எமன்" என்று வாசலிருந்து எட்டிப்பார்த்த ஸ்கூபி அவனை பாவமாக பார்த்தது.
*********************************************
"சரி வாங்க வதனியவாச்சும் அலங்காரம் பண்ணலாம்" என்று உள்ளே நுழைய அவளும் குளித்து விட்டு வர, அலங்காரம் செய்தவாறே புஷ்பா அறிவுரை என்ற பெயரில் பிங்கியை வாட்டி வதைக்க
"ஒன்னு பண்ணுமா என் கூடயே நீயும் வந்து எங்க அறைல தங்கிக்கோ" கடுப்பில் சொல்ல
பிங்கியின் தலையில் கொட்டிய புஷ்பா "பாத்தீங்களாக்கா இவ பேசுறத இப்படித்தான் ஏடாகூடமா பேசி வம்ப வளக்குறா" புஷ்பா கடிய
ஆயிஷா சிரித்தவாறே "பிங்கி சின்ன பொண்ணில்லயே பாத்து சூதானமா நடந்துக்குவா" என்று பால் செம்போடு அவளை தீரமுகுந்தனின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
*************************************************
அவளது பார்வையை கண்டு உள்ளுக்குள் நகைத்தவன் "இப்படி பச்சயா சைட் அடிக்கிறா. நான் கேட்டா மட்டும் ஆயிரம் கத சொல்லுவா, நான் கட்டில்ல உக்காந்ததுக்கே மேடம் எழுந்து நின்னு கிட்டாங்க இதுல பெட்ல படுத்தா கத்தி ஊரையே கூப்பிடுவா. எதுக்கு வம்பு " என்று நினைத்தவன் அலுமாரியை திறந்து ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு சோபாவை நோக்கி நடக்க
அவனோடு ஒரே அறையில் ஒரே கட்டிலில் என்று அஞ்சியவள் அவனை கண்டு எழுந்து கொண்டாலும் இப்படி இருந்தா குழந்தைகள் கேள்வி மேல் கேள்வி கேப்பார்கள் என்று தோன்ற
"விஷ் எங்க போற?"
"தூங்க போறேன். காலைல நிறைய வேல இருக்கு" என்றவன் நிக்காது சோபாவில் படுத்து போர்வையை போத்த, அதை இழுத்திருந்தாள் ஆரோஹி.
"என்ன பண்ணுற?" விஷ்வதீரன் எழுந்தமர்ந்தவாறே போர்வையை இழுக்க அதை எதிர்பார்க்காத ஆரோஹி அவன் மடியில் விழுந்திருந்தாள்.
Sundayனாவே site ரொம்ப போர் அடிக்குது. யாரெல்லாம் இருக்கீங்க ஓடிவங்க {tension ஏத்தவே கூப்டுற}
19வது அத்தியாயத்திலிருந்து
இரவு சாப்பாட்டுக்காக அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க, சலீம் பாய் சமைத்தவைகளை கொண்டு வந்து வைக்க ஆயிஷாபேகம் சாப்பாடு பரிமாற, விஷ்வதீரன் அஜய்க்கு ஊட்ட ஆரோஹி விஜய்க்கு ஊட்ட தாத்தா தீரமணியும், திருமாறனும் வந்தமர பிங்கியும் வந்து சேர்ந்தாள்.
"விஷ்வா! எங்க டா முகுந்த்" தாத்தா தீரமணி கேள்வியை விஷ்வதீரனிடம் கேட்டாலும் பார்வை பிங்கியிடமே இருந்தது.
உள்அறையினுள் புகுந்தவன் சிறிது நேரத்திலேயே வெளியே வந்து பிங்கியிடம் எதுவுமே சொல்லாது அறையிலிருந்து வெளியேறி இருந்தான். திருமாறன் அவளிடம் தான் கேக்கிறார் என்று நன்றாகவே புரிந்தாலும், "சொல்லிக்கொள்ளாமல் சென்றவன் எங்கே சென்றான் என்று மை போட்டு பாக்காவா முடியும்" என்று நொடித்துக் கொண்டவள் அவரை பார்க்காமல் தலை தாழ்த்தி "இப்போ நான் உக்காந்து சாப்பிடணுமா? பனமரம் வரும் வரைக்கும் வெயிட் பண்ணனுமா?" என்று யோசிக்க
விஷ்வதீரன் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் வெளியே சென்றவன் மீது கோபம் வர உடனே தீரமுகுந்தனுக்கு அழைக்க அவன் உள்ளே நுழைந்தான்
"எங்கடா போன?" விஷ்வதீரன் குரலை உயர்த்த
"என் பொண்டாட்டிக்கு இத வாங்க போனேன்" என்று ஒரு பையை தூக்கிக் காட்ட அதில் பழங்கள் இருக்கவே "இவன் பொழச்சிக்குவான்" என்று அனைவரும் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள பிங்கி அவனை விழிவிரித்து காதல் கசிய பார்க்க அவன் அடுத்து கூறியதில் கோவம் கணக்க முறைத்தாள்.
"ரொம்ப குண்டா இருக்கா இன்னைல இருந்து பழம் மட்டும் சாப்பிடட்டும்" தீரன் நக்கலாக சொல்லியவாறே பழப்பையை பிங்கியின் கையில் வைக்க
"உனக்கு உன் வாய் தான் எமன்" என்று வாசலிருந்து எட்டிப்பார்த்த ஸ்கூபி அவனை பாவமாக பார்த்தது.
*********************************************
"சரி வாங்க வதனியவாச்சும் அலங்காரம் பண்ணலாம்" என்று உள்ளே நுழைய அவளும் குளித்து விட்டு வர, அலங்காரம் செய்தவாறே புஷ்பா அறிவுரை என்ற பெயரில் பிங்கியை வாட்டி வதைக்க
"ஒன்னு பண்ணுமா என் கூடயே நீயும் வந்து எங்க அறைல தங்கிக்கோ" கடுப்பில் சொல்ல
பிங்கியின் தலையில் கொட்டிய புஷ்பா "பாத்தீங்களாக்கா இவ பேசுறத இப்படித்தான் ஏடாகூடமா பேசி வம்ப வளக்குறா" புஷ்பா கடிய
ஆயிஷா சிரித்தவாறே "பிங்கி சின்ன பொண்ணில்லயே பாத்து சூதானமா நடந்துக்குவா" என்று பால் செம்போடு அவளை தீரமுகுந்தனின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
*************************************************
அவளது பார்வையை கண்டு உள்ளுக்குள் நகைத்தவன் "இப்படி பச்சயா சைட் அடிக்கிறா. நான் கேட்டா மட்டும் ஆயிரம் கத சொல்லுவா, நான் கட்டில்ல உக்காந்ததுக்கே மேடம் எழுந்து நின்னு கிட்டாங்க இதுல பெட்ல படுத்தா கத்தி ஊரையே கூப்பிடுவா. எதுக்கு வம்பு " என்று நினைத்தவன் அலுமாரியை திறந்து ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு சோபாவை நோக்கி நடக்க
அவனோடு ஒரே அறையில் ஒரே கட்டிலில் என்று அஞ்சியவள் அவனை கண்டு எழுந்து கொண்டாலும் இப்படி இருந்தா குழந்தைகள் கேள்வி மேல் கேள்வி கேப்பார்கள் என்று தோன்ற
"விஷ் எங்க போற?"
"தூங்க போறேன். காலைல நிறைய வேல இருக்கு" என்றவன் நிக்காது சோபாவில் படுத்து போர்வையை போத்த, அதை இழுத்திருந்தாள் ஆரோஹி.
"என்ன பண்ணுற?" விஷ்வதீரன் எழுந்தமர்ந்தவாறே போர்வையை இழுக்க அதை எதிர்பார்க்காத ஆரோஹி அவன் மடியில் விழுந்திருந்தாள்.